அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில், ஸ்ரீமுஷ்ணம் - 608703, கடலூர் .
Arulmigu Poovaraga Samy Temple, Srimushnam - 608703, Cuddalore District [TM020412]
×
Temple History
தல வரலாறு
ஸ்ரீமுஷ்ணம் அருள்மிகு பூவராசுவாமி திருக்கோயில் பெருமாளின் அவதாரத்தில் மூன்றாவ்து அவதாரமான வராக அவதார சுயம்பு தலம் ஆகும். பெருமாளின் திருமேனி சாளக்கிராமத்திலான திருமேனி. தலவிருட்சம் அரசமரம். நித்தியபுஷ்கரணி என்று அழ்க்கப்படும் தீர்த்தகுளம் உள்ளது.ஸ்ரீமுஷ்ணம் அருள்மிகு பூவராசுவாமி திருக்கோயில் பெருமாளின் அவதாரத்தில் மூன்றாவ்து அவதாரமான வராக அவதார சுயம்பு தலம் ஆகும். பெருமாளின் திருமேனி சாளக்கிராமத்திலான திருமேனி. தலவிருட்சம் அரசமரம். நித்தியபுஷ்கரணி என்று அழ்க்கப்படும் தீர்த்தகுளம் உள்ளது.
தல பெருமை
தல வரலாறு
பல வருடங்களுக்கு முன் ஆதி நவாப் என்பவர் ஓர் ஊரை ஆண்டு வந்தார். ஒரு சமயம் அவர் தீராத வியாதி கண்டு மிகவும் துன்புற்றதாகவும், அவரைக் கவனித்து வந்த வைத்தியர்கள் கைவிட்ட சமயத்தில் அவ்கூர் வழியாக சென்ற மத்வ மதத்தை சார்ந்த யாத்ரிகர் ஒருவர் ஸ்ரீமுஷ்ணத்திற்கு சென்று பூவராகசுவாமியின் தீர்த்தம், துளசி பிரசாதத்துடன் தன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் நவாப் பற்றி தெரிய வரவே சுவாமி தீர்த்தத்தையும், துளசி பிரசாதத்தையும் கொடுக்க நவாப் பூரண குணமடைந்தாராம். அது முதல் நவாப் பூவராக பெருமாளிடம் பக்தி கொண்டு அவருக்கு தொண்டு புரிய விரும்பி கிழக்கு சமுத்திரம் எனும் இடத்திற்க சுவாமி எழுந்தருளும்பொழுது வழியில் எழுந்தருளியிருப்பதற்கு கிள்ளை தோப்பு...தல வரலாறு
பல வருடங்களுக்கு முன் ஆதி நவாப் என்பவர் ஓர் ஊரை ஆண்டு வந்தார். ஒரு சமயம் அவர் தீராத வியாதி கண்டு மிகவும் துன்புற்றதாகவும், அவரைக் கவனித்து வந்த வைத்தியர்கள் கைவிட்ட சமயத்தில் அவ்கூர் வழியாக சென்ற மத்வ மதத்தை சார்ந்த யாத்ரிகர் ஒருவர் ஸ்ரீமுஷ்ணத்திற்கு சென்று பூவராகசுவாமியின் தீர்த்தம், துளசி பிரசாதத்துடன் தன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் நவாப் பற்றி தெரிய வரவே சுவாமி தீர்த்தத்தையும், துளசி பிரசாதத்தையும் கொடுக்க நவாப் பூரண குணமடைந்தாராம். அது முதல் நவாப் பூவராக பெருமாளிடம் பக்தி கொண்டு அவருக்கு தொண்டு புரிய விரும்பி கிழக்கு சமுத்திரம் எனும் இடத்திற்க சுவாமி எழுந்தருளும்பொழுது வழியில் எழுந்தருளியிருப்பதற்கு கிள்ளை தோப்பு என்ற இடத்தில் ஒரு மண்டபத்தை நிர்மாணம் செய்து , அங்கு எற்சவம் நிறப்பாக நடைபெற ஏராளமான நிலபுலன்களை எழுதி வைத்தார். இதனை தொடர்ந்து பரிபாலிக்க தர்ம ஸ்தாபனம் ஒன்றையும் ஏற்படுத்தினார். இன்றும் ஸ்ரீமுஷ்ணம் தலத்தில் மாசி