Arulmigu Ekambareswarar Temple, Chengalpattu - 603001, Chengalpattu District [TM001847]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயில் செங்கல்பட்டு நகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1/2 கி.மீ
தொலைவில் வ.உசி சாலையில் அமைந்துள்ளது. இரயில் நிலையத்திலிருந்து சுமார் 3/4 கி.மீ தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் செங்கல்பட்டு என்னும் செங்கழுநீர்பட்டு என்றும் வழங்கப்படும் செங்கல்பட்டின் இதயமாக திகழும் பகுதியில் அருள்மிகு கபமட்சி அம்மையுடன் ஸ்ரீ ஏகாம்பரநாதர் அன்பர்களுக்கு அருள் வழங்கி வருகின்றார். நகரேஷ் காஞ்சி என்று மகாகவி காளிதாசன் சிறப்பித்து கூறும் காஞ்சி மாநகரில் ஏகாம்பரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்த பக்கதர்களால் செங்கல்பட்டிலும் ஏகாம்பரேஸ்வரர் கோயிலை அமைக்க வேண்டும் என்ற நோக்கில் செங்கல்பட்டு ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மையுடன் பிரதிஸ்டை செய்யப்பட்டிருக்க வேண்டும். செங்கல்பட்டினை ஆண்ட விஜயநகர அரசரர்கள் காலத்தில் அதாவது...இத்திருக்கோயில் செங்கல்பட்டு நகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1/2 கி.மீ
தொலைவில் வ.உசி சாலையில் அமைந்துள்ளது. இரயில் நிலையத்திலிருந்து சுமார் 3/4 கி.மீ தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் செங்கல்பட்டு என்னும் செங்கழுநீர்பட்டு என்றும் வழங்கப்படும் செங்கல்பட்டின் இதயமாக திகழும் பகுதியில் அருள்மிகு கபமட்சி அம்மையுடன் ஸ்ரீ ஏகாம்பரநாதர் அன்பர்களுக்கு அருள் வழங்கி வருகின்றார். நகரேஷ் காஞ்சி என்று மகாகவி காளிதாசன் சிறப்பித்து கூறும் காஞ்சி மாநகரில் ஏகாம்பரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்த பக்கதர்களால் செங்கல்பட்டிலும் ஏகாம்பரேஸ்வரர் கோயிலை அமைக்க வேண்டும் என்ற நோக்கில் செங்கல்பட்டு ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மையுடன் பிரதிஸ்டை செய்யப்பட்டிருக்க வேண்டும். செங்கல்பட்டினை ஆண்ட விஜயநகர அரசரர்கள் காலத்தில் அதாவது கி.பி.15-ம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டபட்டிருக்ககூடும், ஆனால் கல்வெட்டு சான்றிதழ் ஏதும் இல்லாத நிலையில் இதனை நிலையில் இதனை அருதியிட்டு கூற இயலவில்லை.
ஏகாம்பரம் என்பது ஆமரம் அதாவது மாமரம் எனப் பொருள்படும் விதத்தில் ஏகஆமரம் ஏகாம்பரம் அதாவது ஒற்றை மாமரம் எனப்படும் விதத்தில் வழங்கப்பட்டது. ஷி சிவபெருமான் ஒற்றைமரத்தின் அடியில் காட்சியளித்த இடமாகும். செங்கல்பட்டில் தற்போது ஏகாம்பரேஸ்ரர் திருக்கோயில் அமைந்துள்ள இடமும் மாவடி என்று வழங்கப்படுவது குறிப்பிடதக்கது.
தல பெருமை
திருக்கோயில் அமைந்துள்ள இடமும் மாவடி என்று வழங்கப்படுவது குறிப்பிடதக்கது.
மூக்குவாய் செவி கண் உடல் ஆகி வந்து
ஆக்கும் ஐவர்தம் ஆவ்வை அவிழ்த்தருள்
நோக்குவான்நமை கோய் விளைவாரமே
காக்கும் நாயகன் கச்சி ஏகம்பனே
என்று அடியார்களை பாடிப்பரவிய கச்சி ஏகம்பனை மனதில்...திருக்கோயில் அமைந்துள்ள இடமும் மாவடி என்று வழங்கப்படுவது குறிப்பிடதக்கது.
மூக்குவாய் செவி கண் உடல் ஆகி வந்து
ஆக்கும் ஐவர்தம் ஆவ்வை அவிழ்த்தருள்
நோக்குவான்நமை கோய் விளைவாரமே
காக்கும் நாயகன் கச்சி ஏகம்பனே
என்று அடியார்களை பாடிப்பரவிய கச்சி ஏகம்பனை மனதில் நிறுத்தியே நாம் இறைவனை வணங்குவோம்.
