அருள்மிகு ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயில், காஞ்சிபுரம் - 631502, காஞ்சிபுரம் .
Arulmigu Adhipeeda Parameshwari Temple, Kancheepuram - 631502, Kancheepuram District [TM001825]
×
Temple History
தல பெருமை
ஆதிகாமாட்சியின் தோற்றம் (ம) இத்திருக்கோயிலின் வரலாறு குறித்து கல்வெட்டில் விரிவாக கூறப்பட்டுள்ளது.கயிலாயத்தில் சிவபெருமானின் இருகண்களை பார்வதி தன்னுடைய கரங்களினால் பொத்தியதால்,பூலோகம் இருண்டு பாவம் பெருகி கருமை நிறமாக மாறி அன்னையின் திருமேனியில் படிந்தது.இதனால் உலக இயக்கமே நின்று போய்விட்டது.இதனால் ஏற்பட்ட பாவத்திற்கு பரிகாரமாக,அன்னை பார்வதி பூமியில் காசியில் அவதரித்து விட விருட்சத்தின் கீழ் இருந்து பூஜை செய்து அன்னபூரணியாய் தோன்றி அன்னதானம் செய்து வந்தாள்.பல்வேறு தானதர்மங்கள் செய்தும் ஈசனை அடையமுடியாதலால் மனம் சோர்ந்து காஞ்சித்தலத்திற்கு சென்று மணலை லிங்கமாக வைத்து பூஜை செய்தால் கயிலாயம் அடையலாம் என அறிந்து தேவி இங்கு ஆதியில் வந்து தங்கியதால் ஆதிகாமாட்சி எனவும்,காபாலிகள் பூசை செய்து பலி கொடுத்ததால் காளி எனவும்,ஆதிசங்கரர் அம்மனுடைய உக்கிரத்தை தனித்ததாலும் ஆதிபீடாபரமேசுவரி...ஆதிகாமாட்சியின் தோற்றம் (ம) இத்திருக்கோயிலின் வரலாறு குறித்து கல்வெட்டில் விரிவாக கூறப்பட்டுள்ளது.கயிலாயத்தில் சிவபெருமானின் இருகண்களை பார்வதி தன்னுடைய கரங்களினால் பொத்தியதால்,பூலோகம் இருண்டு பாவம் பெருகி கருமை நிறமாக மாறி அன்னையின் திருமேனியில் படிந்தது.இதனால் உலக இயக்கமே நின்று போய்விட்டது.இதனால் ஏற்பட்ட பாவத்திற்கு பரிகாரமாக,அன்னை பார்வதி பூமியில் காசியில் அவதரித்து விட விருட்சத்தின் கீழ் இருந்து பூஜை செய்து அன்னபூரணியாய் தோன்றி அன்னதானம் செய்து வந்தாள்.பல்வேறு தானதர்மங்கள் செய்தும் ஈசனை அடையமுடியாதலால் மனம் சோர்ந்து காஞ்சித்தலத்திற்கு சென்று மணலை லிங்கமாக வைத்து பூஜை செய்தால் கயிலாயம் அடையலாம் என அறிந்து தேவி இங்கு ஆதியில் வந்து தங்கியதால் ஆதிகாமாட்சி எனவும்,காபாலிகள் பூசை செய்து பலி கொடுத்ததால் காளி எனவும்,ஆதிசங்கரர் அம்மனுடைய உக்கிரத்தை தனித்ததாலும் ஆதிபீடாபரமேசுவரி எனவும் பெயர்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
இத்திருத்தலம் 3500 ஆண்டுகள் பழமையானது. பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டது. நகரேஷீ காஞ்சியில் திருவேகம்பத்துக்கும், காமகோட்டத்துக்கும், குமரகோட்டத்துக்கும் இடையில் காளிக்கோட்டத்தில் ஸ்ரீ ஆதிகாமாஷி ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் வீற்றிருந்து அருளாட்சி செய்து வருகிறாள்.
கயிலையில் ஒருசமயம் சிவனின் திருக்கண்களை கணப்பொழுது தன் கையால் அன்னை மூடினால் அப்போது உலகம் இருண்டு பாவம் பெருகி அது கருமை நிறமாக மாறி அன்னையின் திருமேனியில் படிந்தது. கைகளை விலக்கிக் கொண்ட போது உலகம் ஒளிப்பெற்றது. ஆனால் அன்னையின் உருவில் மாற்றம் இல்லை. கருமையான அன்னையை காளி என்று அழைத்தார்கள். பாவ விமோசனம் வேண்டிஅன்னை காசியில் அன்னப்பூரணியாக இருந்து தர்மங்கள் செய்து தென்நாட்டின் காஞ்சியம்பதி வந்து கங்கணேசம், கடகேசம் என்ற லிங்கங்களை ஸ்தாபித்து ஆதிபீடம் அமர்ந்து 32 அறங்களை செய்து சிவனை நோக்கி தவமிருந்தாள்.
