அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புலிவனம் - 603406, காஞ்சிபுரம் .
Arulmigu Viyagarapureswrar Temple, Thirupulivanam - 603406, Kancheepuram District [TM001834]
×
Temple History
தல பெருமை
புலி (மிருகண்டு முனிவர் வீடுபேறு பெறுதல்
பூர்வகாலத்தில் உரோமரிஷி என்பவர் தண்டகாரண்யத்தில் சிவபூஜையின் பலன்களைப்பற்றியும், சைவ நெறிகளைப் பற்றியும் அங்குள்ள முனிவர்களுக்கு எடுத்துக் கூறினர். அப்போது அவ்விடத்திருந்த மிருகண்டு முனிவர், உரோமரிஷி சொல்வதைக் கவனியாமல் வேறெங்கோ மனதைச் செலுத்தியிருந்தனர். அதனைக்கண்ட உரோமரிஷி, சைவ நெறியைக் கேளாமல் இருந்த நீர், விலங்காக மாறக்கடவது என்று சபித்தனர். சாபம்பெற்ற மிருகண்டு முனிவர் புலியாக உருமாறினர். பிறகு தனது தவறுக்கு வருந்தி, சாபவிமோசனமளிக்குமாறு வேண்ட, உரோமரிஷி, தென்திசையில் சேயாற்றின் அருகேயுள்ள வில்வாரண்யத்தில் சுயம்புரூபமாய் எழுந்தருளியுள்ள பெருமானைப் பூசித்துச் சாபநீக்கம் பெறுக என்றருளினர்.
அவ்வாறே அப்புலியானது பல ஆரண்யங்களைக் கடந்து தென்திசைவந்து சேயாற்றின் தென்பாலிருக்கும் வில்வவனத்தை அடைந்தது. அவ்விடத்தே சுயம்புரூபமாய் எழுந்தருளியுள்ள பெருமானைக்கண்டு, வலம்வந்து வணங்கி, பக்தியுடன் பலநாள் பூசித்திருந்தது....புலி (மிருகண்டு முனிவர் வீடுபேறு பெறுதல்
பூர்வகாலத்தில் உரோமரிஷி என்பவர் தண்டகாரண்யத்தில் சிவபூஜையின் பலன்களைப்பற்றியும், சைவ நெறிகளைப் பற்றியும் அங்குள்ள முனிவர்களுக்கு எடுத்துக் கூறினர். அப்போது அவ்விடத்திருந்த மிருகண்டு முனிவர், உரோமரிஷி சொல்வதைக் கவனியாமல் வேறெங்கோ மனதைச் செலுத்தியிருந்தனர். அதனைக்கண்ட உரோமரிஷி, சைவ நெறியைக் கேளாமல் இருந்த நீர், விலங்காக மாறக்கடவது என்று சபித்தனர். சாபம்பெற்ற மிருகண்டு முனிவர் புலியாக உருமாறினர். பிறகு தனது தவறுக்கு வருந்தி, சாபவிமோசனமளிக்குமாறு வேண்ட, உரோமரிஷி, தென்திசையில் சேயாற்றின் அருகேயுள்ள வில்வாரண்யத்தில் சுயம்புரூபமாய் எழுந்தருளியுள்ள பெருமானைப் பூசித்துச் சாபநீக்கம் பெறுக என்றருளினர்.
