நூறு ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி தில்லை மரங்களைக் கொண்ட வனமாக இருந்தது இவ்வூரில் கிருஷ்ண பக்தர் ஒருவர் இருந்தார் இன்னமும் கிருஷ்ணரின் லீலைகளை மக்களிடத்தில் சொல்வதையும் கிருஷ்ணரைப் பற்றி பாடுவதையும் அந்த பக்தர் வழக்கமாகக் கொண்டிருந்தார் இவரை கிருஷ்ணர் பாட்டுக்காரர் என்றுதான் மக்கள் அழைப்பார்கள் இவர் வந்துவிட்டால் போதும் அந்த பகுதியே பக்தி மணம் கமழும் கணீர் குரலில் கிருஷ்ணன் பாடல்களைப் பாடுவார் நடனமாடுவார் மக்கள் அதை வெகுவாக ரசித்தார்கள் கிருஷ்ணருக்கு மனதுக்குள் ஒரு ஆசை இருந்தது அது கிருஷ்ணருக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்பது தான் அதை மற்றவர்களிடம் சொல்லி வந்தார் ஊர் மக்களோ நீயே ஊரில் யார் வீட்டு திண்ணையில உறங்குகிறாய் முதலில் உனக்கு ஒரு வீட்டை விட்டு...