Arulmigu Sitrampala Nadiyar Temple, Sitharkadu - 609003, Mayiladuthurai District [TM018209]
×
Temple History
தல வரலாறு
சைவஞான பரம்பரை ஆசாரிய மரபு, சந்தான மரபு என இரு வகைப்படும். சமயாச்சாரியார்களும், சந்தனாச்சாரியார்களும் சைவ சமயத்தை இவ்வுலகில் நிலைபெறச் செய்த பெருமைக்குரியவர்கள். இவர்களில் சந்தனாச்சாரியர்கள் திருமரபு இந்நாட்டில் சைவ ஆதீனங்களாக விளங்கி சைவ சமய உண்மைகளை மக்களுக்கு உணர்த்தி நன்னெறிப்படுத்தி வருகின்றது. திருக்கயிலாய மலையிலே எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகண்ட பரமசிவனிடத்தில் உபதேசம் பெற்றவர் திருநந்திதேவர். திருநந்திதேவரிடம் உபதேசம் பெற்றவர் சனகர், சனந்தநர், சனாதநர், சனற்குமாரர் என்னும் சனகாதிநால்வர், சனற்குமாரரிடம் உபதேசம் பெற்றவர் சத்தியஞான தரிசினிகள். சத்தியஞான தரிசினிகள் உபேதசம் பெற்றவர் பரஞ்சோதி மாமுனிவர். திருந்நதிதேவர், சனற்குமாரர், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதி மாமுனிகள் ஆகிய நால்வரும் கயிலாய வாசிகள், தேவபரம்பரை, அகச்சந்தானம் எனப் பெயர் பெற்றவர்கள். திருக்கயிலாயத்தில் உபதேசம் பெற்ற பரஞ்சோதி முனிவர் ஒரு...சைவஞான பரம்பரை ஆசாரிய மரபு, சந்தான மரபு என இரு வகைப்படும். சமயாச்சாரியார்களும், சந்தனாச்சாரியார்களும் சைவ சமயத்தை இவ்வுலகில் நிலைபெறச் செய்த பெருமைக்குரியவர்கள். இவர்களில் சந்தனாச்சாரியர்கள் திருமரபு இந்நாட்டில் சைவ ஆதீனங்களாக விளங்கி சைவ சமய உண்மைகளை மக்களுக்கு உணர்த்தி நன்னெறிப்படுத்தி வருகின்றது. திருக்கயிலாய மலையிலே எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகண்ட பரமசிவனிடத்தில் உபதேசம் பெற்றவர் திருநந்திதேவர். திருநந்திதேவரிடம் உபதேசம் பெற்றவர் சனகர், சனந்தநர், சனாதநர், சனற்குமாரர் என்னும் சனகாதிநால்வர், சனற்குமாரரிடம் உபதேசம் பெற்றவர் சத்தியஞான தரிசினிகள். சத்தியஞான தரிசினிகள் உபேதசம் பெற்றவர் பரஞ்சோதி மாமுனிவர். திருந்நதிதேவர், சனற்குமாரர், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதி மாமுனிகள் ஆகிய நால்வரும் கயிலாய வாசிகள், தேவபரம்பரை, அகச்சந்தானம் எனப் பெயர் பெற்றவர்கள். திருக்கயிலாயத்தில் உபதேசம் பெற்ற பரஞ்சோதி முனிவர் ஒரு சமயம் கயிலையிலிருந்து பொதிகை மலைக்கு அகத்திய முனிவரைக் காண வான் வழியாகச் சென்ற போது, திருவெண்ணெய்நல்லுாரில் குழந்தையாக இருந்த சுவேதனப்பெருமாள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்ததும் பரஞ்சோதி முனிவரின் வான்வழிப்பயணம் தடைபட்டது. உடனே கீழே பார்த்தார். விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் கண்ணுற்றாா். அது உபதேசம் பெறுவதற்கான பக்குவ நிலையோடு இருப்பதை உணர்ந்தார். உடன் மண்ணில் இறங்கி குழந்தைக்கு திருநோக்க