இறைவர் திருப்பெயர் நந்தீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் சௌந்தர்யநாயகி.
வழிபட்டோர் நந்தி.
வைப்புத்தலப் பாடல்கள் அப்பர் - நாடகமா டிடநந்தி 6-71-8.
நூறு வருடங்களையும் கடந்த நாகலிங்க மரம் ஒன்று இங்கு பிரமாண்டமாகக் காணப்படுகிறது.
தல வரலாறு
தமிழகம் முழுவதும், கூடுவாஞ்சேரி என நன்கு அறியப்படும் நந்திவரம் என்ற நகரம், பல்லவர் கால வரலாற்றுத் தொடர்புடையது. புகழ்பெற்ற சிவதலமாக விளங்கும் நந்தீஸ்வரர் கோவில் அமைந்திருக்கும் இடமாதலால், நந்திகேச்சுரம் மருவி நந்திவரம் என்றானதாக கூறப்படுகிறது. நந்திவரத்தில் அமைந்துள்ள நந்தீஸ்வரர் கோவில், நந்தி வழிபட்ட தலம் எனவும், பல்லவர் கால வழிபாட்டுத் தலம் எனவும் நம்பப்படுகிறது. பல்லவர் கால வாணிபக் கூடமாகவும், நந்திவரம் விளங்கியுள்ளதற்கான சான்றுகளாக, கல்வெட்டுகள் பல உள்ளன.
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரத்தை அடுத்து வண்டலூர் உயிரியல்...இறைவர் திருப்பெயர் நந்தீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் சௌந்தர்யநாயகி.
வழிபட்டோர் நந்தி.
வைப்புத்தலப் பாடல்கள் அப்பர் - நாடகமா டிடநந்தி 6-71-8.
நூறு வருடங்களையும் கடந்த நாகலிங்க மரம் ஒன்று இங்கு பிரமாண்டமாகக் காணப்படுகிறது.
தல வரலாறு
தமிழகம் முழுவதும், கூடுவாஞ்சேரி என நன்கு அறியப்படும் நந்திவரம் என்ற நகரம், பல்லவர் கால வரலாற்றுத் தொடர்புடையது. புகழ்பெற்ற சிவதலமாக விளங்கும் நந்தீஸ்வரர் கோவில் அமைந்திருக்கும் இடமாதலால், நந்திகேச்சுரம் மருவி நந்திவரம் என்றானதாக கூறப்படுகிறது. நந்திவரத்தில் அமைந்துள்ள நந்தீஸ்வரர் கோவில், நந்தி வழிபட்ட தலம் எனவும், பல்லவர் கால வழிபாட்டுத் தலம் எனவும் நம்பப்படுகிறது. பல்லவர் கால வாணிபக் கூடமாகவும், நந்திவரம் விளங்கியுள்ளதற்கான சான்றுகளாக, கல்வெட்டுகள் பல உள்ளன.
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரத்தை அடுத்து வண்டலூர் உயிரியல் பூங்கா கடந்ததும் வரும் ஊர் கூடுவாஞ்சேரி. திருநந்திவரம், திருநந்திகேஸ்வரம் என்றெல்லாம் முன் காலத்தில் அழைக்கப்பட்ட இந்தப் பகுதி, தற்போது நந்திவரம் கூடுவாஞ்சேரி என்று வழங்கப்படுகிறது. இங்குள்ள இறைவன் பெயர் ஸ்ரீநந்தீஸ்வரர். அம்பாள் திருநாமம் ஸ்ரீசௌந்தர்ய நாயகி.
நந்தீஸ்வரர் என்கிற திருநாமம் இந்த ஆலய இறைவனுக்கு வந்ததற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதல் காரணம் இந்த ஆலயத்தைக் கட்டியதாகச் சொல்லப்படும் மூன்றாம் நந்திவர்ம பல்லவனை வைத்து அவனது திருநாமமே, இறைவனின் திருப்பெயரானது என் கிறார்கள். தொண்டை மண்டலத்தில் உள்ள இந்தத் திருத்தலத்துக்குத் தனது ஆட்சிக் காலத்தில் பல்வேறு திருப்பணிகளைச் செய்துள்ளான் நந்திவர்மன். இறை வனுக்கு மட்டும் அல்லாமல் அவனது பெயரே இந்த ஊருக்கும் இருந்து வந்தது. அந்தப் பெயரே நந்திவரம் இன்றளவும் வழங்கப்பட்டு வருவது,இந்த ஸ்ரீநந்தீஸ்வரர் சிவாலயம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று மூன்றிலும் பிரசித்தி பெற்றது. இங்கு உறையும் இறைவன் நந்தீஸ்வர பெருமான் என்பதால், பிரதோஷ கால தரிசனம் இங்கு விசேஷமானது. அத்தகைய நாட்களில் பெரும் திரளான கூட்டம் கூடுகிறது
கிழக்குப் பார்த்து ஸ்ரீநந்தீஸ்வரர் காணப்படுகிறார். தெற்கு நோக்கிய ஸ்ரீசௌந்தர்ய நாயகி. கிழக்கு மற்றும் தெற்குத் திசைகளில் நுழைவாயில்கள் இருக்கின்றன. பெரும்பாலானோர் தெற்கு வாயிலையே பயன்படுத்துகின்றனர். கிழக்கு வாயிலுக்கு எதிரே நந்தி தீர்த்தம் எனப்படும் திருக்குளம். தல மரம் வில்வம். தவிர, நூறு வருடங்களையும் கடந்த நாகலிங்க மரம் ஒன்றும் பிரமாண்டமாகக் காணப்படுகிறது.
நடராஜ சபை. இங்கு இவருக்கு விசேஷ மான ஆராதனைகள் நடக்கின்றன. சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி பௌர்ணமி, புரட்டாசி பௌர்ணமி, மார்கழி திருவாதிரை, மாசி மகம் போன்ற தினங்களில் விசேஷமான அபிஷேகங்கள் இவருக்கு உண்டு. இடப் பக்கம் தெற்குப் பார்த்தவாறு சௌந்தர்ய நாயகி. தமிழில் அழகொளிர்நாயகி, அழகுடைநாயகி. பெயருக்கேற்றாற் போல் அழகான வடிவம். அன்னையின் ஆசி பெற்று அவளை வலம் வந்தால் பைரவர், வீரபத்திரர், சூரிய பகவான் போன்ற தெய்வங்களின் தரிசனம்.
சிறப்புக்கள்
இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
நந்தி வழிபட்ட தலம்.
இன்றும் சுவாமி மீது தல வரலாறு தொடர்பான வெட்டப்பட்டுள்ள வடு காணப்படுகிறது.
பங்குனி உத்திரம் முதலிய வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.