அவ்வாறே அப்புலியானது பல ஆரண்யங்களைக் கடந்து தென்திசைவந்து சேயாற்றின் தென்பாலிருக்கும் வில்வவனத்தை அடைந்தது. அவ்விடத்தே சுயம்புரூபமாய் எழுந்தருளியுள்ள பெருமானைக்கண்டு, வலம்வந்து வணங்கி, பக்தியுடன் பலநாள் பூசித்திருந்தது. அப்போது தன் எதிரில் வலிய வந்த பசுவையும் உண்ணாது, சைவநெறியுடன் பூசித்து வந்தது. புலியின் பக்தியைக்கண்ட பெருமான், அதனை ஆட்கொள்ளத் திருவுளங் கொண்டனர். உடனே வேடுவவுருக் கொண்டு புலியை நோக்கி
அம்பெய்தனர். அதனைக்கண்ட புலி இத்தலத்திற்கு வடக்கே வேகமாயோடி களைப்புநீங்க ஓரிடத்தில் நின்றது. (அவ்விடம் கருவேப்பம்பூண்டி என அழைக்கப்படுகிறது கரு-பிறப்பு, வேபம்-புடைப்பெயர்ச்சி, சலனம், பூண்டி-ஊர், இடம், தோட்டம் அதாவது புலியின் பிறவிப்பிணி நீங்க அது புடைப் பெயர்ச்சியான இடம் எனும் பொருள் விளங்க கருவேபம்பூண்டியாகி இன்று அப்பெயர் கருவேப்பம்பூண்டி என்று அழைக்கப்படுகிறது). அப்போது வேடுவவுருக்கொண்டிருந்த பெருமான் இரண்டாவதாக ஒரு அம்பை எய்தனர். அது புலியின் கால்களைத்தாக்கவே, வலி தாங்கமாட்டாது, முன்னிலும் வேகமாக அவ்விடத்திருந்து கிழக்காகச் சிறிதுதூரம் ஓடி ஓரிடத்தில் நின்றது. பெருமானும் விடாது துரத்தியவாறு சென்று மீண்டும் புலிமீது அம்பெய்தனர். அந்த அம்பு விரைவாகப்பாய்ந்து புலியின் முன்னங்கால்களைத் தாக்கவே, வலியால் துடித்தவாறே புலியானது தனது அகன்றவாயைத் திறந்தவாறு உறுமியது. (அவ்விடம் புலிவாய் என அழைக்கப் படுகின்றது.)
பின்னர் வேடுவன், மீண்டும் அம்பெய்ய முற்படும்போது அவனிடமிருந்து தப்புவதற்காக புலி, அங்கிருந்து கிழக்காக சிறிதுதூரம் ஓடி மீண்டும் ஓரிடத்தில் நின்றது. அங்கும் வேடுவன்வந்து அம்பெய்ய முற்பட, புலியானது தன் முற்பிறவியை எண்ணி வருந்தியது. வினைப்பற்றின்பொருட்டே தாம் தாக்கப்படுகிறோம் பிறவிப் பிணியை நீக்கவல்லோன் அந்த சர்வேஸ்வரனே என எண்ணி புத்தி தெளிந்தது. (புலி புத்தி தெளிந்த அவ்விடம் புத்தளி என்று அழைக்கப்படுகிறது.) பிறகு வேடுவனிடமிருந்து தப்பிப் பெருமானை அடையவேண்டி, புலியானது முன்பைவிட அதிவேகமாயோடி, தான் பூசித்துவந்த மகாதேவர் எழுந்தருளியுள்ள இடத்தை அடைந்து பலமுறை வலம்வந்து வணங்கியது. விடாது துரத்திவந்த வேடுவன் இறுதியாகச் சரியான இலக்கில் அம்பெய்ய, அது புலியின் கழுத்தைத் துளைத்தது. அப்போது உறுமியவாறே புலி, பெருமான் திருவடியில் வீழ்ந்தது. அச்சமயம் வேடுவன் மறைய, இலிங்க உருவிலிருந்து பெருமான், தேவியுடன் இடபத்தின்மேல் எழுந்தருளி, அப்புலிக்குச் சாபநீக்கமும், வீடுபேறும் அளித்தனர். புலிக்கு வீடுபேறளித்த பெருமான் புலிவல மகாதேவர் என்று திருப்பெயர் பெற்றனர்.
புலி சைவநெறியுடன் பூசித்து வீடுபேறடைந்த இந்நிகழ்வை,
வாயெதிர் போய்ச் சேதா வலியப் புசியென்னத்
தீய புலி ஊனுண்டல் தீதென்னத்-தூய
விரதத்தைக் கண்டு விடையோன் வந்தானவ்
விரதத்தைச் செய்ய விரும்பு.
-என்ற பழம் பாடலால் அறியலாம்.
வியாக்ரபாத முனிவர் அருள் பெறுதல்
தில்லையம்பதியில் ஒரு சமயம், மாத்யந்தினர் என்பவர் திருமூலநாதரை நித்தம் வணங்கிப் பூசித்து வந்தனர். வண்டுகள் தேனை உறிஞ்சி மலர்களைச் சேதப்படுத்தும்முன்னர் அதிகாலையிலேயே எழுந்து நந்தவனம் சென்று மலர்களைப் பறித்துவந்து பெருமானைப் பூசித்திருந்தனர்.
