தல பெருமை
அருள்மிகு கங்காதரேசுவரர் திருக்கோயில் ஸ்தல புராணம் புரசு வனம் பூத்துக் குலுங்கி எரியும் தழல் போன்று காட்சி தரும் புரசு மலர்களைக்காணும் போது இம்மரங்கள் எல்லாம் வேள்வி செய்வதாய் தோன்றியது. புரசு வனத்துப்பறவைகள் எழுப்பும் விதவிதமான கீச் கீச் ஒலிகள் வேதகானமாய் அந்தபிரதேசத்தைப் புனிதப்படுத்திக் கொண்டிருந்தன. பார்த்தவுடன் மனதில் பசுமையாய்ஒட்டிக்கொள்ளும் அழகு வனம்... இதில் வாசம் செய்ய யாருக்குத்தான் ஆசைஇருக்காது அப்படியொரு ஆசை அரசனுக்குள் எழுந்தது.சூரியகுலத்து வேந்தன் சகரன் அயோத்தியை தலைநகரமாக கொண்டு மிகஅற்புதமாக அரசாண்டு வந்தான். தனது நாடும் மக்களும் நலமுடன் வாழ அஸ்வமேதயாகம் தொடங்கினான். வேள்விக் குதிரையை ஒவ்வொரு தேசமாய அனுப்பிய போதுதனது பதவிக்கு இது ஆபத்தாக முடியுமோ என அஞ்சிய இந்திரன் வேள்விக்குதிரையை கவர்ந்து சென்று பாதாள...அருள்மிகு கங்காதரேசுவரர் திருக்கோயில் ஸ்தல புராணம் புரசு வனம் பூத்துக் குலுங்கி எரியும் தழல் போன்று காட்சி தரும் புரசு மலர்களைக்காணும் போது இம்மரங்கள் எல்லாம் வேள்வி செய்வதாய் தோன்றியது. புரசு வனத்துப்பறவைகள் எழுப்பும் விதவிதமான கீச் கீச் ஒலிகள் வேதகானமாய் அந்தபிரதேசத்தைப் புனிதப்படுத்திக் கொண்டிருந்தன. பார்த்தவுடன் மனதில் பசுமையாய்ஒட்டிக்கொள்ளும் அழகு வனம்... இதில் வாசம் செய்ய யாருக்குத்தான் ஆசைஇருக்காது அப்படியொரு ஆசை அரசனுக்குள் எழுந்தது.சூரியகுலத்து வேந்தன் சகரன் அயோத்தியை தலைநகரமாக கொண்டு மிகஅற்புதமாக அரசாண்டு வந்தான். தனது நாடும் மக்களும் நலமுடன் வாழ அஸ்வமேதயாகம் தொடங்கினான். வேள்விக் குதிரையை ஒவ்வொரு தேசமாய அனுப்பிய போதுதனது பதவிக்கு இது ஆபத்தாக முடியுமோ என அஞ்சிய இந்திரன் வேள்விக்குதிரையை கவர்ந்து சென்று பாதாள லோகத்தில் கபில முனிவர் தவம் செய்யும்குகையில் கட்டி வைத்தான்.குதிரையைக் காணாது தவித்த சகரன் குதிரையைத் தேட தனது அறுபதாயிரம்புதல்வர்களை அனுப்பினான். தவத்தில் ஆழ்ந்திருந்த கபிலர் தான் குதிரையை கவர்ந்துகொண்டு வந்திருப்பார் என எண்ணிய சகர புத்திரர்கள் கபிலரைத் தாக்கினர்.கடுங்கோபம் கொண்ட கபிலர் தம் தவ வலிமையால் சகர புத்திரர்கள் அனைவரையும்சாம்பலாக்கினார்.தனது புதல்வர்கள் நாடு திரும்பாததைக் கண்டு கலங்கிய சகரன் அவர்களைத்தேடி வர தனது பேரன் அம்சுமானை அனுப்பினான். கபிலரை சந்தித்த அம்சுமான்அவரைப் பணிந்து வணங்கினான். நடந்தவை அனைத்தையும் அவரிடம் கேட்டுத்தெரிந்து கொண்டான். ஆகாச கங்கையை பூமிக்கு கொண்டு வந்து அந்தப் புனிதநீரினால் பாதாளத்தில் உள்ள சகர குமாரர்களின் சாம்பலைக் கரைத்தால் அவர்கள்சாபம் நீங்கி நற்கதியடைவார்கள் என்பதையும் தெரிந்து கொண்டான். கபிலரின்அனுமதியோடு யாகக் குதிரையை மீட்டு வந்து சகரனிடம் சேர்த்தான். வேள்வி இனிதேநிறைவேறியது.