Arulmigu Puthuvaiyamman Temple, Koliyanur - 605103, Viluppuram District [TM020381]
×
Temple History
தல பெருமை
அருள்மிகு புத்துவாய் அம்மன் திருக்கோவில் வரலாறு
பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி பெருங்காடாக இருந்தபோது பனங்குப்பம் எனும் பகுதியில் இருந்து பசு ஒன்று தினமும் மேய்ச்சலுக்கு வரும்போது காட்டில் அமைந்திருந்த புற்று ஒன்றில் பால் சுரப்பதையும் இதை புற்றில் இருந்து ஒரு நாகம் சாப்பிடுவதையும் கண்ட பசுவின் மேய்ப்பன் தனது எஜமானிடம் கூற அவன் அப்பகுதி மக்களுடன் திரளாக வந்து இந்நிகழ்ச்சியை கண்டு அதிசயித்து மன்னரிடம் கூற, அவன் ஆலோசனைப்படி இப்பகுதி மக்களால் புற்றினை சுற்றி ஆலயம் எழுப்பப்பட்டது. அதுவே தற்போது பல திருப்பணிகள் செய்யப்பட்டு எழில்மிகு ஆலயமாக விளங்குகிறது இத் திருக்கோவிலின் முதன்மை தெய்வம் ரேணுகாம்பாள் ஆகும் , திருக்கோவில் இரண்டாம் கருவறையில் நாக புற்று...அருள்மிகு புத்துவாய் அம்மன் திருக்கோவில் வரலாறு
பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி பெருங்காடாக இருந்தபோது பனங்குப்பம் எனும் பகுதியில் இருந்து பசு ஒன்று தினமும் மேய்ச்சலுக்கு வரும்போது காட்டில் அமைந்திருந்த புற்று ஒன்றில் பால் சுரப்பதையும் இதை புற்றில் இருந்து ஒரு நாகம் சாப்பிடுவதையும் கண்ட பசுவின் மேய்ப்பன் தனது எஜமானிடம் கூற அவன் அப்பகுதி மக்களுடன் திரளாக வந்து இந்நிகழ்ச்சியை கண்டு அதிசயித்து மன்னரிடம் கூற, அவன் ஆலோசனைப்படி இப்பகுதி மக்களால் புற்றினை சுற்றி ஆலயம் எழுப்பப்பட்டது. அதுவே தற்போது பல திருப்பணிகள் செய்யப்பட்டு எழில்மிகு ஆலயமாக விளங்குகிறது இத் திருக்கோவிலின் முதன்மை தெய்வம் ரேணுகாம்பாள் ஆகும் , திருக்கோவில் இரண்டாம் கருவறையில் நாக புற்று அமைதுள்ளதால் புத்துவாய் அம்மன் என்று அழைக்க படுகிறது
திருக்கோயில் மகிமை
திருமணம், குழந்தை வரம் வேண்டியும் பக்தர்கள் வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம், குழந்தை பேறு கிடைக்கும். எந்த வகை நோயாக இருந்தாலும் இங்கு வந்து வழிபட்டால் உடனே குணமாகிறது, மேலும் அம்மை நோய் கண்டவர்கள் கோயிலுக்கு வந்து விரதமிருந்து அம்மனுக்கு சேவை செய்து வேண்டிக்கொண்டால் அம்மை இறங்கிவிடும் எனவும் சொல்கிறார்கள் பக்தர்கள் நம்பிக்கை, மேலும் அம்மனை தரிசிக்க நம்மை பீடித்திருக்கும் பில்லி, சூனியம், நோய் நொடிகள் உள்ளிட்ட அனைத்து பிணிகளும் நீங்கிடும்.
கோலியனூர் ஊரின் சிறப்பு
கோலியனூர் என்று அழைக்கபடும் இத்தலம் விழுப்புரம் அருகே 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. முங்காலத்தில் இது கோவில்கள் நிறைந்த ஊரக இருந்ததால் கோவில் புறநல்லூர் என்று அழைக்கபட்டது பின்னர் மருவி கோலியனூர் என்று ஆனது
அருள்மிகு புத்துவாய் அம்மன் திருக்கோவில் அமைந்துள்ள கோலியனூர் பல சரித்திர புகக் பெற்றது இவ்வூரில் ராமாயண கால பாத்திரமான வாலீ, ஈஸ்வரனை வேண்டி வரம் பெற்று மோட்சம் பெற்ற தலம். ருத்ர அவதாரம் கொண்ட ஈசன் தன் சுய ரூபதினை வாலிக்கு காண்பித்து அருளியபோது நவக்கிரக நாயகனாக சனிபகவான் பார்வை வாலியின் பட அவன் மோட்சம் பெற்றான். இதனை குறிக்கும் வகையில் தெற்கு நோக்கிய தனி சன்னதி கொண்ட சனிஸ்வரன் அமைந்த வாலீஸ்வரர் திருக்கோவில், 12 அடி உயரம் கொண்ட எழில்மிக்க வரதராஜபெருமாள் உரையும் திருக்கோவில். மயானக் கொள்ளை காணும் அங்கலபரமேஸ்வரி ஆலயம் போன்ற பல தெய்வத் திருக்கோவில்கள் இத்தலத்தில் அமைந்துள்ளன.