மாதம் நடைபெறும் பிரம்ம உற்சவத்தில் பூவராகசுவாமி தீர்த்தவாரிக்கு கிழக்கு சமுத்திரத்திற்கு எழுந்தருளும் பொழுது முகம்மதியர்கள் வசிக்கும் தைக்கால் கிராமத்தின் உள்ளே நுழைந்து வீதியில் ஊர்வலமாக வருவது வழக்கம். அப்பொழுது கிராமவாசிகள் சீர்வரிசையுடன் எதிர்கொண்டு அழைத்து நவாப் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் மசூதியின் மேல் புற வாசல் எதிரில் சுவாமியை நிறுத்தி மாலை அணிவித்து சக்கரை பழம் நைவேத்தியம் கொடுத்து கற்பூர தீபாரதனை செய்விக்கின்றனர். பின்னர் சுவாமி கோயில் சிப்பந்திகள் கற்பூர ஆரத்தியை மசூதிக்குள் எடுத்து சென்று வலம் வருகின்றனர்.
சிறப்பம்சம்.
இங்கு பெருமாள் சாளக்கிராமத்தாலான சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
தானே தோன்றிய மூர்த்தியைக்கொண்ட தலங்கள் எட்டு இதில் ஸ்ரீமுஷ்ணம் பூவராகப்பெருமாள் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
1. ஸ்ரீரங்கம்,2.ஸ்ரீமுஷ்ணம் 3.திருப்பதி 4. வானமாமலை 5.சாளக்கிராமம் 6.புஷ்கரம் 7. நைமிசாரண்யம் 8.பத்ரிகாச்ரமம் ஆகும். இதில் பூவராகசுவாமி மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தெற்க முகம் பார்த்து காட்சியளிக்கிறார்.
தல பெருமை
பெருமாளின் பத்து அவதாரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது வராக அவதாரம் ஆகும். இந்த சிறப்பு வாய்ந்த அவதார கோலத்தில் பெருமாள் இந்த ஊ.ல் இருப்பதால் இவரை வழிபடுவது மோட்சத்திற்கு செல்வதற்கான வழியாகும். அசுரர்களை வென்றதால் ஏற்பட்ட வெற்றி பெருமித உணர்ச்சி பொங்க இரு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு முகத்தை நிமிர்த்தி கம்பீரமாய் பார்க்கிறார். இங்கு பெருமாளின் மூலவர் விமானம் பாவன விமானம் ஆகும்.
புராண பின்புலம்
தல வரலாறு
பல வருடங்களுக்கு முன் ஆதி நவாப் என்பவர் ஓர் ஊரை ஆண்டு வந்தார். ஒரு சமயம் அவர் தீராத வியாதி கண்டு மிகவும் துன்புற்றதாகவும், அவரைக் கவனித்து வந்த வைத்தியர்கள் கைவிட்ட சமயத்தில் அவ்கூர் வழியாக சென்ற மத்வ மதத்தை சார்ந்த யாத்ரிகர் ஒருவர் ஸ்ரீமுஷ்ணத்திற்கு சென்று பூவராகசுவாமியின் தீர்த்தம், துளசி பிரசாதத்துடன் தன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் நவாப் பற்றி தெரிய வரவே சுவாமி தீர்த்தத்தையும், துளசி பிரசாதத்தையும் கொடுக்க நவாப் பூரண குணமடைந்தாராம். அது முதல் நவாப் பூவராக பெருமாளிடம் பக்தி கொண்டு அவருக்கு தொண்டு புரிய விரும்பி கிழக்கு சமுத்திரம் எனும் இடத்திற்க சுவாமி எழுந்தருளும்பொழுது வழியில் எழுந்தருளியிருப்பதற்கு கிள்ளை தோப்பு...தல வரலாறு