ஒருநாள் அவர், பனிப்பொழிவின் காரணத்தால் கால தாமதமாக மலர்பறிக்கச் சென்றனர். அப்போது அங்குள்ள மலர்களனைத்தும் வண்டுகளால் சேதமுற்றிருப்பதைக்கண்டு மிகவும் வருந்தினர். பிறகு பெருமான் சன்னிதியை அடைந்து அழுது புரண்டனர். அப்பொழுது பெருமான், மாத்யந்தினா ஏன் அழுது புலம்புகின்றாய்? என்று அசரீரியாய் கேட்க, மாத்யந்தினர், பெருமானே தேவரீரது பூசைக்குத் தூய்மையான மலர் கிடைக்காமல் வருந்துகின்றேன். ஆதவன் எழுமுன்னர் மலர் பறிக்கச்சென்றால் இருளில் கண்கள் தெரிவதில்லை. பொழுது விடிந்தபின் சென்றால் மலர்களை வண்டுகள் சேதப்படுத்திவிடுகின்றன. ஆதலால் துன்பமுற்று வருந்துகின்றேன் என்று கூறினர்.
அதனைக்கேட்ட திருமூலப்பெருமான், துயரத்தை விடுக இனி எமது பூசைக்கு மலர்களைப் பறிக்க ஏதுவாக இருளில் நன்றாகத் தெரியும்படியான கண்களையும், செடி, மரங்களில் ஏறுவதற்கு வசதியாக புலியினுடைய கால்களையும் உமக்கு அளிக்கிறோம் இனி நீ வியாக்ரபாதன் என்று அழைக்கப்படுவாய் என்றருளினர். அதன்படி மாத்யந்தினர் நன்கு ஒளி வீசும் கண்களையும், புலியினுடைய கால்களையும் பெற்றனர். பிறகு பெருமானிடம், தேவரீரிடம் நீங்காத பக்தி கொண்ட ஒரு மகனை அடியேனுக்கு வரமாக அருளவேண்டும் என்றும் வேண்டிநிற்க, பெருமான், நீ வேண்டியவாறு பெறவேண்டுமாயின் இங்கிருந்து வடபாலிருக்கும் புலிவலம் செல்வாயாக. அங்கு எம்மை வணங்கியிருந்து விரும்பியதைப் பெறுவாயாக என்று அசரீரியாய் அருளினர்.
அவ்வருளாணைப்படியே வியாக்ரபாதர் தனது மனைவியுடன் பலதலங்களைக் கடந்து புலிவலத்தை அடைந்தனர். இங்கு எழுந்தருளியுள்ள புலிவலப் பெருமானைப் பலநாள் நறுமலர்கொண்டு பூசித்துவருகையில், அப்பெருமான் அருளால் வியாக்ரபாதர், உபமன்யு என்பானை மகனாகப் பெற்றனர். பிறகு பெருமான், ஞானத்தையருளும் ஆலமர்செல்வராக வியாக்ரபாதருக்குக் காட்சியருளி, யோகத்தின் சிறப்பை வாக்கினாலே சொல்லாமல் உணர்த்தியருளினார். பிறகு வியாக்ரபாதர் மகாதேவருக்கு வடபால் முத்தீஸ்வரர் எனும் பெயரால் லிங்கம் ஸ்தாபித்து, வணங்கியிருந்து வீடு பேற்றையடைந்தனர். வியாக்ரபாதருக்கு அருளிய புலிவலப் பெருமான் வியாக்ரபுரீஸ்வரர் என்றும் திருப்பெயர் கொண்டனர்.
இலக்கிய பின்புலம்
இத்திருத்தலம் திருநாவுக்கரசு சுவாமிகளின் பாடல் பெற்ற திருமுறை வைப்புத்தலமாகும்.
வைப்புத்தலம் என்பது ஒரு தலத்திற்கு சென்று பாடும்போது மற்ற தலங்களையும்(நேரில் சென்று பாடாமல்) அத்தலத்தோடு சேர்த்துப் பாடுவதாகும்.இத்திருத்தலம் திருநாவுக்கரசு சுவாமிகளின் பாடல் பெற்ற திருமுறை வைப்புத்தலமாகும்.
வைப்புத்தலம் என்பது ஒரு தலத்திற்கு சென்று பாடும்போது மற்ற தலங்களையும்(நேரில் சென்று பாடாமல்) அத்தலத்தோடு சேர்த்துப் பாடுவதாகும்.