அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், இளங்களம்பூர் - 608302, கடலூர் .
Arulmigu Kailasanaathar Temple, Elamkambur - 608302, Cuddalore District [TM020733]
×
Temple History
தல பெருமை
இறைவன்: அருள்மிகு கைலாசநாதர்
இறைவி: அருள்மிகு காமாட்சியம்மன்
ஊர்:இளங்கம்பூர், காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம் மற்றும் நகர் அருள்மிகு நடராஜர் திருக்கோயிலிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும் காட்டுமன்னார்கோயிலிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலும் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் சுமார் 5 கி.மீ தொலைவிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
திருவண்ணாமலையில் குகையில் அமர்ந்து அருள்பாலித்து கொண்டிருக்கும் சித்தர் குகை நமச்சிவாயர் சுவாமிகளின் சிஷ்யரும், சிதம்பரம் திருப்பாற்கடல் பகுதியில் ஜீவசமாதியாகி அருள்பாலித்து வரும் சித்தர் குரு நமச்சிவாயர் வழிவந்த சீடரால் இத்திருக்கோயிலுக்கு நில தானம் அளிக்கப்பட்டுள்ளது இத்திருக்கோயிலில் உள்ள கல்வெட்டு மூலம் தெரியவருகிறது.
இத்திருக்கோயில் இறைவனும் இறைவியும் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தந்து அருள்பாலித்து வருகின்றனர். இத்திருக்கோயிலில் சனீஸ்வரர் அருள்மிகு தண்டபானி ஆகிய தெய்வங்களுக்கு தனி...இறைவன்: அருள்மிகு கைலாசநாதர்
இறைவி: அருள்மிகு காமாட்சியம்மன்
ஊர்:இளங்கம்பூர், காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம் மற்றும் நகர் அருள்மிகு நடராஜர் திருக்கோயிலிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும் காட்டுமன்னார்கோயிலிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலும் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் சுமார் 5 கி.மீ தொலைவிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
திருவண்ணாமலையில் குகையில் அமர்ந்து அருள்பாலித்து கொண்டிருக்கும் சித்தர் குகை நமச்சிவாயர் சுவாமிகளின் சிஷ்யரும், சிதம்பரம் திருப்பாற்கடல் பகுதியில் ஜீவசமாதியாகி அருள்பாலித்து வரும் சித்தர் குரு நமச்சிவாயர் வழிவந்த சீடரால் இத்திருக்கோயிலுக்கு நில தானம் அளிக்கப்பட்டுள்ளது இத்திருக்கோயிலில் உள்ள கல்வெட்டு மூலம் தெரியவருகிறது.
இத்திருக்கோயில் இறைவனும் இறைவியும் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தந்து அருள்பாலித்து வருகின்றனர். இத்திருக்கோயிலில் சனீஸ்வரர் அருள்மிகு தண்டபானி ஆகிய தெய்வங்களுக்கு தனி சன்னதி அமையப்பெற்றுள்ளது. தென்புறம் தட்சணாமூர்த்தி மேற்கில் லிங்கோத்பவர் வடக்கில் பிரம்மா ஆகியோர் கோஷ்டத்திலிருந்து அருள்பாலிக்கின்றனர். பழமையான இத்தலம் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல்பெற்ற ஸ்தலமான அருள்மிகு சுயம்பிரகாச ஈஸ்வரர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ள திருநாரையூர் கிராமத்திற்கு கிழக்கில் சுமார் மூன்று கி.மீ தொலைவில் அமைந்துள்ள குறிப்பிடத்தக்கது. திருக்கோயில் அருகில் திருக்குளம் அமைந்துள்ளது. இயற்கை எழிலுற இரண்டு புறமும் வயல்வெளி சூழ ரம்மியமாக காட்சியளிக்கிறது இத்திருத்தலம்.