அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், Melakadambur - 608304, கடலூர் .
Arulmigu Amirthakadeswarar Temple, Melakadambur - 608304, Cuddalore District [TM021827]
×
Temple History
தல வரலாறு
ஸ்தல வரலாறு :
முதலாம் குலோத்துங்கன் அவையில் ராஜகுருவாக கவுட (வங்காளம்) தேசத்திலிருந்து சிதம்பரம் நடராஜரை தரசிக்க வந்த ஸ்ரீகந்தசிவன் என்பவர் இருந்தார். இவர் தன்னுடன் ரிஷப தாண்டவமூர்த்தி மேல்நோக்கிய ரிஷபத்தின்மேல், வீசிய பத்து கரங்களில் கத்தி, சூலம், தீச்சட்டி, காபலம், பாம்பு, கேடயம், தண்டம், குத்தீட்டி ஏந்தி பிரளயகாலத்தில் சகல ஜீவன்களும் தன்அடி சேர்ந்திட காட்சியினை காட்டிடும் அற்புத கலை படைப்பு உடைய ஓர் அற்புதமான சிறிய செப்பு திருமேனியினை கொணர்ந்தார். பிரளயகாலத்தில் உலக ஜீவராசிகள் அனைத்தும் பரம்பொருளான சிவன் காலடியில் அடைக்கலமாகின்றன. ரிஷபத்தின் மேல் நின்று பிரளய தாண்டவமாடி அருள்பாலிக்கிறார்.
முதலாம் குலோத்துங்க சோழனின் வேண்டுகோளின்படி ராஜகுரு ஸ்ரீ கண்ட சிவம் கி.பி. 1110ல் கடம்பூரில் தங்கி திருக்கரக்கோயில் நிர்மான திருப்பணி...ஸ்தல வரலாறு :
முதலாம் குலோத்துங்கன் அவையில் ராஜகுருவாக கவுட (வங்காளம்) தேசத்திலிருந்து சிதம்பரம் நடராஜரை தரசிக்க வந்த ஸ்ரீகந்தசிவன் என்பவர் இருந்தார். இவர் தன்னுடன் ரிஷப தாண்டவமூர்த்தி மேல்நோக்கிய ரிஷபத்தின்மேல், வீசிய பத்து கரங்களில் கத்தி, சூலம், தீச்சட்டி, காபலம், பாம்பு, கேடயம், தண்டம், குத்தீட்டி ஏந்தி பிரளயகாலத்தில் சகல ஜீவன்களும் தன்அடி சேர்ந்திட காட்சியினை காட்டிடும் அற்புத கலை படைப்பு உடைய ஓர் அற்புதமான சிறிய செப்பு திருமேனியினை கொணர்ந்தார். பிரளயகாலத்தில் உலக ஜீவராசிகள் அனைத்தும் பரம்பொருளான சிவன் காலடியில் அடைக்கலமாகின்றன. ரிஷபத்தின் மேல் நின்று பிரளய தாண்டவமாடி அருள்பாலிக்கிறார்.
முதலாம் குலோத்துங்க சோழனின் வேண்டுகோளின்படி ராஜகுரு ஸ்ரீ கண்ட சிவம் கி.பி. 1110ல் கடம்பூரில் தங்கி திருக்கரக்கோயில் நிர்மான திருப்பணி செய்து வந்துள்ளார். பின்னர் தன் உபாசன மூர்த்தியான ரிஷபத் தாண்டவ மூர்த்தியை இங்கேயே விட்டுச் சென்றிருக்கலாம் என்பது ஆராட்சியாளர்களின் கணிப்பு. இம்மூர்த்தியை பிரதோஷ நாட்களில் வணங்குவது சிறப்பு. இதுபோல் ஓர் கற்சிற்பம் கிழக்கு வங்காளத்தில் உள்ளதாக அறியபடுகிறது.
ராஜேந்திர சோழ மன்னன் வாதாபி வரை படை நடத்தி சென்று வரும்போது அங்குள்ள மன்னர்களின் கோட்டை வாயில் கணபதி சிலைகளையும், துபாரபாலகர் சிலைகளையும் எடுத்து வந்து தமிழகத்தில் பிரதிஷ்டை செய்தான். இதன் பின்னரே விநாகர் வழிபாடு தென்னிந்தியாவில் வேரூன்ற ஆரம்பித்தது. துவாரபாலகர் சிலைகள் தஞ்சை சரஸ்வதி மஹாலில் வைக்கப்பட்டுள்ளன.
