அருள்மிகு புத்துவாய் அம்மன் திருக்கோவில் வரலாறு பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி பெருங்காடாக இருந்தபோது பனங்குப்பம் எனும் பகுதியில் இருந்து பசு ஒன்று தினமும் மேய்ச்சலுக்கு வரும்போது காட்டில் அமைந்திருந்த புற்று ஒன்றில் பால் சுரப்பதையும் இதை புற்றில் இருந்து ஒரு நாகம் சாப்பிடுவதையும் கண்ட பசுவின் மேய்ப்பன் தனது எஜமானிடம் கூற அவன் அப்பகுதி மக்களுடன் திரளாக வந்து இந்நிகழ்ச்சியை கண்டு அதிசயித்து இப்பகுதி மக்களால் புற்றினை சுற்றி ஆலயம் எழுப்பப்பட்டது. அதுவே தற்போது பல திருப்பணிகள் செய்யப்பட்டு எழில்மிகு ஆலயமாக விளங்குகிறது இத் திருக்கோவிலின் முதன்மை தெய்வம் ரேணுகாம்பாள் ஆகும் , திருக்கோவில் இரண்டாம் கருவறையில் நாக புற்று அமைதுள்ளதால் புத்துவாய் அம்மன் என்று...