இத்திருக்கோயில் சுமார் 400 வருடங்கள் பழமையானதாகும். ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கோவிலாகும். பழங்காலத்திய ஸ்தலபுராணத்தின்படி வடக்குக் கடற்கரையிலுள்ள தென் பெண்ணை ஆற்றில் வசித்து வந்த ஸப்த ரிஷிகள் எம்பெருமானை நோக்கி அவருடைய தரிசனத்திற்காக தவம் செய்தனர் நரசிம்மர் அவதாரம் என்பதால் அவர்களால் பகவானுடைய கடுங்கோபத்தீயைக் தாங்க முடியாமல் போகவே அவரைச் சாந்த மூர்த்தியாக தரிசிக்க விரும்பினர். அதனால் இங்கு அமிர்தவல்லித் தாயார் அவர்களுக்கு காட்சியளிப்பதற்காக பகவானுடைய மடியில் தாம் வீற்றிருந்த ஒரக்கண்ணால் பகவானையும் மற்ற கண்ணால் முனிவர்களையும் கடாட்சித்து அருள்பாலித்தார். பகவானுடைய கோபத்தீயைத் தணிப்பதற்காக தாயார் அவரைக் கனிவுடன் நோக்கி அவரது இடது பக்கத்து மடியில் வீற்றிருந்து காட்சியளிக்கிறார். தாயார் லட்சுமியின் கருணாகடாட்சத்தால் ஸ்ரீநரசிம்மர் அமைதி தவழ்ந்த முகப்பொலிவுடன் காட்சியளிக்கிறார்