இத்திருக்கோயில் மயிலாடுதுறை மாவட்டம் (ம) வட்டம், பாலக்கரையில் காவேரி நதிக்கரையின் தெற்கு திசையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு அருள்மிகு விசாலாட்சி சமேத படித்துறை விஸ்வநாதர் சுவாமியாக காட்சியளிக்கிறார். மேலும் இத்திருக்கோயிலில் பால விநாயகர், தெட்சணாமூர்த்தி, மகா கணபதி, சுப்ரமணியர், கெஜலெட்சுமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், காலபைரவர், சூரியன் மற்றும் மங்கள சனி பகவான் சன்னதிகள் உள்ளன. இத்திருக்கோயிலில் முக்கிய திருவிழாக்களாக ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, சனி, குரு, ராகுகேது பெயர்ச்சிகள் போன்ற திருவிழாக்கள் நடைபெறுகிறது.