Arulmigu Marunthiswarar and Thiyagaraja Swamy Temple, Thirukachur - 603204, Chengalpattu District [TM001846]
×
Temple History
தல வரலாறு
மலைக்கோயில்-இந்திரானுக்கு விாதி ஏற்பட்டு நாரதர் கூற்றின் படி அஸ்வினி தேவா்கள் இவ்வாலயத்திற்கு வந்து இச்சிவனை வழிபட்டு கோயில் பின்புறம் உள்ள மலைகோயில் மூலிகை மருந்து செடிகளை தேடினாா். அப்பொழுது அம்பாள் பிரதட்ஷினமாகி அம்மூலிகை பலை, அதிபலை செடிின் மீது ஒளி வீசி அம்மூலிகை செடி அஸ்வினி தேவர்களுக்கு அடையாளம் காட்டியதால் அம்பாளுக்கு அந்தகார நிவாரணி இருள் நீக்கிய அம்மன் என்றும் மூலிகை மருந்து செடி கிடைக்கப் பெற்றதால் ஓளஷதம் மருந்து மூலிகை கிடைக்கப்பெற்றதால் சுவாமி ஓளஷத கிரிஸ்வரர் மருந்தீஸ்வரா் என்றும் பெயர் பெற்றது. இங்கு சுவாமி, அம்பாள் இருவரும் கல்யாணகோலமாக மேற்கு திசை நோக்கி நமக்கு காட்சி தருகின்றனா். வெளி பிரகாரத்தில் கொடி மரத்தின் கீழ் மருந்து...மலைக்கோயில்-இந்திரானுக்கு விாதி ஏற்பட்டு நாரதர் கூற்றின் படி அஸ்வினி தேவா்கள் இவ்வாலயத்திற்கு வந்து இச்சிவனை வழிபட்டு கோயில் பின்புறம் உள்ள மலைகோயில் மூலிகை மருந்து செடிகளை தேடினாா். அப்பொழுது அம்பாள் பிரதட்ஷினமாகி அம்மூலிகை பலை, அதிபலை செடிின் மீது ஒளி வீசி அம்மூலிகை செடி அஸ்வினி தேவர்களுக்கு அடையாளம் காட்டியதால் அம்பாளுக்கு அந்தகார நிவாரணி இருள் நீக்கிய அம்மன் என்றும் மூலிகை மருந்து செடி கிடைக்கப் பெற்றதால் ஓளஷதம் மருந்து மூலிகை கிடைக்கப்பெற்றதால் சுவாமி ஓளஷத கிரிஸ்வரர் மருந்தீஸ்வரா் என்றும் பெயர் பெற்றது. இங்கு சுவாமி, அம்பாள் இருவரும் கல்யாணகோலமாக மேற்கு திசை நோக்கி நமக்கு காட்சி தருகின்றனா். வெளி பிரகாரத்தில் கொடி மரத்தின் கீழ் மருந்து மண் உள்ளது. இங்கு மண்ணே மருந்து, மலையே மருந்து என்று இராமலிங்க சுவாமிகள் தன் பாடல்களில் கூறியுள்ளாா். மேலும் இம்மலையின் மூலிகை காற்றை நாம் சுவாசிப்பதால் வயிறு சம்மந்தப்பட்ட வியாதிகள் குணமாகும். பெளர்ணமி, திங்கட்கிழமை, செவ்வாய் கிழமை, வெள்ளிக்கிழை ஆகிய நாட்களில் கிரிவலம் வருவது மிகவும் சிறப்பாகும்.
தாழக்கோயில்-மூலவமூர்த்தி லிங்க திருமேனியாக காட்சி தருகிறாா். மந்தாரமலையை மத்தாகவும் கயிறு ஆகவும் கொண்டு தேவர்களும், அசுராகளும் அமுதம் பெற வேண்டி பாற்க்கடலை கடைந்த போது ஸ்ரீமகாவிஷ்ணு மந்தார மலையை ஆமை உருவம் எடுத்து தாங்கி பிடித்தாா். அந்த மலைலய தாங்குவதற்கு உண்டான ஆற்றலை பெறவேண்டி இங்கு உள்ள சிவபெருமாளை பூஜை செய்தாா். இதனால் இச்சிவபெருமாளுக்கு கச்சபேஸ்வரர் என்று பெயா் உண்டானது. மூா்த்தியாக இங்கு அருள் பாலித்து வருகிறாா். சுவாமி சுயம்பு அம்பாள் அஞ்னாட்சி என்று பெயா். அஞ்சனம்- கண்க்கு மை இடுதல். அதனாள் மையாற்கன்னி என்றும் சிறப்பு பெயர் உண்டு. ஸ்ரீ அம்மாள் சன்னதி ஈசான பாகத்தில் ஸ்ரீ சக்கரம் உள்ளது.