தீட்சையையும், சிவஞான உபதேசமும் செய்வித்து தமது ஆசிரியரின் பெயர் நினைவாக மெய்கண்டார் எனத் திருநாமம் இட்டு வான்வழிப் பயணத்தைத் தொடர்ந்தார். பரஞ்சோதி முனிவரிடம் உபதேசம் பெற்றவர் மெய்கண்டார். மெய்கண்டாரிடம் உபதேசம் பெற்றவர் அருணந்தி சிவம். அருணந்தி சிவத்திடம் உபதேசம் பெற்றவர் மறைஞான சம்பந்தர். மறைஞான சம்பந்தரிடம் உபதேசம் பெற்றவர் உமாபதிசிவம். மெய்கண்டார், அருணந்தி சிவம், மறைஞான சம்பந்தர், உமாபதிசிவம் ஆகிய நால்வரும் பூவுலக வாசிகள், பூதபரம்பரை, புறச்சந்தானம் எனப்பெயர் பெற்றவர்கள். உமாபதி சிவாச்சாரியார் மாணக்காருள் சிறப்பானவர் முதலில் அவருடன் ஒரு சாலை மாணாக்கராயிருந்து பின் அவரிடம் உபதேசம் பெற்று வாழ்ந்த அருள் நமச்சிவாயர் எனும் மச்சுச் செட்டியார். இவருைடய முதல் மாணாக்கர் காழிக்கங்கை மெய்கண்டார். இவரின் மாணாக்கர் 14-ஆம் நுாற்றாண்டில் ஒப்பற்ற ஞானாசிரியராக விளங்கிய ஸ்ரீ காழி சிற்றம்பலநாடிகள் ஆவார். ஸ்ரீ காழி சிற்றம்பலநாடிகள் மிகப்பெரிய சித்தர். சிற்றம்பலத்தில் தனது நாட்டத்தினைக் கொண்டு எந்நேரமும் சிற்றம்பலத்தையே நாடி இருந்தமையால் சிற்றம்பலநாடியார் எனப் பெயர் வரப்பெற்றார். சைவ உலகினைப் பொருத்தவைர நாடிகள் என்ற பெயர் இவருக்கு மட்டுமே என்பது தனிச் சிறப்பாகும். இவருடைய திருக்கூட்டமும் மிகப்பெரியது. இவருடன் 64 சீடர்கள் மற்றும் நிறைய மாணாக்கர்களும் உண்டு. சிவானுபூதிமான்களாகிய இத்திருக்கூட்டத்தார் கெளரி மாயூரம் எனும் மயிலாடுதுறைக்கு மேற்கில் காவேரித் தீரவாசம் செய்து கொண்டு சிவானந்த நிட்டையில் எழுந்தருளியிருந்த தங்கள் குருவுடன் குரு, லிங்க, சங்கம வழிபாடு நடத்திக் கொண்டு வந்தனர்.சிற்றம்பலநாடிகளும் அவர்தம் சீடர்களும் ஒருநாள் உணவருந்த அமர்ந்தனர். உணவு பரிமாறிய பணியாளர் கவனக்குறைவினாலே வேப்பெண்ணையைக் கொண்டு வந்து நெய்யென்று வைத்திட தவசிப்பிள்ளை அதனை உண்கலத்தில் படைத்துவிட்டார். சிற்றம்பலநாடிகளும் மற்ற அடியார்களும் வேற்றுமையுணர்ச்சி சிறிதுமின்றி உண்ண, கண்ணப்பர் என்பவர் மட்டும் வேப்பெண்ணெய் என உணர்ந்தார். இது கண்ட சிற்றம்பலநாடிகள் நம் திருக்கூட்டத்தில் பக்குவம் இல்லாதவர் இருப்பது தகுதியாே எனக் கேட்டு அவிச்சுவை அறிவான் தவச்சுவை அறியான் எனக் கூறினார். இதனைக் கேட்ட கண்ணப்பர் மனம் மிக வருந்தி திருக்கூட்டத்திலிருந்து தாமே நீங்கி வடக்கு நோக்கிச் சென்று விட்டார். சில காலம் கழிந்த பின்னர் சிற்றம்பலநாடிகள் ஜீவ சமாதியடைய எண்ணம் கொண்டு அடுத்த சித்திரை திருவோண விண்மீனில் தாமும் தம் திருக்கூட்டத்தினரும் சமாதியில் இறங்குவதாக நாட்டை ஆட்சி செய்த அரசனுக்கு அறிவித்து அனைவருக்கும் தனித்தனியே 63 நிலவறைகள் அமைத்துத் தருமாறு கட்டளையிட்டார். சமாதிகள் தயாரானவுடன் உலகோர் இவ்வற்புதத்தினைக் காண வந்து கூடினர். குறித்த