தொடர்ந்து தனது முன்னோர்களின் சாபம் நீங்க கங்கையை பூமிக்கு கொண்டுவரும் முயற்சியில் இறங்கிய அம்சுமான் கடுந்தவம் புரிந்தான். பலனில்லை.அம்சுமானின் தவத்தை அவரது வாரிசான திலீபனும் மேற்கொண்டான். கங்கையைபூமிக்கு கொண்டு வர தளராது உழைத்தான். அவன் வாழ்நாளில் அந்தப் பெரியபணியை முடிக்க முடியவில்லை.திலீபனைத் தொடர்ந்தான் பகீரதன். ஈசனின் கருணையால் பகீரதனின்கோரிக்கை நிறைவேறியது. ஆகாச கங்கையை தன் முடியில் தாங்கி ஈசன் பூமியில்மெல்ல ஓட விட்டார். பகீரதன் கங்கையை அழைத்து சென்று பாதாள லோகத்தில்இருக்கும் தன் முன்னோர்களின் சாம்பலை அதன் புனித நீரில் கரையச் செய்தான். சகரபுத்திரர்கள் சாபம் நீங்கி நற்கதி அடைந்தனர். இந்தியாவில் இருந்து நேர்க்கோடாகஅடியில் உள்ள அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா தான் இந்தியாவின் பாதாளஆஷ் ஐலண்ட் சாம்பல் தீவுஎன்று பெயர். இந்திரன் குதிரையை கட்டிய சாம்பல் தீவில்தண்ணீர் வற்றுவதே இல்லை இவையெல்லாம் கூடுதல் தகவல்.கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றிய பகீரதன் அயோத்தியின்சிம்மாசனத்தில் அமர்ந்து அரசாள தொடங்கினான். காலப்போக்கில் இறை வழிபாட்டைமறந்தான். கங்கையின் வேகத்தை தம் சிரசில் ஏற்று தம் முன்னோர்களின் சாபம் நீங்ககருணை காட்டிய ஈசனையும் ராஜ போகம் தந்த சுகம் மறக்கச் செய்தது.பகீரதனுக்கு பாடம் புகட்ட ஈசன் திருவுளம் கொண்டார்.அயோத்தி ராஜ தர்பார். ஆடல் அணங்குகளின் நடனத்தில் மூழ்கித்திளைத்திருந்தான் பகீரதன். அதனால் நாரத மகரிஷியின் வருகையைக் கூடகவனிக்காதிருந்தான். பகீரதனின் மிதமிஞ்சிய போகமும் அதனால் அவன் காட்டியஅலட்சியமும் நாரதருக்கு கோப மூட்டியது. பெண்களிடம் மோகம் கொண்ட உனக்குமேக நோய் பீடிக்கட்டும் என்று பகீரதனுக்கு சாபமிட்டார். கடவுளின் கோபத்திற்குபிராயசித்தம் உண்டு. முனிவரின் சாபத்திற்குதவறை உணர்ந்த பகீரதன் நாரத முனிவரின் பாதம் பற்றி அழுதான்.மன்னித்தருளுமாறு கதறினான். உடனே கருணையால் கனிந்த நாரதர் பகீரதா...இதுவும் பரமனின் திருவிளையாடலே. கவலைப்படாதே பாரத தேசமெங்கும்சிவலிங்கங்களைப்பிரதிஷ்டை செய்து வழிபடு. ஒன்று ஆயிரம் எட்டுவது லிங்கப் பிரதிஷ்டையின் போதுசாபம் நீங்கி நலம் பெறுவாய் என்றார்.அதன்படி நாடு நெடுக லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட பகீரதன்நிறைவாக ஒன்று ஆயிரம் எட்டுவது லிங்கத்தை எங்கு பிரதிஷ்டை செய்வது என்று கண்மூடிஇறைவனை வேண்டினான்.இடையறாத இறை சிந்தனை அவனை வெகுவாய் கனிய வைத்திருந்தது.தவத்தின் தணலில் பகீரதனின் ஆணவம் சாம்பலாகிப் போனது. அப்போது அவனதுமனதில் நெருப்பு மலர்களாய் பூத்துக் குலுங்கும் புரசு வனம் தோன்றியது. அங்கே ஒன்று ஆயிரம் எட்டுவது லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட இறைவனின் ஆணை கிடைத்தது.அதன்படி பாரதத்தின் தென்பகுதியில் உள்ள புரசுக் காட்டை அடைந்தான்.