இத்திருக்கோயில் செங்கல்பட்டு நகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1/2 கி.மீ தொலைவில் வ.உசி சாலையில் அமைந்துள்ளது. இரயில் நிலையத்திலிருந்து சுமார் 3/4 கி.மீ தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. திருக்கோயில் வரலாறு இத்திருக்கோயில் செங்கல்பட்டு என்னும் செங்கழுநீர்பட்டு என்றும் வழங்கப்படும் செங்கல்பட்டின் இதயமாக திகழும் பகுதியில் அருள்மிகு கபமட்சி அம்மையுடன் ஸ்ரீ ஏகாம்பரநாதர் அன்பர்களுக்கு அருள் வழங்கி வருகின்றார். நகரேஷ் காஞ்சி என்று மகாகவி காளிதாசன் சிறப்பித்து கூறும் காஞ்சி மாநகரில் ஏகாம்பரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்த பக்கதர்களால் செங்கல்பட்டிலும் ஏகாம்பரேஸ்வரர் கோயிலை அமைக்க வேண்டும் என்ற நோக்கில் செங்கல்பட்டு ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மையுடன் பிரதிஸ்டை செய்யப்பட்டிருக்க வேண்டும். செங்கல்பட்டினை ஆண்ட விஜயநகர அரசரர்கள் காலத்தில்...