இத்தலம் சிதம்பரத்தின் தென்மேற்கே 30 கி.மீ தூரத்திலும், காட்டுமன்னார்கோயிலிலிருந்து எய்யலூர் செல்லும் பாதையில் 6 கி.மீ தூரத்தில் உள்ளது.என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற பதிகத்தை அப்பர் சுவாமிகள் பாடிய தலம் இத்திருத்தலம் ஆகும்.அசுரர்களும், தேவர்களும் திருப்பாற்கடலைக் கடைந்து அமிர்த கலசத்தினை பெற்ற பின், தேவர்கள் முழுமுதற்கடவுளான விநாயகரை வணங்காமல் அமுதுண்ண அமர்கிறார்கள். இவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணிய விநாயகர் அமிர்த கலசத்தினை பூலோகத்தில் மறைத்து வைக்கிறார். அவ்வாறு எடுத்து வந்து மறைத்து வைக்க முற்படுகையில் ஓர் துளி அமிர்தம் கடம்ப வனக்காட்டில் வீழ்ந்து சுயம்புலிங்க மூர்த்தியாகிறது. கடம்பவனக்காடு இந்நாளில் கடம்பூர் எனவும், தல மரம் கடம்ப மரமாகவும் ஆனது. இதனால் இத்தல இறைவன் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார். இவர் சாந்த...