காசிபர் பூசித்தது
சூரபது மனுடைய போர்க்களத்தில், போரில் நிற்க முடியாமல் மறைந்தோடிய மலையன் , மாகரன் என்னும் இரண்டு அசுரர்களும் திருமாகரலிறைவனைப் பூசித்து வரம் பெற்றுக் கருவம் கொண்டு பலருக்கும் தீங்கு செய்து கொண்டிருந்தனர். இதனை இந்திரன் காசிபருக்குச் சொல்ல, காசிபர் உலக நலன் கருதி வந்து, இத்தலத்திற்குக் கீழ்த்திசையில் ஒரு யாகம் செய்யத் தொடங்க, அதனை இவ்வசுரர்கள் அழித்தனர். அதனால் தன்யாகம் நிறைவேற சுயம்புலிங்கமாகிய கடம்பேசனைப் பூசித்தார் என்பது தலபுராணம் கூறும் செய்தி. இறைவன் தோன்றி அவருக்கு வரமருளி, யாகத்தை முற்றுவிக்கத் திருமாகரலில் உள்ள தம் குமாரனுக்குக் கட்டளையிடுவதாகக் கூறியருளினார்.காசிபர் பூசித்தது
சூரபது மனுடைய போர்க்களத்தில், போரில் நிற்க முடியாமல் மறைந்தோடிய மலையன் , மாகரன் என்னும் இரண்டு அசுரர்களும் திருமாகரலிறைவனைப் பூசித்து வரம் பெற்றுக் கருவம் கொண்டு பலருக்கும் தீங்கு செய்து கொண்டிருந்தனர். இதனை இந்திரன் காசிபருக்குச் சொல்ல, காசிபர் உலக நலன் கருதி வந்து, இத்தலத்திற்குக் கீழ்த்திசையில் ஒரு யாகம் செய்யத் தொடங்க, அதனை இவ்வசுரர்கள் அழித்தனர். அதனால் தன்யாகம் நிறைவேற சுயம்புலிங்கமாகிய கடம்பேசனைப் பூசித்தார் என்பது தலபுராணம் கூறும் செய்தி. இறைவன் தோன்றி அவருக்கு வரமருளி, யாகத்தை முற்றுவிக்கத் திருமாகரலில் உள்ள தம் குமாரனுக்குக் கட்டளையிடுவதாகக் கூறியருளினார்.
தல பெருமை
திருத்தலம்
கடம்பர் கோயில் என வழங்கும் இத்தலம் மிகவும் பழமையானதாகும். திருநாவுக்கரசர் பாடிய க்ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகத்தில் கடம்மை இளங்கோயில் என்று இத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது காஞ்சிப்புராணம் 2ம் காண்டம் இருபத்தொண்டளிப் படலத்தில், காஞ்சி மண்டலத்தைச் சூழ்ந்துள்ள இருபது தளிகளுள் குமாரக் கடவுளால் பூஜிக்கப்பட்ட
தலம் என்பதனை
விடப்பணாதரக் தொங்கலும் கடுக்கையும்
விரிகதில் மதிக்கோடும்
அடப்பமாலையும், துவன்றிய வேணியார்
நடப்பதாம்புய நாண்மலர்ப் பூசனை
நகைநுதி அழல்வேற்கை
கடப்ப மாலையான் இயற்றினன் அத்தலம்
கடம்பையென் நுரையோங்கும்
என்னும் பாடலில் கூறப்பட்டுள்ளது.
திருஞானசம்பந்தர் தேவாரம் இத்தலத்திற்கு இருந்தது. அது கிடைக்காமல் போயிற்று என்று எண்ணத்தோன்றுகின்றது. காரணம் அருகில் உள்ள திருமாகரல், குரங்களில்முட்டம் போன்றவை அவர் பாடிய தலங்கள். கடம்பர் கோயிலின்மாடவீதி உற்சவங்கள் சம்பந்தப் பிள்ளையார் கோயில்வரை நடப்பது என்ற வழக்கம் உள்ளது....திருத்தலம்
கடம்பர் கோயில் என வழங்கும் இத்தலம் மிகவும் பழமையானதாகும். திருநாவுக்கரசர் பாடிய க்ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகத்தில் கடம்மை இளங்கோயில் என்று இத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது காஞ்சிப்புராணம் 2ம் காண்டம் இருபத்தொண்டளிப் படலத்தில், காஞ்சி மண்டலத்தைச் சூழ்ந்துள்ள இருபது தளிகளுள் குமாரக் கடவுளால் பூஜிக்கப்பட்ட
தலம் என்பதனை
விடப்பணாதரக் தொங்கலும் கடுக்கையும்
விரிகதில் மதிக்கோடும்
அடப்பமாலையும், துவன்றிய வேணியார்
நடப்பதாம்புய நாண்மலர்ப் பூசனை
நகைநுதி அழல்வேற்கை
கடப்ப மாலையான் இயற்றினன் அத்தலம்
கடம்பையென் நுரையோங்கும்
என்னும் பாடலில் கூறப்பட்டுள்ளது.
திருஞானசம்பந்தர் தேவாரம் இத்தலத்திற்கு இருந்தது. அது கிடைக்காமல் போயிற்று என்று எண்ணத்தோன்றுகின்றது. காரணம் அருகில் உள்ள திருமாகரல், குரங்களில்முட்டம் போன்றவை அவர் பாடிய தலங்கள். கடம்பர் கோயிலின்மாடவீதி உற்சவங்கள் சம்பந்தப் பிள்ளையார் கோயில்வரை நடப்பது என்ற வழக்கம் உள்ளது. (தற்போது சம்பந்தர் கோயில் மண்மேடாய் உள்ளது. இதனால் திருஞானசம்பந்தர் இத்தலத்துக்கு வந்து பாடிய பதிகம் கிடைக்காமல் போயிருக்கலாம் என்று கொள்ளலாம்) எனவே இத்தலம் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.