Screen Reader Access     A-AA+
அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், குன்றின் மேல், சிங்கவரம் - 604202, விழுப்புரம் .
Arulmigu Aranganadhasamy Temple, Hill Top, Singavaram - 604202, Viluppuram District [TM020602]
×
Temple History

தல பெருமை

திருத்தல வரலாறு சுவாமி ரங்கநாதர் தாயார் ரங்கநாயகி பெயர்க்காரணம் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், செஞ்சிக்கு வடக்கே 4 கி.மீ. தொலைவில் சிங்கவரம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த ஊர் முற்காலத்தில் விஷ்ணு செஞ்சி என்றும், திருப்பன்றி குன்றம் என்றும், சிங்கபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்திருக்கோயில் மலை மீது அமைந்துள்ள அழகிய திருக்கோயிலாகும். கி.பி.570 முதல் 620க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆதாரம் மகேந்திர வர்மன் திருக்கோயில் என்ற புத்தகம் பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு காலத்தில் உண்டாக்கப்பட்டதாகவும், பின் அவர் மகன் முதலாம் மகேந்திர வர்மன் காலத்தில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தல வரலாறு இத்திருக்கோயிலில் 6.ம் நுற்றாண்டுகளுக்கு முன்பாக வராகர் திருக்கோயிலாக விஷ்ணு துரக்கையுடன் இருந்ததாகவும், அதன் பின்பு தான் ரங்கநாதர் குடவரை செதுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இத்திருக்கோயில் அடிவாரத்திலிருந்து...