Screen Reader Access     A-AA+
அருள்மிகு இலட்சுமிநரசிம்மசுவாமி திருக்கோயில், அவணியாபுரம் - 605504, திருவண்ணாமலை .
Arulmigu Lakshmi Narasimma Swamy Temple, Avaniyapuram - 605504, Tiruvannamalai District [TM020376]
×
Temple History

தல வரலாறு

திருமகளும் கருடாழ்வாரும் சிம்ம முகத்துடன் காட்சி தரும் திருத்தலம். நவ நரசிம்மர்கள் அருளாட்சி செய்வதால், தட்சிண அஹோபிலம் என்று போற்றப்படும் திருத்தலம். பிருகு மகரிஷியின் பிரார்த்தனைக்கு இரங்கி, ஐந்து திவ்ய தேசங்களில் எழுந்தருளியிருக்கும் திருக்கோலங் களில் பெருமாள் திருக்காட்சி அருளிய அற்புதத் தலம்... இத்தனை மகிமைகளுக்கும் உரிய தலம் ஆவணி நாராயணபுரம். தற்போது ஆவணியாபுரம் என்று வழங்கப்படுகிறது. பிரமாண்ட புராணம் பலவாறாக புகழ்ந்து பேசும் இந்தத் தலத்தைத் தரிசிப்போமா திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியி லிருந்து ஆரணி செல் லும் சாலையில் அமைந்திருக் கிறது ஆவணியாபுரம். மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் அலங்கார வளைவில், சிம்ம முகத்துடன் கூடிய திருமகளை மடியில் இருத்திய கோலத்தில் சுதைச் சிற்பமாகக் காட்சி தருகிறார் நரசிம்மர். அங்கிருந்து மலைக்குச் செல்லும் படிகள்...

தல பெருமை

மகாவிஷ்ணு ஏற்றுக்கொண்ட திருஅவதாரங்களில் குறிப்பிடத்தக்கது நரசிம்ம அவதாரம். இரணியனை வதம் செய்யும் பொருட்டு பகவான் ஸ்ரீமத்நாராயணன் முகம் சிங்க வடிவத்திலும், உடல் மனித வடிவத்திலும் அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்து தன்பக்தனான பிரகலாதனுக்கு முடிசூட்டினார். அப்போது பிரகலாதன் நாராயணனின் கோர திருஉருவத்தையும், கோபத்தையும் கண்டு நடுங்கி, நாராயணனை வணங்கி சாந்த திருவுருவமாக தேவி இலட்சுமியுடன் காட்சியளித்து ஆசீர்வதிக்க வேண்டினார். அதன்படியே திருமாலும் ஸ்ரீலட்சுமி தேவியை தன் இடபாகத்தில் அமர்த்திக் கொண்டு சாந்த திருவுருவமாக காட்சி அருளினார். இரணியனை வதம் செய்த நாராயணனை தேவர்கள் புகழ்ந்து வணங்கி தங்களுக்கு திருமால் இந்த உருவிலேயே காட்சி தந்து உலகை உய்விக்க வேண்டுமென்று வரம் கோரினார்கள். அதைக் கேட்ட பகவான், தேவர்களே நீங்கள் பூலோகத்தில் உள்ள ஆவணிநாராயணபுரம்...