Arulmigu Mariyamman Temple, Ozhugaimangalam, Erukkatancherri - 609307, Mayiladuthurai District [TM018059]
×
Temple History
தல வரலாறு
நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறையில் இருந்து தென் கிழக்கே சுமார் 30 கிமீ தொலைவிலும், தரங்கம்பாடியில் இருந்து மேற்கே 2 கிமீ தொலைவிலும் சிதம்பரம்-வேளாங்கண்ணி சாலை அருகில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.ஒழுகைமங்கலம் என பெயர் வரக் காரணம் அம்மாள் உலக மக்கள் நலம் பெற வேண்டி தவமிருந்து அருள் வழங்கும் தலமாதலால் உலகமங்கலம் என வழங்கப்பட்டு அதுவே மருவிஒழுகைமங்கலம் என அழைக்கப்படுகிறது.மாரியம்மன் சுமார் 1500 வருடங்களுக்கு முன்பு சுயம்புவாகத் தோன்றியவளாம் பசும் பால் சொரிந்து , பூமியில் அம்மன் இருப்பது தெரிந்ததால் , ஊருக்கு ஒழுகைமங்கலம் என பெயர் அமைந்ததாக சொல்கின்றனர்.ஆடி பெருக்கு நாளில் , கோயிலுக்கு அருகில் உள்ள மகிமலையாற்றில் தீர்த்தவாரி வைபவம் நடைபெறும். உற்சவரான...நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறையில் இருந்து தென் கிழக்கே சுமார் 30 கிமீ தொலைவிலும், தரங்கம்பாடியில் இருந்து மேற்கே 2 கிமீ தொலைவிலும் சிதம்பரம்-வேளாங்கண்ணி சாலை அருகில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.ஒழுகைமங்கலம் என பெயர் வரக் காரணம் அம்மாள் உலக மக்கள் நலம் பெற வேண்டி தவமிருந்து அருள் வழங்கும் தலமாதலால் உலகமங்கலம் என வழங்கப்பட்டு அதுவே மருவிஒழுகைமங்கலம் என அழைக்கப்படுகிறது.மாரியம்மன் சுமார் 1500 வருடங்களுக்கு முன்பு சுயம்புவாகத் தோன்றியவளாம் பசும் பால் சொரிந்து , பூமியில் அம்மன் இருப்பது தெரிந்ததால் , ஊருக்கு ஒழுகைமங்கலம் என பெயர் அமைந்ததாக சொல்கின்றனர்.ஆடி பெருக்கு நாளில் , கோயிலுக்கு அருகில் உள்ள மகிமலையாற்றில் தீர்த்தவாரி வைபவம் நடைபெறும். உற்சவரான சீதளா பரமேஸ்வரி , காத்தவராயன் , பேச்சியம்மன் , கருப்பன் ஆகியோர் தனிசன்னதிகளில் காட்சி தருகின்றார். கோயிலின் தீர்த்தக் குளத்தில் , சர்க்கரை மற்றும் உப்பு கரைத்து பிரார்த்தித்தால் , உடலில் உள்ள கட்டி போன்றவையும் மனக் கஷ்டங்களும் விரைவில் கரைந்து காணாமல் போகும் கோயிலின் வேப்பமரத்தில் மஞ்சள் சரடு கட்டி வழிபட்டால் கல்யாண வரம் கைக்கூடும் , தொட்டில் கட்டி பிரார்த்தித்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இத்திருக்கோயில் 2004 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 04 ம் தேதி குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.