இலக்கிய பின்புலம்
ராமாயணத்தில் பரசுராமர் கதை
பரசுராமர் சொல்கிறான். திருமால் தனக்குக் கொடுத்த வில்லை இருசிகன் என் தந்தைக்குக் கொடுத்தான். என் தந்தை எனக்குக் கொடுத்தார். இதனை நீ எளிமையாக வளைப்பாயானால் உன்னோடு நான் போருக்கு வரமாட்டேன் - என்றான்
நீ ஒடித்தது ஈன வில்.நீ எனக்கு வழியில் வந்த பகை
அரக்கன் ஒருவனைக் கொன்று என் தந்தையின் சீற்றத்தை நீக்கியவன் நான் அரசன் ஒருவன் என் தந்தைக்குக் கொடுமை செய்ததால் அரசர்கள் மீது சலிப்பு ஏற்பட்டு அவர்கள்மீது வெறுப்பு கொண்டிருக்கிறேன்.
என் தந்தைக்குக் கொடுமை செய்த அரசர் குலத்தவர் 21 உலகங்களில் எங்கு இருந்தாலும் அவர்கள் அனைவரையும் கொன்று என் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தேன்.
பின்னர் சினம் தணிந்தேன். வென்ற...ராமாயணத்தில் பரசுராமர் கதை
பரசுராமர் சொல்கிறான். திருமால் தனக்குக் கொடுத்த வில்லை இருசிகன் என் தந்தைக்குக் கொடுத்தான். என் தந்தை எனக்குக் கொடுத்தார். இதனை நீ எளிமையாக வளைப்பாயானால் உன்னோடு நான் போருக்கு வரமாட்டேன் - என்றான்
நீ ஒடித்தது ஈன வில்.நீ எனக்கு வழியில் வந்த பகை
அரக்கன் ஒருவனைக் கொன்று என் தந்தையின் சீற்றத்தை நீக்கியவன் நான் அரசன் ஒருவன் என் தந்தைக்குக் கொடுமை செய்ததால் அரசர்கள் மீது சலிப்பு ஏற்பட்டு அவர்கள்மீது வெறுப்பு கொண்டிருக்கிறேன்.
என் தந்தைக்குக் கொடுமை செய்த அரசர் குலத்தவர் 21 உலகங்களில் எங்கு இருந்தாலும் அவர்கள் அனைவரையும் கொன்று என் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தேன்.
பின்னர் சினம் தணிந்தேன். வென்ற உலகங்களை என் தந்தைக்குக் கொடுத்துவிட்டுப் பகை ஏதுமில்லாமல் தவம் செய்துகொண்டிருந்தேன்.
அப்போது நீ வில்லை ஒடித்த ஓசை கேட்டது.நீ அரச குலத்தவன் என்பதால் உன்மேல் சினம் கொண்டு போரிட வந்துள்ளேன்.வலிமை இருந்தால் இந்த வில்லை வளை - என்றான்
இதனைக் கேட்ட இராமன் புன்முறுவல் பூத்தான் நாரணன் வளைத்த வில்லை வாங்கினான் அதனை வளைத்துக்கொண்டு எய்ய வேண்டிய இலக்கு எது என்று வினவினான்
புராண பின்புலம்
அம்மனின் வரலாறு
ரைவத மகாராஜனின் மகளாக பிறந்த ரேணுகாதேவி, கணவர் ஜமதக்னி முனிவர் இவர்களுக்கு மகனாக பிறந்தவரே விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் ஆகும், பதிவிரதை என்பதால், தினமும் கணவரின் பூஜைக்கு கமண்டல நதியில் இருந்து சுடப்படாத மண்பானையில் தண்ணீர் எடுத்து வருவது வழக்கம். அதேபோல் ஒருநாள் தண்ணீர் எடுத்துவரும்போது வான வீதியில் சென்ற கந்தர்வன் நிழலை நீரில் கண்டு அவன் அழகில் மயங்கி ஆச்சர்யம் அடைந்தாள். இதனால் மண் குடம் உடைந்து விடுகிறது. இதை ஜமதக்னி முனிவர் ஞானக்கண்ணால் கண்டு கோபம் கொண்டார். உடனே மகன் பரசுராமனை அழைத்து தாயின் தலையை வெட்டி கொண்டு வரும்படி உத்தரவிடுகிறார்.
