Screen Reader Access     A-AA+
அருள்மிகு இராமசாமி திருக்கோயில், கும்பகோணம் நகர், Kumbakonam - 612001, தஞ்சாவூர் .
Arulmigu Ramaswamy Temple, Kumbakonam Town, Kumbakonam - 612001, Thanjavur District [TM018048]
×
Temple History

தல வரலாறு

கி.பி.1614 முதல் 1640 வரை தஞ்சையை ஆண்டு வந்த நாயக்க மன்னரான இரகுநாத நாயக்கர் ஒரு சிறந்த இராம பக்தர். இவரது அமைச்சராக சிறந்து விளங்கியவர் கோவிந்த தீட்சிதர் என்பவர். இவரை கோவிந்த அய்யன் என்றும் அழைப்பது உண்டு. குடந்தையில் உள்ள அய்யன் தெரு, தஞ்சையில் உள்ள அய்யன் குளம், குடந்தைக்கு அருகில் உள்ள அய்யம்பேட்டை முதலானவை இவரால் அமைக்கப் பற்றவையேயாகும். அவற்றுள் ஒன்றுதான் குடந்தை அருள்மிகு இராமசாமி திருக்கோயிலாகும். இப்பெருமைமிகு நாயக்க மன்னர் குடந்தைக்கு மேற்கிலுள்ள தாராசுரத்தில் ஒரு குளம் வெட்டினார். அந்தகுளம் வெட்டும் போது ஸ்ரீராமன், சீதை வடிவங்கள் கிடைத்தன. இது ராம பக்தரான இரகுநாத நாயக்கருக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது. அதன் பயனே திருக்குடந்தையில் அருள்மிகு இராமசாமி...

தல பெருமை

ஸ்ரீயபதியான பரந்தாமன் இப்பூவுலகில் பல இடங்களில் கோயில் கொண்டிருக்கிறான். அவற்றுள் தலத்தினாலும், தீர்த்தத்தினாலும் பெருமை கொண்டது திருக்குடந்தை மாநகர். நலத்தால் மிக்கார் குடந்தை எனவும், திசையில் வீசும் செழுமாமணிகள் சேரும் திருக்குடந்தை எனவும் ஆழ்வார்களால் போற்றப்படுகிறது. பிரம்மா முதலிய தேவாதி தேவர்களும் பூஜித்த தலம் இது. திருமால் இந்நன்னகரில் சாரங்கபாணியாகவும், சக்கரபாணியாகவும், கோதண்டபாணியாகவும் காட்சியளிக்கின்றனர்.