அருள்மிகு கிருக்ஷ்ணசாமி திருக்கோயில், அகரம்பரங்கிப்பேட்டை - 608602, கடலூர் .
Arulmigu Krishnasami Temple, Agaramparankipettai - 608602, Cuddalore District [TM020964]
×
Temple History
தல வரலாறு
நூறு ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி தில்லை மரங்களைக் கொண்ட வனமாக இருந்தது இவ்வூரில் கிருஷ்ண பக்தர் ஒருவர் இருந்தார் இன்னமும் கிருஷ்ணரின் லீலைகளை மக்களிடத்தில் சொல்வதையும் கிருஷ்ணரைப் பற்றி பாடுவதையும் அந்த பக்தர் வழக்கமாகக் கொண்டிருந்தார் இவரை கிருஷ்ணர் பாட்டுக்காரர் என்றுதான் மக்கள் அழைப்பார்கள் இவர் வந்துவிட்டால் போதும் அந்த பகுதியே பக்தி மணம் கமழும் கணீர் குரலில் கிருஷ்ணன் பாடல்களைப் பாடுவார் நடனமாடுவார் மக்கள் அதை வெகுவாக ரசித்தார்கள் கிருஷ்ணருக்கு மனதுக்குள் ஒரு ஆசை இருந்தது அது கிருஷ்ணருக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்பது தான் அதை மற்றவர்களிடம் சொல்லி வந்தார் ஊர் மக்களோ நீயே ஊரில் யார் வீட்டு திண்ணையில உறங்குகிறாய் முதலில் உனக்கு ஒரு வீட்டை விட்டு...நூறு ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி தில்லை மரங்களைக் கொண்ட வனமாக இருந்தது இவ்வூரில் கிருஷ்ண பக்தர் ஒருவர் இருந்தார் இன்னமும் கிருஷ்ணரின் லீலைகளை மக்களிடத்தில் சொல்வதையும் கிருஷ்ணரைப் பற்றி பாடுவதையும் அந்த பக்தர் வழக்கமாகக் கொண்டிருந்தார் இவரை கிருஷ்ணர் பாட்டுக்காரர் என்றுதான் மக்கள் அழைப்பார்கள் இவர் வந்துவிட்டால் போதும் அந்த பகுதியே பக்தி மணம் கமழும் கணீர் குரலில் கிருஷ்ணன் பாடல்களைப் பாடுவார் நடனமாடுவார் மக்கள் அதை வெகுவாக ரசித்தார்கள் கிருஷ்ணருக்கு மனதுக்குள் ஒரு ஆசை இருந்தது அது கிருஷ்ணருக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்பது தான் அதை மற்றவர்களிடம் சொல்லி வந்தார் ஊர் மக்களோ நீயே ஊரில் யார் வீட்டு திண்ணையில உறங்குகிறாய் முதலில் உனக்கு ஒரு வீட்டை விட்டு பிறகு கிருஷ்ணருக்கு ஆலயம் கட்டலாம் என்று ஏளனமாகப் பேசுவார்கள் அதனால் இனி கிருஷ்ணர் ஆலயம் கட்டும் வரை உறங்கப் போவதில்லை என்று வைராக்கியத்துடன் கிருஷ்ணா கிருஷ்ணா என்று கூறியவாறு ஊரையே சுற்றி வந்தார்அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு விட்டதாக மக்கள் எண்ணத் தொடங்கினர் ஒருநாள் சோர்வாக ஓரிடத்தில் அமர்ந்தார் இருந்தாலும் அவர் வாய் கிருஷ்ண நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தது அப்போது சிலர் இவரின் தீவிரமான பக்தியை கண்டு வியந்து முதலில் நன்றாக உறங்குங்கள் மறுநாள் நம் ஊர் மக்களிடம் சென்று பொருளீட்டி கோயில் கட்ட தொடங்குவோம் எப்போதும் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று ஆறுதல் கூறினேன் அன்று இரவு அவர் கனவில் தோன்றி உன் ஆசை நிச்சயம் நிறைவேறும் காளிங்க நர்த்தன கிருஷ்ணன் ஆகியோர் எழுந்தருளி உங்கள் எல்லோரையும் காப்பேன் என்று கூறினார் மறுநாள் அவரை தேடி ஊர் மக்கள் சிலர் வந்தனர் இரவில் வந்த கனவைப் பற்றி அவர்களிடம் கூறினார் மகிழ்ச்சியுடன் அனைவரும் கோயில் கட்ட பொருள் தேடிச் சென்றனர் விரைவில் அவர்களுக்கு தேவையான பணமும் பொருளும் கிடைக்க சிறிய ஆலயம் எழுப்பப்பட்டது சில ஆண்டுகள் அவரை அந்த கோயில் பூஜைகள் செய்து வந்தார் வயது மூப்பு காரணமாக அவர் மறைந்து விட அதன் பின்னர் கோயில் மக்களை மக்கள் சிறப்பாக பராமரித்து வருகிறார்கள் கோயில் முகப்பில் இரு புறமும் கருடன்கள் இருக்க நடுவில் காளிங்க நர்த்தன தரிசனம் தருகிறார் அவர்களை வணங்கி விட்டு உள்ளே சென்று தன் அதிலுள்ள மடப்பள்ளி நாச்சியார் தும்பிக்கை ஆழ்வார் நம்மாழ்வார் கருடாழ்வாரை தரிசிக்கிறோம் அடுத்து கருவறையில் காட்சி தருகிறார் கிருஷ்ணன் எத்தகைய கஷ்டங்களில் இருந்து காத்து ரட்சிக்க இவரின்ஆண்டு திருவிழாவாக கிருஷ்ண ஜெயந்தி மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது காலையில் திருமணம் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவார் கிருஷ்ணர் மறுநாள் நடக்கும் உறியடி உற்சவத்தில் சுற்று வட்டார கிராம மக்களும் பெருமளவில் கலந்து கொள்வார்கள் சுவாதி நட்சத்திரத்தன்று சிறப்பு பிரார்த்தனை செய்யப்படுகிறது குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் மூலவர் கிருஷ்ணனுக்கு வெண்ணை காப்பு சாத்துவார்கள் அதிலிருந்து சிறிது வெண்ணையை எடுத்து வெற்றிலையில் மடித்து கொடுப்பார்கள் அதையே பிரசாதமாக பெற்று ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே என்று சொல்லியபடி தம்பதியர் இருவரும் சாப்பிட விரைவில் குழந்தை பேறு கிட்டும் திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்து குறைகள் நீங்கி விரைவில் திருமணம் நடந்தவுடன் தம்பதி வந்து நேர்த்திக் கடனாக திருமஞ்சனம் செய்து வருகிறார்கள் இவ் ஆலயத்தில் அமர்ந்து கண்மூடி ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா என்று மாதவன் திரு நாமத்தை 108 முறை சொன்னால் நம் மனக் குறைகள் நீங்கும் என்பது நம்பிக்கை
தல பெருமை
கருப்பூர் கிருஷ்ண அயர் பரம்பரையால் குழந்தை வரம் வேண்டி கட்டப்பட்ட திருக்கோயில்கருப்பூர் கிருஷ்ண அயர் பரம்பரையால் குழந்தை வரம் வேண்டி கட்டப்பட்ட திருக்கோயில்