பல வருடங்களுக்கு முன் ஆதி நவாப் என்பவர் ஓர் ஊரை ஆண்டு வந்தார். ஒரு சமயம் அவர் தீராத வியாதி கண்டு மிகவும் துன்புற்றதாகவும், அவரைக் கவனித்து வந்த வைத்தியர்கள் கைவிட்ட சமயத்தில் அவ்கூர் வழியாக சென்ற மத்வ மதத்தை சார்ந்த யாத்ரிகர் ஒருவர் ஸ்ரீமுஷ்ணத்திற்கு சென்று பூவராகசுவாமியின் தீர்த்தம், துளசி பிரசாதத்துடன் தன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் நவாப் பற்றி தெரிய வரவே சுவாமி தீர்த்தத்தையும், துளசி பிரசாதத்தையும் கொடுக்க நவாப் பூரண குணமடைந்தாராம். அது முதல் நவாப் பூவராக பெருமாளிடம் பக்தி கொண்டு அவருக்கு தொண்டு புரிய விரும்பி கிழக்கு சமுத்திரம் எனும் இடத்திற்க சுவாமி எழுந்தருளும்பொழுது வழியில் எழுந்தருளியிருப்பதற்கு கிள்ளை தோப்பு என்ற இடத்தில் ஒரு மண்டபத்தை நிர்மாணம் செய்து , அங்கு எற்சவம் நிறப்பாக நடைபெற ஏராளமான நிலபுலன்களை எழுதி வைத்தார். இதனை தொடர்ந்து பரிபாலிக்க தர்ம ஸ்தாபனம் ஒன்றையும் ஏற்படுத்தினார். இன்றும் ஸ்ரீமுஷ்ணம் தலத்தில் மாசி மாதம் நடைபெறும் பிரம்ம உற்சவத்தில் பூவராகசுவாமி தீர்த்தவாரிக்கு கிழக்கு சமுத்திரத்திற்கு எழுந்தருளும் பொழுது முகம்மதியர்கள் வசிக்கும் தைக்கால் கிராமத்தின் உள்ளே நுழைந்து வீதியில் ஊர்வலமாக வருவது வழக்கம். அப்பொழுது கிராமவாசிகள் சீர்வரிசையுடன் எதிர்கொண்டு அழைத்து நவாப் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் மசூதியின் மேல் புற வாசல் எதிரில் சுவாமியை நிறுத்தி மாலை அணிவித்து சக்கரை பழம் நைவேத்தியம் கொடுத்து கற்பூர தீபாரதனை செய்விக்கின்றனர். பின்னர் சுவாமி கோயில் சிப்பந்திகள் கற்பூர ஆரத்தியை மசூதிக்குள் எடுத்து சென்று வலம் வருகின்றனர்.
சிறப்பம்சம்.
இங்கு பெருமாள் சாளக்கிராமத்தாலான சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
தானே தோன்றிய மூர்த்தியைக்கொண்ட தலங்கள் எட்டு இதில் ஸ்ரீமுஷ்ணம் பூவராகப்பெருமாள் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
1. ஸ்ரீரங்கம்,2.ஸ்ரீமுஷ்ணம்3.திருப்பதி 4. வானமாமலை 5.சாளக்கிராமம் 6.புஷ்கரம் 7. நைமிசாரண்யம் 8.பத்ரிகாச்ரமம் ஆகும். இதில் பூவராகசுவாமி மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தெற்க முகம் பார்த்து காட்சியளிக்கிறார்.
தல பெருமை
பெருமாளின் பத்து அவதாரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது வராக அவதாரம் ஆகும். இந்த சிறப்பு வாய்ந்த அவதார கோலத்தில் பெருமாள் இந்த ஊ.ல் இருப்பதால் இவரை வழிபடுவது மோட்சத்திற்கு செல்வதற்கான வழியாகும். அசுரர்களை வென்றதால் ஏற்பட்ட வெற்றி பெருமித உணர்ச்சி பொங்க இரு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு முகத்தை நிமிர்த்தி கம்பீரமாய் பார்க்கிறார். இங்கு பெருமாளின் மூலவர் விமானம் பாவன விமானம் ஆகும்.