அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் திருமலைவையாவூர். இத்திருக்கோயில் செங்கல்பட்டில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் உள்ளது. இத்திருக்கோயிலுக்கு பக்தர்கள் படி வழியாகவும் செல்லலாம். வாகன வசதியும் உள்ளது. ஆதிவராக சுவாமி ஆதிவராக ஷேத்திரம் ஆதிவாராக புஷ்கர்னி என்றவாறு மூர்த்தி, தலம், தீர்த்தம் இம்மூன்றிலும் திருப்பதி திருமலையைப்போல் சிறந்து விளங்குவது இத்திருத்தலமாகும். ஆதிஷேசனுக்கு திருப்பதி சீனிவாச பெருமாள் காட்சி அளித்த பெருமையுடையது இத்திருத்தலம்.