திருவிடைக்கழியில் அருணகிரிநாதர் திருப்புகழும் , சேந்தனார் திருவிசைப்பாவும் பாடிய ஸ்தலம் . சேந்தனார் முக்தி பெற்ற ஸ்தலம் . திருச்செந்தூரிலே சூரனை வதை செய்து அழித்தபின் சூரனுடைய இரண்டாவது குமரன் இரண்யசூரனை வதை செய்து அழித்தனதால் பாவதோஷம் ஏற்பட முருகனுக்கு தோஷம் நீங்க திருவிடைக்கழியில் சிவனை பூஜை செய்து வழிபட்டதனால் தோஷம் நீங்கியதாக வரலாறு . முருகன் முன்னாடியும் , இவருக்கு பின்னால் சிவன் சற்று வட மேற்கில் ஒதுங்கி கிழக்கு பார்த்து விளங்கு கின்றார்கள் . பஞ்சமூர்த்திகளும் சுப்பிரமணியர் சொரூபமாக விளங்க கூடிய ஒரே ஸ்தலம் ஆகும் . ...