வனத்தின் அழகில் மனம் லயித்த பகீரதன் ஒரு பெரிய புரசு மரத்தின் கீழ் லிங்கப்பிரதிஷ்டை செய்தான். அதற்கு அபிஷேகம் செய்ய புனித நீர் வேண்டுமேனபிரார்த்தித்தான். அங்கே கங்கை பிரசன்னமானாள். அந்த கங்கா தீர்த்தத்தைக்கொண்டு அபிஷேகம் செய்து உள்ளமுருக வழிபட்டான். அப்போது ஈசன் தோன்றிபகீரதனின் சாபம் நீக்கி அவனது நோயைமறையச் செய்தருளினார்.பகீரதனின் நோய் தீர்த்த ஈசன் இந்த புரசு வனத்திலேயே கங்காதரேசுவரர்என்ற திருநாமத்தோடு கோயில் கொண்டு இன்றும் தம்மை நாடிவரும்அடியார்களின்துயரங்களை துடைத்து அவர்களின் வாழ்வில் வளம் சேர்த்துஅருள்கிறார். பகீரதனுக்கு காட்சிதந்த பரமனை நாமும் தரிசிக்கலாம் வாருங்கள்.ஸ்தல வரலாறுஅன்று புரசு மரக்காடாய் இருந்த பகுதி இன்று புரசைவாக்கம் என்ற பெயரோடுசென்னையின் மத்தியில் இருக்கிறது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரண்டு கி.மீ.தொலைவில் புரசைவாக்கம் செல்லும் சாலையில் கங்காதரேசுவரர் கோயில்அமைந்துள்ளது.இத்திருக்கோயில் நாற்பது எட்டுமீட்டர் நீளமும் இருபது எட்டுமீட்டர் அகலமும் கொண்ட இரண்டு ஆயிரம் எழுநூறு நான்கு சதுர மீட்டர்நிலப்பரப்பில் உள்ளது.கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாமென்ற மூதுரைக் கிணங்ககுடியேறிய காலத்திலேயே ஏற்பட்ட இந்தச் சிவன் கோயிலின் மூல லிங்கத்தின்ஆவுடையார் சதுரமானது. குலோத்துங்கச் சோழன் காலத்தில் இந்தக் கோயில்இருந்திருக்கிறது. சுந்தரர் தம் பதிகத்தில் இந்தக் கோயில் இறைவனைபாடியிருக்கிறார் என்ற கோயில் புள்ளிக் கணக்கில் உள்ள குறிப்பு பா.ஏழு மறுக்கப்படுகிறது. இப்போதுள்ள கட்டடம் நூறு ஐம்பது ஆண்டுகட்கு முற்பட்டது.திருக்கோயில் அமைப்புகிழக்கு நோக்கிய கோயிலின் ராஜகோபுரம் புதிநூறு ஐம்பது ய வர்ணப்பூச்சுகளோடு அழகாய்கம்பீரமாய் காட்சி தருகிறது. தற்போது தான் குடமுழுக்கு செய்யப்பட்ட பொலிவுடன்துலங்குகிறது கோபுரம். கோயிலுள் நுழைந்து கொடிமரம் பலிபீடம் நந்தியை கடந்துகாட்சி தரும்கங்காதரேசுவரரை முதல் தரிசனமாக தொலைவிலேயே கண்ணாரக்கண்டு பிரகாரத்தை வலம் வரலாம்.வைத்தீஸ்வரர் சன்னதிவைத்தீஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட லிங்கத் திருமேனி தரிசனம் தருகிறது.இவர் முதலில் மேடவாக்கம் குளச்சாலையில் ஒரு பூந்தோட்டத்தில் இருந்தார். அருகில்சுடுகாடு. இந்த வைத்தீஸ்வரரை தினமும் வழிபடும் பூக்கார பக்தர் தினமும்கங்காதரேசுவரருக்குப் பூ கொண்டு செல்வார். சுடுகாட்டுப் புகை பூந்தோட்ட ஈசன் மீதுவீசிக் கொண்டிருப்பது அவரை வருந்தியது. உடனே வைத்தீஸ்வரரை தான் பூகொடுக்கும் கங்காதரேசுவரர் கோயில் அருகே கொண்டு வந்து நிறுவி விட்டார். அன்றுமுதல் இவர் இங்கேயே குடிகொண்டு அருள் புரிந்து வருகிறார். இவருக்கருகில்விநாயகருக்கு தனிச் சந்நதி. அதற்கு எதிரே வில்வ மரமும் ஆலய அலுவலகமும்இருக்கின்றன.