அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிபுலியூர், கடலூர் - 607002, கடலூர் .
Arulmigu Padaleeswarar Temple, Thirupathiripuliyur, Cuddalore - 607002, Cuddalore District [TM020366]
×
Temple History
தல வரலாறு
தல வரலாறு
1976 ஆம் ஆண்டு புலவர் க. பா. வேல்முருகர் அவர்களால் தொகுக்கப்பட்ட ஸ்தல வரலாற்றினை 1998-ல் மறு மதிப்பாக வெளியிடப்படுகிறது.
தேயமெல்லாம் நின்று இறைஞ்சும் திருப்பாதிரிப்புலியூர் இது அப்பரடிகள் வாக்கு, பிற நான்மார் இங்ஙனம் கூறவில்லை. அப்பரடிகளும் வேறு தலங்களுள் எதனையும் இங்ஙனம் சிறப்பிக்கவில்லை. ஈன்றாளுமாய் என்னும் திருப்பதிகத்தில் இரண்டு இடங்களில் சூக்கும ஐந்தெழுத்தை வெளிப்பட ஓதியருளியதோடு, மேற்கண்ட தொடர் அமைந்த மாயமெல்லாம் என்ற திருப்பாசுத்தில் ஐந்தெழுத்தின் கருத்து நுணுக்கங்களையும் அருளியிருக்கிறார். இத்தகைய திருப்பதிகம் எந்தத்தலத்திற்கும் அமையவில்லை. எனவே திருப்பாதிரிப்புலியூர் ஏற்றமுள்ள தலம் என்பது வெள்ளிடைமலை.
7 மற்றும் 8ஆம் நூற்றாண்டுகளில் இந்தத் தலத்தில் அடியார்கள் யாவரும் அரனைப் பூசித்திருக்க வேண்டுமென்னும்...தல வரலாறு
1976 ஆம் ஆண்டு புலவர் க. பா. வேல்முருகர் அவர்களால் தொகுக்கப்பட்ட ஸ்தல வரலாற்றினை 1998-ல் மறு மதிப்பாக வெளியிடப்படுகிறது.
தேயமெல்லாம் நின்று இறைஞ்சும் திருப்பாதிரிப்புலியூர் இது அப்பரடிகள் வாக்கு, பிற நான்மார் இங்ஙனம் கூறவில்லை. அப்பரடிகளும் வேறு தலங்களுள் எதனையும் இங்ஙனம் சிறப்பிக்கவில்லை. ஈன்றாளுமாய் என்னும் திருப்பதிகத்தில் இரண்டு இடங்களில் சூக்கும ஐந்தெழுத்தை வெளிப்பட ஓதியருளியதோடு, மேற்கண்ட தொடர் அமைந்த மாயமெல்லாம் என்ற திருப்பாசுத்தில் ஐந்தெழுத்தின் கருத்து நுணுக்கங்களையும் அருளியிருக்கிறார். இத்தகைய திருப்பதிகம் எந்தத்தலத்திற்கும் அமையவில்லை. எனவே திருப்பாதிரிப்புலியூர் ஏற்றமுள்ள தலம் என்பது வெள்ளிடைமலை.
7 மற்றும் 8ஆம் நூற்றாண்டுகளில் இந்தத் தலத்தில் அடியார்கள் யாவரும் அரனைப் பூசித்திருக்க வேண்டுமென்னும் கருத்து. திருஞானசம்பந்தர் பதிகத்தில் காணப்பெறுகிறது. போதினாலும் புகையாலும் உய்த்தே அடியார்கள் தாம், போதினாலே வழிபாடு செய் அப்புலியூர் மருள் இல் நல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர் என்பவை அத்திருவாக்குகள்.
சற்றேறக்குறைய சுருக்கமாகேவே பாடப்பெற்றிருக்கும் திருப்பாதிரிப்புலியூர் தலபுராணம், இறையுணர்ச்சியை மிகுவித்துச் சிவனடிக்கண்ணே மனத்தைச் செலுத்தும் இயல்பினது. உள்ளவாறு உணர்ந்து படிப்போர் உள்ளம் நெகிழப் பெறுவது திண்ணம். திருநாட்டுப் படலம், திருநகரப் படலங்கள் ஆசிரியருடைய குருநாதராம் சிவஞான முனிவர் நூல்களில் காணப் பெறுவன போன்ற அமைப்பின. திணை மயக்க முதலிய சிறப்புப் பகுதிகளும் அங்ஙனமே.
முதல் நூலைப் படிக்கும் போதும், இச்சுருக்க நூலைப் படிக்கும் போதும் சில கருத்துகள் ஐயம் விளைவிக்கத் தக்கனவாய் அமைந்திருக்கின்றன. ஈண்டு அவற்றைக் குறிப்பிட்டுக் காட்டுவது கடமையாகிறது.
காலத்தால் மிகப் பழமைமையுடைய இத்தலத்தில் கி. பி. ஏழாம் நூற்றாண்டில் நிகழ்ந்த திருநாவுக்கரசுர் கரையேறியதைக் குறித்தும், மணிவாசகப் பெருந்தகையார் வேண்டுகோளுக்கிணங்கவே சிவகர தீர்த்தம் இறைவனால் உண்டாக்கப் பெற்றதென்றும், நூலாசியர் கூறியிருக்கிறார். வடமொழிப் புராணத்தை முதல் நூலாகக் கொண்டு பாடியவர், அதிலுள்ளவாறே சருக்க அமைப்புகளை மேற்கொண்டவர். பின்னிகழ்ச்சிகளாகிய இவற்றை சைவ உலகு செய்த அருந்தவப் பேறாக நிகழ்ந்த இவற்றைக் கூறாதிருக்க ஆசிரியர் மனம் இடந்தராமையே காரணமாதலால் அவற்றை உரிய இடத்திற் பெய்துரைத்தார் என்று கொள்ளல் தவறாகாது.
கெடில நதி பற்றி ஒரு குறிப்பு: மாணிக்கவாசகருக்காகச் சித்தராம் சிவபெருமான் நதியின் போக்கை மாற்றியதாகப் புராணம் கூறுகிறது. திருநாவுக்கரசு கரையேறிய காலத்தும் தென்பாலே ஓடியிருக்கலாம். அவர் கரையேறிய இடத்தை ஒட்டித் தென்பால் அமைந்துள்ள ஊர் கரையேற விட்ட குப்பம் என்றே வழங்கப் பெறுகிறது. அரசினர் பதிவேடுகளில் இன்னும் அந்தப் பெயரே வழங்கி வருகிறது.
கலம்பக ஆசிரியர், கெடிலத்து வடபால் ஊர் உள்ள தென்பதும் மேற்கருத்தை ஒட்டியதே, அவர் திருநாவுக்கரசர் திருஞான சம்பந்தருக்குப் பிற்பட்டும், இரட்டையர்க்கு முற்பட்ட காலத்திலும் வாழ்ந்தவர்.
இப்போது ஊருக்கு வடக்கே கெடில நதி ஓடுகிறது ஏன்? ஊரை வலமாகக் கொண்டு ஓடிக் கடலிற் கலக்கிறது. தென்பால் ஓடினால் நேரே கடலையடையும். இப்போதும் கெடிலத்தில் பெரு வெள்ளம் வரும் போது அப்பர் கரையேறிய மடுவாக உள்ள இடத்தை அனைத்து அந்நீர் கடலையடைவதும் உண்மை- எனவே, கெடில நதி மாறி ஓடிக் கடலிற் புகுவதும், இருபுறமும் ஓடுவதும் முற்கால முதலாகவே நிகழ்வதென்பதற்கு ஐயமில்லை-