கோயில் அமைப்பு கிழக்கு பார்த்த சன்னதியில் ஏகாம்பரேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றர். கருவறையின் இருபுறமும் விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் காட்சியளிக்கின்றனர். கருவறையச் சுற்றியுள்ள தேவகோட்டத்தில், முதல் கோட்டத்தில் பால விநாயகர் திருமேனியும், அவரை அடுத்து தென்புற கடவுலான தட்சீணாமூர்த்தியும் மேற்குபுற கோட்டத்தில் விஷ்ணுவும். அவரை அடுத்து வடக்குப்புறத்தில் பிரம்மாவும், கருவறை அடுத்த அர்த்த மண்டபத்தின் வடபுற தேவகோட்டத்தில் துர்க்கையும் காட்சியளிக்கின்றனர். இத்துர்க்கையம்மனை இராகுலத்தில் செவ்வாய்க்கிழமை. வாரம் தோறும் பெண்கள் சிறப்பான வழிபாடு செய்கின்றனர்.
புராண பின்புலம்
இறைவன் சன்னதியை ஒட்டியே அம்பாள் காமாட்சியம்மையாக அருளை வாரி வழங்குகின்றார். காமாட்சி என்பதன் சொற்பொருள் பிரமனையும் என்பது திருமாலையும் என்பது ருத்திரனையும் தன் விழிகளால் தோற்றுவித்தவள் ஆதலால் காமாட்சி எனப்பட்டாள். காமாட்சி அன்பர்கள் விரும்புனவற்றை அளிப்பவரும் உயிர்களின் நன்மையக் கருத வசீகரத் தன்மையுடைய விழிகளை உடையவள் ஆக விளக்குபவள் ஆவாள். செங்கல்பட்டில் உள்ள காமாட்சியம்மன் நின்றத்திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் வழங்குகின்றாள். பராசக்தியின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்தருளிய ஒளிப்பிழம்பாகிய திரிபுரசுந்திரி வடிவம். பிரம்மதேவன் பூசித்த பங்காரு காமாட்சி திருவுருவம் மாங்காடு. காஞ்சி தஞ்சாவூர் உடையார் பாளையம் ஆகிய இடங்களில் வழிபாடு செயய்ப்படுகின்றது. காஞ்சி காமாட்சியின மனதில் நிறுத்திய பக்தர்கள் செங்கல்பட்டிலும் அவரை தரிசனம் செய்ய வேண்டி
எங்கெல்லாம்...இறைவன் சன்னதியை ஒட்டியே அம்பாள் காமாட்சியம்மையாக அருளை வாரி வழங்குகின்றார். காமாட்சி என்பதன் சொற்பொருள் பிரமனையும் என்பது திருமாலையும் என்பது ருத்திரனையும் தன் விழிகளால் தோற்றுவித்தவள் ஆதலால் காமாட்சி எனப்பட்டாள். காமாட்சி அன்பர்கள் விரும்புனவற்றை அளிப்பவரும் உயிர்களின் நன்மையக் கருத வசீகரத் தன்மையுடைய விழிகளை உடையவள் ஆக விளக்குபவள் ஆவாள். செங்கல்பட்டில் உள்ள காமாட்சியம்மன் நின்றத்திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் வழங்குகின்றாள். பராசக்தியின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்தருளிய ஒளிப்பிழம்பாகிய திரிபுரசுந்திரி வடிவம். பிரம்மதேவன் பூசித்த பங்காரு காமாட்சி திருவுருவம் மாங்காடு. காஞ்சி தஞ்சாவூர் உடையார் பாளையம் ஆகிய இடங்களில் வழிபாடு செயய்ப்படுகின்றது. காஞ்சி காமாட்சியின மனதில் நிறுத்திய பக்தர்கள் செங்கல்பட்டிலும் அவரை தரிசனம் செய்ய வேண்டி
எங்கெல்லாம் எண்னெண்ணம் செல்கின்றதோ
அங்கெல்லாம் உன்னுருவம் நிற்கட்டுமே
எங்கெல்லாம் என்சென்னி பணிகின்றதோ
அங்கெல்லாம் உன் பாதம் நிலைக்கட்டுமே
மேற்கண்ட பாடலைப் பாடிய படி பக்தர்கள் அம்பானை தரிசிக்கின்றனர்.
காமாட்சி அம்மனின் சன்னதியினை அடுத்து உற்சவ விக்கிரங்கள் கண்ணாடி அறையில் பஞ்சோலகத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. கண்ணாடி அறையில் ஸ்ரீ நடராஜ பெருமான் பாங்குற சேவைசாய்கின்றார். வெளி சன்னதியில் பயிரவர் தனிமை கோலத்தில் சூரியன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வெளிபுற சுற்றில் நவகிரக சன்னதியு அரச மரத்தடி பிள்ளையாரும் வழிபாடு செய்கின்றனர். இத்திருக்கோயிலில் பிரதி தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றது.