அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில், திருமலைவையாவூர்,கிராமம் - 603314, செங்கல்பட்டு .
Arulmigu Prasanna Venkatesaperumal Temple, Thirumalaivaiyavur - 603314, Chengalpattu District [TM001879]
×
Temple History
தல வரலாறு
ஆதிவராக சுவாமி ஆதிவராக ஷேத்திரம் ஆதிவராக புஷ்கரணி என்றவாறு மூர்த்தி.தலம்,தீர்த்தம் இம்மூன்றிலும் திருப்பதி திருமலையைப்போல் சிறந்து விளங்குவது இத்திருத்தலமாகும்.ஆதிஷேசனுக்கு சீனிவாச பெருமாள் காட்சி அளித்த பெருமையுடையது இத்திருத்தலம்.திருப்பதி திருமலை திருக்கோயிலை கட்டுவித்த அபராஜித வர்ம பல்லவ மன்னன் வேண்டியவாறு இத்திருமலையின் மீது வெங்கடேசப்பெருமாள் இரதத்தின் மீது காட்சி அளித்ததால் ஸ்வாமி பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் என்றழைக்கப்படுகிறார். இரதத்தின் மீது காட்சி அளித்ததற்கு அடையாளமாக இரதசக்கரம் அடையாளமும்,குதிரைக்கால் குளம்பின் அடையாளமும் ஒரு பாறையின் மீது காலங்கள் பலவற்றை கடந்து இன்றளவும் காட்சி அளிக்கிறது.அக்காலத்தில் விஜயநகர அரசை சேர்ந்த ராஜா தோடர்மால் இங்கு எழுந்தருளியிருக்கும் சுவாமியின் மீது அளவிலா பக்தி பூண்டு இத்திருக்கோயிலுக்குத் திருப்பணி செய்துள்ளதாக வரலாறு கூறுகிறது.இத்திருமலையின் ஆதிமூர்த்தி ஆதிவராக ஸ்வாமி ஆவார். திருப்பதி...ஆதிவராக சுவாமி ஆதிவராக ஷேத்திரம் ஆதிவராக புஷ்கரணி என்றவாறு மூர்த்தி.தலம்,தீர்த்தம் இம்மூன்றிலும் திருப்பதி திருமலையைப்போல் சிறந்து விளங்குவது இத்திருத்தலமாகும்.ஆதிஷேசனுக்கு சீனிவாச பெருமாள் காட்சி அளித்த பெருமையுடையது இத்திருத்தலம்.திருப்பதி திருமலை திருக்கோயிலை கட்டுவித்த அபராஜித வர்ம பல்லவ மன்னன் வேண்டியவாறு இத்திருமலையின் மீது வெங்கடேசப்பெருமாள் இரதத்தின் மீது காட்சி அளித்ததால் ஸ்வாமி பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் என்றழைக்கப்படுகிறார். இரதத்தின் மீது காட்சி அளித்ததற்கு அடையாளமாக இரதசக்கரம் அடையாளமும்,குதிரைக்கால் குளம்பின் அடையாளமும் ஒரு பாறையின் மீது காலங்கள் பலவற்றை கடந்து இன்றளவும் காட்சி அளிக்கிறது.அக்காலத்தில் விஜயநகர அரசை சேர்ந்த ராஜா தோடர்மால் இங்கு எழுந்தருளியிருக்கும் சுவாமியின் மீது அளவிலா பக்தி பூண்டு இத்திருக்கோயிலுக்குத் திருப்பணி செய்துள்ளதாக வரலாறு கூறுகிறது.இத்திருமலையின் ஆதிமூர்த்தி ஆதிவராக ஸ்வாமி ஆவார். திருப்பதி திருமலையைப் போன்று இத்தலத்திலும் முதலில் ஆதிவராக ஸ்வாமியை தரிசனம் செய்த பிறகே பிரசன்ன வெங்கடேசப்பெருமாளைத் தரிசனம் செய்யும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது.இங்கு அலர்மேல் மங்கைத் தாயார் தனி சன்னதி கொண்டு எழுந்தருளியுள்ளார். திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்த பிறகே தங்கள் தல யாத்திரை புண்ணியத்தைப் பெறுவர். இது சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாகும்.