அதன்படி பரசுராமரும் தாயின் தலையை துண்டித்தார்....அம்மனின் வரலாறு
ரைவத மகாராஜனின் மகளாக பிறந்த ரேணுகாதேவி, கணவர் ஜமதக்னி முனிவர் இவர்களுக்கு மகனாக பிறந்தவரே விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் ஆகும், பதிவிரதை என்பதால், தினமும் கணவரின் பூஜைக்கு கமண்டல நதியில் இருந்து சுடப்படாத மண்பானையில் தண்ணீர் எடுத்து வருவது வழக்கம். அதேபோல் ஒருநாள் தண்ணீர் எடுத்துவரும்போது வான வீதியில் சென்ற கந்தர்வன் நிழலை நீரில் கண்டு அவன் அழகில் மயங்கி ஆச்சர்யம் அடைந்தாள். இதனால் மண் குடம் உடைந்து விடுகிறது. இதை ஜமதக்னி முனிவர் ஞானக்கண்ணால் கண்டு கோபம் கொண்டார். உடனே மகன் பரசுராமனை அழைத்து தாயின் தலையை வெட்டி கொண்டு வரும்படி உத்தரவிடுகிறார்.
அதன்படி பரசுராமரும் தாயின் தலையை துண்டித்தார். அப்போது அதை தடுக்க முயன்ற சலவைப்பெண்ணின் தலையையும் துண்டித்தார். பின்னர் தாயின் தலையை துண்டித்துவிட்டதாக தந்தையிடம் வந்து கூறினார். இதில் மகிழ்ந்துபோன ஜமதக்னி முனிவர், பரசுராமனிடம்,உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என கூறினார். உடனே பரசுராமன் தாயை உயிர்பித்து தாருங்கள் என வரம் கேட்டார்.ஜமதக்னி முனிவர் கமண்டல நீரை மந்திரம் ஓதி அதை பரசுராமரிடம் கொடுத்து, தலையையும், உடலையும் ஒன்றாக வைத்து இந்த நீரை தெளித்தால் உன் தாய் உயிர் பெறுவாள் என கூறினார். அதை பெற்றுக்கொண்ட பரசுராமர் மகிழ்ச்சியில் வெட்டப்பட்டு கிடக்கும் தாயின் தலையை, அருகே உள்ள சலவை பெண்ணின் உடலோடும், சலவை பெண்ணின் தலையோடு தாயின் உடலையும் வைத்து இணைத்து உயிர்பித்தார். எனவே தான் ஒவ்வொரு ரேணுகாம்பாள் ஆலயத்திலும் சிரசு அம்மான்னாகவே வழிபட படுகிறது
பரசுராமர் வரலாறு
பரசுராமர் அல்லது பரசுராம பார்கவர் என்பவர் இந்து புராணங்களில் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஆவார். இவரது காலம் திரேத யுகம் ஆகும். இவர் ஜமதக்கினி - ரேணுகா இணையரின் மகன் ஆவார். பரசு என்றால் கோடாரி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து ஒரு கோடாலியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார்.
தன் தந்தை ஜமதக்கினி முனிவர் வளர்த்த தேவலோகப் பசுவை கவர்ந்து சென்ற கார்த்தவீரிய அருச்சுனனை கொன்றவர். மேலும் சத்திரிய மன்னர்களின் 21 தலைமுறைகளைக் கருவறுக்க சபதம் பூண்டவர்.
கடல் கொந்தளித்த போது இவர் அதனை அடக்கி கொங்கணக் கடற்கரைப் பகுதிகளைக் காத்தார் என்பதும் தொன்ம நம்பிக்கை.இவரது சீடர்களில் புகழ்பெற்றவர்கள் பீஷ்மர், துரோணர் மற்றும் கர்ணன் ஆவர்.இவரது கதை இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது.கேரளம் பரசுராமரின் பூமி என கேரளத்தவர்களின் தொன்னம்பிக்கை