அருள்மிகு தில்லைக்காளியம்மன் திருக்கோயில், சிதம்பரம் - 608001, கடலூர் .
Arulmigu Thillaikaliamman Temple, Chidambaram - 608001, Cuddalore District [TM020400]
×
Temple History
தல வரலாறு
திருக்கைலாயத்தில் அருள்மிகு பார்வதிதேவிக்கும் அருள்மிகு பரமேஸ்வரனுக்கும் சிவம் உயர்ந்ததா சக்தி உயர்ந்ததா என்ற விவாதம் ஏற்பட்டது. பார்வதி தேவி சக்திதான் உயர்ந்தது. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்று உரைத்தார். பரமேஸ்வரன் சிவமும் சக்தியும் ஒன்றே இவை இரண்டும் இல்லையேல் இப்பிரபஞ்சம் இயங்காது என்று உரைத்து, இதை உலகிற்கு உணர்த்தவும் மேலும் உலகில் உள்ள உயிர்களின் (ஜீவன்களின்) நலன்களை கருத்தில் கொண்டும், பரமேஸ்வரர் பார்வதிதேவியை காளியாக சபித்து விடுகிறார். தன் தவறை உணர்ந்த பார்வதி தேவி சாபவிமோசனம் கேட்க, அதற்கு பரமேஸ்வரன் வரும் யுகங்களில் அரக்கர்கள் குலத்தால் தேவர்கள், முனிவர்கள், நல்லோர்களுக்கு அழிவுகள் ஏற்பட உள்ளன. நீ காளியாய் இருந்து, அவ்வண்ணம் கெடுதல்கள் ஏற்படாதவாறு அரக்கர்களை அடக்கி அழித்து முடிவில் தில்லைவனத்தில்...திருக்கைலாயத்தில் அருள்மிகு பார்வதிதேவிக்கும் அருள்மிகு பரமேஸ்வரனுக்கும் சிவம் உயர்ந்ததா சக்தி உயர்ந்ததா என்ற விவாதம் ஏற்பட்டது. பார்வதி தேவி சக்திதான் உயர்ந்தது. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்று உரைத்தார். பரமேஸ்வரன் சிவமும் சக்தியும் ஒன்றே இவை இரண்டும் இல்லையேல் இப்பிரபஞ்சம் இயங்காது என்று உரைத்து, இதை உலகிற்கு உணர்த்தவும் மேலும் உலகில் உள்ள உயிர்களின் (ஜீவன்களின்) நலன்களை கருத்தில் கொண்டும், பரமேஸ்வரர் பார்வதிதேவியை காளியாக சபித்து விடுகிறார். தன் தவறை உணர்ந்த பார்வதி தேவி சாபவிமோசனம் கேட்க, அதற்கு பரமேஸ்வரன் வரும் யுகங்களில் அரக்கர்கள் குலத்தால் தேவர்கள், முனிவர்கள், நல்லோர்களுக்கு அழிவுகள் ஏற்பட உள்ளன. நீ காளியாய் இருந்து, அவ்வண்ணம் கெடுதல்கள் ஏற்படாதவாறு அரக்கர்களை அடக்கி அழித்து முடிவில் தில்லைவனத்தில் என்னை நோக்கி தவம் செய், அப்போது நான் உன்னை சிவகாமியாக ஆட்கொள்கிறேன் என்று உரைத்தார்.
இவ்வாறாக காளியாக ஆன பார்வதி தேவி ஈசனின் அருள் ஆணைப்படி தன் விருப்பப்படி பல உருவ திருமேனி தாங்கி அவ்வப்போது அவதரித்து மஹிஷாசூரன், பண்டாசூரன், தாரகாசூரன் போன்ற பல அரக்கர்களை சம்ஹாரம் செய்தார்.
அதன் பின் பார்வதி தேவி தில்லை வனத்தில் சுயம்புலிங்கமாக எழுந்தருளியுள்ள ஆதிமூலநாதரை பூஜித்து வணங்கி தவம் இருந்தார். அதுசமயம் தில்லைவனத்தில் சிவபெருமானின் ஆனந்த நடனம் காண வியக்கிரபாதர், பதஞ்சலி முனிவர்கள் சிவபெருமானை பூஜித்து தியானித்தனர். இவர்களின் பூஜைகளை ஏற்று சிவபெருமான் ரிஷிமுனிவர்களுக்கு தன் திருநடன காட்சியை காட்டி அருள் புரிந்தார். இதைக் கண்ணுற்ற பார்வதிதேவியும் உக்ரமாக ஈசனை நடனப் போட்டிக்கு அழைத்தார். நடன போட்டியின் இறுதியில் கூத்த பெருமான் ஊர்த்துவ தாண்டவம் ஆட இதற்கு இணையாக தன்னால் ஆட முடியாத நிலையில் பார்வதிதேவி வெகுண்டெழுந்து வடதிசை எல்லையில் எல்லைக்காளியாக (தில்லைக்காளி) அமர்ந்தார். பிரம்மதேவன் பார்வதிதேவியை பூஜித்து வணங்கி தாயே சினம் தணிந்து உலக உயிர்கள் இன்புற்று வாழ அருளாசி அனுகிரஹம் புரிந்தருள வேண்டுமென வேண்டிக் கொண்டதன்படி அன்னை பார்வதிதேவி சாந்தசொரூபினியாக பிரம்ம சாமுண்டீஸ்வரி, தில்லையம்மன் என்னும் திருப்பெயருடன் நான்முகியாக அமர்ந்த கோலத்தில் அருள் புரிகின்றார்.