தல பெருமை
திருமலைவையாவூர் சென்னையிலிருந்து 70 கி.மீ தொலைவிலும் செங்கல்பட்டில் இருந்து 18 கி.மீ தொலைவிலும் உள்ளது. திருமலை வையாவூரில் ஒரு சிறிய மலையில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாளுக்கு திருமலை என்றும் அழைக்கப்படும் அழகிய கோயில் உள்ளது. இங்குள்ள அம்மன் ஸ்ரீ அலர் மேல் மங்கை தாயார் ஆவார்.
இந்த மலைக்கு ஸ்ரீ வைகுண்ட கிரி, தட்சண வேங்கடகிரி, தட்சண சேஷகிரி, வராஹ கேஷேத்திரம், ராமானுஜ யோககிரி என்று பல பெயர்கள் உண்டு. இந்த பழமையான கோவிலில் சில சுவாரஸ்யமான புராணக் கதைகள் இணைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ ராமனுக்கும் ராவணனுக்கும் நடந்த போரின் போது, லக்ஷமணன் போர்க்களத்தில் மயங்கி விழுந்தான். லட்சுமணனைக் குணப்படுத்த சஞ்சீவி மலையைக் கொண்டு வர ஸ்ரீ இராமர் அனுமனை அனுப்பினார். ஸ்ரீ ராமர்...திருமலைவையாவூர் சென்னையிலிருந்து 70 கி.மீ தொலைவிலும் செங்கல்பட்டில் இருந்து 18 கி.மீ தொலைவிலும் உள்ளது. திருமலை வையாவூரில் ஒரு சிறிய மலையில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாளுக்கு திருமலை என்றும் அழைக்கப்படும் அழகிய கோயில் உள்ளது. இங்குள்ள அம்மன் ஸ்ரீ அலர் மேல் மங்கை தாயார் ஆவார்.
இந்த மலைக்கு ஸ்ரீ வைகுண்ட கிரி, தட்சண வேங்கடகிரி, தட்சண சேஷகிரி, வராஹ கேஷேத்திரம், ராமானுஜ யோககிரி என்று பல பெயர்கள் உண்டு. இந்த பழமையான கோவிலில் சில சுவாரஸ்யமான புராணக் கதைகள் இணைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ ராமனுக்கும் ராவணனுக்கும் நடந்த போரின் போது, லக்ஷமணன் போர்க்களத்தில் மயங்கி விழுந்தான். லட்சுமணனைக் குணப்படுத்த சஞ்சீவி மலையைக் கொண்டு வர ஸ்ரீ இராமர் அனுமனை அனுப்பினார். ஸ்ரீ ராமர் கூறியபடி சஞ்சீவி மலையைக் கொண்டு வந்தார் ஸ்ரீ அனுமன். சஞ்சீவி மலையை ஏந்தி இலங்கை திரும்பும் வழியில் ஸ்ரீ அனுமான் இந்த மலையில் ஸ்ரீ வராஹப் பெருமானையும், ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமானையும் வணங்கியதாகக் கூறப்படுகிறது, சஞ்சீவி மலையை தரையில் வைக்கக் கூடாது என்பதால் இங்குள்ள கடவுளுக்குக் கீழ்ப் படிவதற்காக ஸ்ரீ ஹனுமான் மலையை வலது கையிலிருந்து இடது கைக்கு மாற்றியதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள புனித சஞ்சீவி மலையை ஸ்ரீ ஹனுமான் தரையில் வைக்காதாதால், இந்த இடம் திருமலை வையாவூர் என்று அழைக்கப்பட்டது. இத்திருக்கோயில் விஜய நகர மன்னன் ராஜா தோடர்மால் என்பவர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் மீது வைத்திருந்த பக்தியின் காரணமாய் இத்திருக்கோயிலை நிறுவினார் என்பது தல வரலாறு. இத்திருக்கோயிலே தற்போது தென்திருப்பதி திருமலைவையாவூர் என வழங்கலாயிற்று.
இலக்கிய பின்புலம்
இத்திருக்கோயில் ஆந்திர விஜய நகரை சேர்ந்த மன்னன் ராஜா தோடர் மால் அவர்களால் கி.பி. 17 ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப் பெற்றது என்ற விவரம் தெரிந்து கொள்ளப்படுகின்றது.இத்திருக்கோயில் ஆந்திர விஜய நகரை சேர்ந்த மன்னன் ராஜா தோடர் மால் அவர்களால் கி.பி. 17 ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப் பெற்றது என்ற விவரம் தெரிந்து கொள்ளப்படுகின்றது.