Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், Thiruvidaikazhi - 609310, மயிலாடுதுறை .
Arulmigu Subramaniya Swamy Temple, Thiruvidaikazhi - 609310, Mayiladuthurai District [TM018061]
×
Temple History

தல வரலாறு

தலவரலாறு திருச்செந்தூர் சூரனை வதம் செய்வதற்கான பணியில் இருந்தார் முருகப்பெருமான். அப்போது சூரனின் இரண்டாவது மகன் ஹிரண்யாசுரன், பித்ரு கடன் செய்ய வேண்டி போரில் இருந்து பின் வாங்கி, தரங்கம்பாடி கடலில் மீன் உருவம் எடுத்து மறைந்தான். இதையறிந்த முருகப்பெருமான், அவனைத் தேடிப்பிடித்து சம்ஹாரம் செய்தார். ஹிரண்யாசுரன் சிறந்த சிவபக்தன் என்பதால், அவனைக் கொன்ற முருகப்பெருமானுக்கு பாவம் உண்டானது. அந்தப் பாவத்தில் இருந்து விமோசனம் அடைவதற்காக தரங்கம்பாடி அருகில் உள்ள சிவாலயத்தின் குரா மரத்தடியில் அமர்ந்து தவம் இயற்றினார். இதையடுத்து அவருக்கு பாவ விமோசனம் கிடைத்தது. தன் மகனான குமரனை, இந்தத் தலத்திலேயே இருந்து அருள்புரியும்படி சிவபெருமான் கேட்டுக் கொண்டார். மேலும் அவருக்கு பின்புறத்திலேயே தானும் அமர்ந்தார் என்பது தல வரலாறு. ஹிரண்யாசுரனை கொன்ற...

தல பெருமை

ஸ்தல வரலாறு மயிலாடுதுறை மாவட்டம் , தரங்கம்பாடி வட்டம் , திருவிடைக்கழி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் , திருக்கடையூர் ஸ்தலத்திற்கு தென்மேற்கிலும் , தில்லையடி (வள்ளியம்மை நகர்) ஸ்தலத்திற்கு மேற்கிலும் அமைந்துள்ளது. முற்காலங்களில் சோழ நாட்டு திருச்செந்தூர் என போற்றப்பட்டதும் , தற்காலங்களில் திருக்குராவடி என போற்றப்படுகின்றது . அருணகிரி நாதர் சுவாமிகள் திருப்புகழும் ,சேந்தனார் சுவாமிகள் திருவிசைப்பாவும் போற்றி பாடிய ஸ்தலம் ,...