நேரத்தில் சிற்றம்பலநாடிகள் ஏக காலத்தில் 63 சீடர்களுக்கும் சாம்பவ தீக்கையாற் சத்தியோ நிர்வாண தானம் செய்து, அவர்களை ஆசீர்வதித்து முன்று வெண்பாக்கள் பாடி நிட்டையில் அமர்நதார். சீடர்கள் அவரை வணங்கி ஒவ்வொரு வெண்பாப் பாடி தமக்கு அமைத்திட்ட குழியில் இறங்கி அவர் திருவடியில் மனம் ஒன்றச் செய்து சமாதி கூடிவிட்டார்கள். அந்நேரம் வடக்கே சென்ற கண்ணப்பர் அங்கு வந்து தமக்கோா் சமாதி அமைக்கப் பெறாமைம கண்டு வருந்தி சிற்றம்பலநாடிகள் சமாதியை வலம் வந்து வணங்கி தமக்கோர் இடம் தருமாறு குறையிரந்து பின்வரும் பாடலைப் பாடினார். ஆண்டகுரு சிற்றம்பலவா அடியேற்கா மீண்டும் எழுந்தருள வேண்டாவோ-நீண்டமால் ஆரணனும் காணாத ஆனந்த வாரிதியைப் பூரணமாய் வையாத போது. - வெண்பா -42. உடன் சிற்றம்பல நாடிகள் சமாதி திறந்து அடிகள் கண் விழித்து நோக்கி கண்ணப்பரைத் தழுவி தம்மடியில் இருத்தி தம்மோடு இரண்டறக் கலக்க செய்தார். இவ்வற்புத நிகழ்வு நடந்த இடம் தற்பொழுது தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறை நகருக்கு மேற்கே சித்தர்காடு எனும் ஊராக இருந்து வருகிறது. இவ்வூரில் சிற்றம்பலநாடிகள் தமது அறுபத்து முன்று சீடர்களுடன் ஏக கால ஜீவ சமாதி அடைந்திட்ட இடமே கோயிலாக அமைந்துள்ளது. இதற்கு அடையாளமாக தெட்சிணாமுர்த்தி சுவாமி அருகில் கருவறையைச் சுற்றி 63 சிவலிங்க உருவங்கள் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வற்புதத்தினை பின்வரும் பாடல் முலமும் அறிந்து கொள்ள இயலும். முத்தர் அறுபத்துமுவர் பணிந்தேத்தும் சித்தர்வனத் தில்லைச் சிற்றம்பலவா-பத்தர் பவ விருளை நீக்கியருள் பானுவே துய்ய தவ வடிவே நின்தாள் சரண். சிற்றம்பலநாடிகள் துகளறு போதம் செல்கலத் திரங்கல், வருங்காலத் திரங்கல், நிகழ்காலத் திரங்கல், திருப்புன்முறுவல் ஆகிய நுால்களை செய்துள்ளார். இவற்றுள் துகளறுபோதம் முதன்மையான நுாலாகும். பொதுவாக ஏதேனும் ஒரு ஆலயத்தில் ஒரு மகானின் சமாதியோ அல்லது ஞானியின் ஜீவசமாதியாே இருந்திட்டாலே அவ்வாலயம் மிக்க சிறப்புற்றிருக்கும். ஆனால் இவ்வாலயத்தில் ஏக காலத்தில் சிற்றம்பலநாடிகள் மற்றும் அவர்தம் சீடர்கள் அறுபத்து முவர் ஜீவ சமாதி அடைந்திருப்பதால் இதன் சிறப்பு சொல்லிப் புரியத்தேவையில்லை. பக்குவப்படுத்தி உடலில் உயிரை நிலைக்கச் செய்து தீட்சை அளித்த ஆற்றல் படைத்தவர் என்பால் இவ்வாலயத்தை நாடி வருகின்றவர்களுக்கும் பக்குவநிலையை உணர்ததுகிறார் என்பது உண்மையாகும். மனிதன் நிலை தடுமாறி நிம்மதி இழந்து குழப்பமும், கொந்தளிப்பும், சோதனைகளும், வேதனைகளும் சேர்ந்து தாக்கிடக் காப்பாரும், மீட்பாரும் இன்றி கடும் சூறாவளியில் சிக்கிய பயிர் போல தத்தளிக்கும் போது மனிதன் தனக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று உள்ளது என்பதை அக்கணம் தான் உணர முற்படுகிறான்.