ஒருமுறை கம்பா நதிகரையில் அன்னை ஒற்றை மாவடியில் ஓர் அழகிய மணல் லிங்கம் உருவாக்கி வழிப்பட்டு வரும்போது சிவன் அன்னையை சோதிக்கும் பொருட்டு கம்பா நதியில் வெள்ளத்தை உருவாக்கினார். அன்னை வெள்ளத்தால் மணல் சிவலிங்கம் பாதிக்காவண்ணம் முழங்காலுன்றி இருகைகளாலும் நெஞ்சாற அணைத்து கொண்டு பாதுகாத்தமையால், சிவன் அங்கு தோன்றி அன்னைக்கு வரம் வழங்கிட அன்னையின் கரிய நிறம் வெள்ளத்தில் கரைந்து சென்று அன்னை மேனி பொன் நிறமாக பொலிவடைந்தது. அதனால் கௌசிகி எனப்பெயர்பெற்றாள்
51 சக்தி பீடங்களில் ஒட்டியான பீடமாக வும் ஐங்கார அக்ஷர சக்தி பீடமாக விளங்கும் . காளிகோட்டத்தில் அருள்மிகு ஆதிகாமாட்சி ஆதிபீடாபரமேஸ்வரி காளிகாம்பாள் ஆலயத்தில் உமையவள் மகாகாளியாக ஜடாமகுடம்தனில் பிறை தரித்து பாசாங்குசம் ஏந்தி அபய , அட்சய திருக்கரங்களுடன் பத்மாசனத்தில் தவக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இத்திருத்தலத்தில் வேறு எங்கும் காண இயலாத ஞானமும் , சக்தியும் ஒருங்கிணைந்து ஒரே உருவத்தில் சக்தி லிங்கமாக காட்சி தருவது தனிச்சிறப்பாகும்.அம்பாள் தனது கரங்களில் உடுக்கை, சூலம், கபாலம் ஆகியவற்றை தாங்கிக் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார் பிற கோவில்களில் இது போன்ற வடிவில் காண கிடைக்காதது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது
புராண பின்புலம்
இத்திருத்தலம் 3500 ஆண்டுகள் பழமையானது. தொண்டை மண்டலம் முதல் சோழர்,பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. மாமன்னர்களின் தலைநகரமாக விளங்கியது கல்வி மற்றும் கலைகளின் களஞ்சியமாகவும் ,ஆன்மீக சிறப்புமிக்க சைவ, வைணவ ஆலயங்கள் நிறைந்துள்ள கச்சித்தளியாம் நகரேஷீ காஞ்சி மாநகர்தனில் திருவேகம்பத்துக்கும், காமகோட்டத்துக்கும், குமரகோட்டத்துக்கும் இடையில் 51 சக்தி பீடங்களில் ஒட்டியாண பீடமாகவும், ஐங்கார அக்ஷரசக்தி பீடமாக விளங்கும் காளிக்கோட்டத்தில் அருள்மிகு ஆதிகாமாஷி ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் வீற்றிருந்து அருளாட்சி செய்து வருகிறாள்.
கயிலையில் ஒருசமயம் சிவனின் திருக்கண்களை கணப்பொழுது தன் கையால்...இத்திருத்தலம் 3500 ஆண்டுகள் பழமையானது. தொண்டை மண்டலம் முதல் சோழர்,பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. மாமன்னர்களின் தலைநகரமாக விளங்கியது கல்வி மற்றும் கலைகளின் களஞ்சியமாகவும் ,ஆன்மீக சிறப்புமிக்க சைவ, வைணவ ஆலயங்கள் நிறைந்துள்ள கச்சித்தளியாம் நகரேஷீ காஞ்சி மாநகர்தனில் திருவேகம்பத்துக்கும், காமகோட்டத்துக்கும், குமரகோட்டத்துக்கும் இடையில் 51 சக்தி பீடங்களில் ஒட்டியாண பீடமாகவும், ஐங்கார அக்ஷரசக்தி பீடமாக விளங்கும் காளிக்கோட்டத்தில் அருள்மிகு ஆதிகாமாஷி ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் வீற்றிருந்து அருளாட்சி செய்து வருகிறாள்.
கயிலையில் ஒருசமயம் சிவனின் திருக்கண்களை கணப்பொழுது தன் கையால் அன்னை மூடினால் அப்போது உலகம் இருண்டு பாவம் பெருகி அது கருமை நிறமாக மாறி அன்னையின் திருமேனியில் படிந்தது. கைகளை விலக்கிக் கொண்ட போது உலகம் ஒளிப்பெற்றது. ஆனால் அன்னையின் உருவில் மாற்றம் இல்லை. கருமையான அன்னையை காளி என்று அழைத்தார்கள். பாவ விமோசனம் வேண்டிஅன்னை காசியில் அன்னப்பூரணியாக இருந்து தர்மங்கள் செய்து தென்நாட்டின் காஞ்சியம்பதி வந்து கங்கணேசம், கடகேசம் என்ற லிங்கங்களை ஸ்தாபித்து ஆதிபீடம் அமர்ந்து 32 அறங்களை செய்து சிவனை நோக்கி தவமிருந்தாள்.
ஒருமுறை கம்பா நதிகரையில் அன்னை ஒற்றை மாவடியில் ஓர் அழகிய மணல் லிங்கம் உருவாக்கி வழிப்பட்டு வரும்போது சிவன் அன்னையை சோதிக்கும் பொருட்டு கம்பா நதியில் வெள்ளத்தை உருவாக்கினார். அன்னை வெள்ளத்தால் மணல் சிவலிங்கம் பாதிக்காவண்ணம் முழங்காலுன்றி இருகைகளாலும் நெஞ்சாற அணைத்து கொண்டு பாதுகாத்தமையால், சிவன் அங்கு தோன்றி அன்னைக்கு வரம் வழங்கிட அன்னையின் கரிய நிறம் வெள்ளத்தில் கரைந்து சென்று அன்னை மேனி பொன் நிறமாக பொலிவடைந்தது. அதனால் கௌசிகி எனப்பெயர்பெற்றாள்.
பொன் நிறமடைந்த அன்னை பங்குனி உத்திர திருநாளில் ஈசனை மணந்து கொண்டாள். இங்கு அன்னை சிறிய கோரப் பற்களுடன் சாந்த சொரூபியாக பத்மாசனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கின்றாள்.இங்குள்ள லிங்கம் சக்தி லிங்கமாக சிறப்பு பெற்று விளங்குகிறது.