Arulmigu Padithurai Viswanathar Temple, Mayiladuthurai - 609001, Mayiladuthurai District [TM018213]
×
Temple History
தல வரலாறு
மயிலாடுதுறை மாவட்டம் (ம) வட்டம், பாலக்கரை, அருள்மிகு படித்துறை விஸ்வநாதர் திருக்கோயிலானது காசிக்கு சமமான ஷேத்திரம் ஆயிரம் ஆனாலும் மாயுரம் போல் ஆகாது. காசிக்கு சென்று பக்தர்கள் யாவரும் தனது பாவங்களை போக்க மூன்று நதிகளில் நீராடி விமோச்சனம் செய்துக்கொண்டனர் அதில் முக்கிய நதிகளாக கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகும். இந்த நதிகளால் அந்த பாவத்தை தாளமுடியாமல் தனது சௌந்தரிய தேகத்தை இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த போது கௌதம ரிஷியிடம் இதைப்பற்றி வினவினர் அப்போது சுதபுறம் என்று சொல்லக்கூடிய திருமயிலாடுதுறை என்னும் ஷேத்திரத்தில் காவேரியில் தென்பால் படித்துறையோடு ஒரு சிவாலயத்தை நிர்மாணம் சேவிக்கப்பட்டு கங்கையை பூஜை ஆராதணை செய்விக்க சொன்னார் அது போல் இவ்வாலையத்தில்...மயிலாடுதுறை மாவட்டம் (ம) வட்டம், பாலக்கரை, அருள்மிகு படித்துறை விஸ்வநாதர் திருக்கோயிலானது காசிக்கு சமமான ஷேத்திரம் ஆயிரம் ஆனாலும் மாயுரம் போல் ஆகாது. காசிக்கு சென்று பக்தர்கள் யாவரும் தனது பாவங்களை போக்க மூன்று நதிகளில் நீராடி விமோச்சனம் செய்துக்கொண்டனர் அதில் முக்கிய நதிகளாக கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகும். இந்த நதிகளால் அந்த பாவத்தை தாளமுடியாமல் தனது சௌந்தரிய தேகத்தை இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த போது கௌதம ரிஷியிடம் இதைப்பற்றி வினவினர் அப்போது சுதபுறம் என்று சொல்லக்கூடிய திருமயிலாடுதுறை என்னும் ஷேத்திரத்தில் காவேரியில் தென்பால் படித்துறையோடு ஒரு சிவாலயத்தை நிர்மாணம் சேவிக்கப்பட்டு கங்கையை பூஜை ஆராதணை செய்விக்க சொன்னார் அது போல் இவ்வாலையத்தில் கங்கை அம்மன் பூஜை மூர்த்தம் காணப்படுவது மிக சிறப்பு.
ஐப்பசி மாதம் அம்மாவாசை அன்று சிறப்பு தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. மேலும் இத்திருத்தலத்திற்கு இந்திரன் கங்கையோடு வந்ததால் இந்திரனாலும் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம் ஆகும். காசியில் உள்ள விநாயர் பெருமான், கங்கை அம்மன், சனிபகவான் ஆகியோர் ஒரே வரிசையில் நின்று கர்மா ஆயுளை சரிசெய்வதாக இருக்க கூடிய அதே அம்சத்தை பொருந்திய இவ்வாலையம். இவ்வாலையத்தில் மங்கள சனிபகவான் கிழக்கு நோக்கியும், நவகிரகத்தில் உள்ள சனிபகவான் மேற்கு நோக்கியும் இருப்பதால் கண்ணாடி போன்று முக்காலத்திலும் மங்களத்தையே தரக்கூடிய ஷேத்திரமாக விளங்கி வருகிறது. மேலும் சனி கிழமைகளில் விஷேச பூஜைகள் நடைபெறுவதால் ஆயுள், கீர்த்தி மற்றும் சகலசெல்வங்களும் தந்து அருள்பாலிக்கிறார்.