என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற பதிகத்தை அப்பர் சுவாமிகள் பாடிய தலம் இத்திருத்தலம் ஆகும்.
தல பெருமை
ஸ்தல புராணம் :
அசுரர்களும், தேவர்களும் திருப்பாற்கடலைக் கடைந்து அமிர்த கலசத்தினை பெற்ற பின், தேவர்கள் முழுமுதற்கடவுளான விநாயகரை வணங்காமல் அமுதுண்ண அமர்கிறார்கள். இவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணிய விநாயகர் அமிர்த கலசத்தினை பூலோகத்தில் மறைத்து வைக்கிறார். அவ்வாறு எடுத்து வந்து மறைத்து வைக்க முற்படுகையில் ஓர் துளி அமிர்தம் கடம்ப வனக்காட்டில் வீழ்ந்து சுயம்புலிங்க மூர்த்தியாகிறது. கடம்பவனக்காடு இந்நாளில் கடம்பூர் எனவும், தல மரம் கடம்ப மரமாகவும் ஆனது. இதனால் இத்தல இறைவன் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார். இவர் சாந்த மூர்த்தியாகவும், காலசம்ஹார மூர்த்தியாகவும் அருள் பாளிக்கிறார்.
இக்கோயில் லிங்க மூர்த்தி சுயம்புலிங்க மூர்த்தியாக உருவானவர். எனவே, தொப்புள் ஸ்தானமாக கருதப்படும் கொடிமரம் இல்லை. மேலக்கடம்பூர் கோயில் கரக்கோயில் வகையினை...ஸ்தல புராணம் :
அசுரர்களும், தேவர்களும் திருப்பாற்கடலைக் கடைந்து அமிர்த கலசத்தினை பெற்ற பின், தேவர்கள் முழுமுதற்கடவுளான விநாயகரை வணங்காமல் அமுதுண்ண அமர்கிறார்கள். இவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணிய விநாயகர் அமிர்த கலசத்தினை பூலோகத்தில் மறைத்து வைக்கிறார். அவ்வாறு எடுத்து வந்து மறைத்து வைக்க முற்படுகையில் ஓர் துளி அமிர்தம் கடம்ப வனக்காட்டில் வீழ்ந்து சுயம்புலிங்க மூர்த்தியாகிறது. கடம்பவனக்காடு இந்நாளில் கடம்பூர் எனவும், தல மரம் கடம்ப மரமாகவும் ஆனது. இதனால் இத்தல இறைவன் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார். இவர் சாந்த மூர்த்தியாகவும், காலசம்ஹார மூர்த்தியாகவும் அருள் பாளிக்கிறார்.
இக்கோயில் லிங்க மூர்த்தி சுயம்புலிங்க மூர்த்தியாக உருவானவர். எனவே, தொப்புள் ஸ்தானமாக கருதப்படும் கொடிமரம் இல்லை. மேலக்கடம்பூர் கோயில் கரக்கோயில் வகையினை சார்ந்தது. நான்கு சக்கரங்களுடன் கிழக்கு நோக்கி குதிரைகள் பூட்டிய வண்ணம் அழகிற தேர் வடிவில் அமைக்கப்பெற்று சிறப்புடன் காட்சியளிக்கிறது. இந்திரனின் தாய் இத்தலத்து இறைவனை நாள்தோறும் விண்ணுலகில் இருந்து பூசித்து வந்தாள்.
தன் தாயின் கடமையை எளிதாக்க எண்ணி இந்திரன் இக்கோயிலை கரங்களால் அகழ்ந்து, சக்கரம் பூட்டி குதிரைகளை பிணைத்து இடிக்க முயலுகையில், விநாயகரை வணங்காமல் காரியம் செய்ய முற்பட்டதனால் வெகுண்ட விநாயகர் ஆரவாரத்துடன் தன் கால் பெருவிரலால் தேரை அழுத்த தேர் சக்கரம் புதையுண்டு கல்லாய் சமைந்தது. இப்புராண வரலாற்றினை நினைவூட்டும் வகையில் கரக்கோயில் சக்கரம் வடமேற்கு மூலையில் புதைந்துள்ளதையும் காணலாம். இக்கரக்கோயில் கர்ப்பக்கிரகத்தின் வடமேற்குமூலை சற்று சாய்ந்த நிலையில் அமைக்கப் பெற்றிருக்கிறது.