Screen Reader Access     A-AA+
அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், பூவரசன்குப்பம் - 605105, விழுப்புரம் .
Arulmigu Lakshminarasimar Temple, Puvarasankuppam - 605105, Viluppuram District [TM020363]
×
Temple History

தல பெருமை

பூவரசங்குப்பம் என்று இதற்கு ஏன் பெயர் வந்தது என்பது ஒரு ஸ்வாரஸ்யமான சரித்திரம். அச்சரித்திரப்படி பல்லவ அரசர்கள் ஜைன மதத்தைத் தழுவி விஷ்ணு திருக்கோவில்களையும் சிவன் திருக்கோவில்களையும் இடித்துத் தகர்த்து நாசமாக்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த பகவதபக்தர்கள் திருக்கோவில்களைத் தகர்ப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக அரும்பாடு பட்டனர். ஆனால் பல்லவ அரசன் தன்னை எதிர்த்தவர்களை சிறையில் அடைத்தான். நரஹரி என்ற முனிவர் இதைக் கண்டு பொங்கி எழுந்தார். அவருடைய எதிர்ப்பைக் கண்ட அரசன் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தான். முனிவர் அரசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிராமணர்களைக் கொண்றால் உண்டாகும் தோஷம் வருமாறு பகவானிடம் வேண்டினார். இத்தருணத்தில் அரசனுக்குப் பல தொல்லைகளும் துன்பங்களும் தோன்றின. முடிவில் அரசன் தன் தவறுக்காக மனம் வருந்தினான்....