அதைக் கடந்து சென்றால் அம்பாள் பங்கஜவல்லி சந்நதியின் கொடிமரமும்சிம்மமும் காட்சி தருகின்றன. அங்கிருந்து தெற்கு முகமாய் நிற்கும் அன்னையைகாணலாம். தொடர்ந்து நடந்தால் புதியதாக ஒரு மண்டபம் எழுப்பி அதில் லிங்கமும்நந்தியும் பிரதிஷ்டை செய்துள்ளார்கள். இது குருந்தமரத்தடியேஸ்வரர் என்ற திருநாமம்கொண்டு விளங்குகிறது. குருந்த மரத்தடியில் இருப்பதால் இப்பெயர் பெற்றன. இந்தலிங்கத் திருமேனிக்கு வட இந்திய பக்தர்கள் தம் வழக்கப்படி தம் கரங்களாலேயேஅபிஷேக ஆராதனை செய்து வழிபடுவதற்காக பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதற்கடுத்த காட்சி வியப்பால் விழிகளை விரிய வைக்கிறது. ஆம் சுமார் ஐம்பதுஅடி உயரம் கொண்ட சிவபெருமானின் விஸ்வரூப தரிசனம் தான் அது. இந்தசிவபெருமானுக்கு கீழே லிங்கத் திருமேனிக்கு பகீரதன் பூஜை செய்வது போலஅமைந்துள்ள இந்த சுதைச் சிற்பம் இந்த ஆலயம் அமைந்த கதையை பளிச்சென்றுவிவரிக்கிறது. இங்கே இன்னொரு விசேஷமும் இருக்கிறது. தினமும் மாலை ஏழுமணிக்கு இந்த இடத்தில் பக்தர்கள் ஆலய வரலாற்றை தெரிந்து கொள்ள வசதியாகஒளி ஒலி காட்சி நடத்தி வருகிறது ஆலய நிர்வாகம். கம்பீரமாய் உயர்ந்து நிற்கும்சிவபெருமானின் சிலை வண்ண விளக்குகளுக்கு மத்தியில் அழகாய் ஒளிர கம்பீரமாய்ஒரு குரல் ஆலய வரலாற்றை சொல்லக் கேட்பது சுகமான தெய்வீக அனுபவம். சுமார் நிமிடங்கள் ஒலி ஒளிபரப்பாகிறது. இதைக் காண பெரும்பாலும் குழந்தைகளும்இளைஞர்களுமே அதிக ஆவலோடு வருவதும் அவர்களிடையே ஆன்மிகம்சிறந்தோங்கி வளர்ந்திருப்பதை உணர முடிகிறது. இந்த சிவனை வலம் வந்து வணங்கமென்மையான பாதையும் பாதை இருநெடுகிலும் கண்கவர் பூச்செடிகளையும்வைத்திருக்கிறார்கள்.பிரகாரத்தில் சத்தியநாராயண பெருமாள் கோயில்அருகே நெருப்புமலர்கள்பூத்துக் குலுங்கும் புரசு மரமும் அதற்கு கீழே கங்கா தீர்த்தமும் இருக்கின்றன.அருகில் அரை ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் இருக்கிறது. இக்குளத்தை இந்தகோயிலைக் கட்டிய குலோத்துங்க சோழன் வெட்டியதாக கூறப்படுகிறது. பிரகாரத்தில்பாணலிங்கம் நவகிரக சந்நதி வள்ளலார் மற்றும் பாலசுப்ரமணியர் சந்நதிகளைதரிசித்து ஆலயத்தின் மகாமண்டபத்தினள் நுழைகிறோம்.உள்ளே சூரிய சந்திரர்களையும் அழகிய வேலைபாடுகள் கொண்டகல்துண்களையும் காணலாம். உள் பிரகாரத்தில் சோமாஸ்கந்தருக்கும் உற்சவமூர்த்திகளுக்கும் தனி சந்நதிகள். அடுத்து நால்வர் நாகர்கள் தவக்கோலத்தில்பகீரதன் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் வீரபத்திரர் ஆகியோரின்அற்புத தரிசனம் மனதை குளிர்விக்கிறது.பூண்டி வெண்பாக்கம் திருக்கோயில் ஊன்றீஸ்வரர்பூண்டி நீர்த்தேக்கம் உருவான போது அங்கிருந்து இங்கு வந்து அமர்ந்தஊன்றீஸ்வரர் மின்னொளி நாயகி உச்சிஷ்ட கணபதி ஆறுமுகம் துர்க்கை பைரவர்ஆகியோரை அடுத்தடுத்து தரிசிக்கலாம்.கோஷ்டத்தில் விநாயகர் தட்சிணாமூர்த்தி நாராயணன் பிரம்மாசண்டிகேஸ்வரர் துர்க்கை ஆகியோரின் தரிசனமும் கிடைக்கிறது.பிரகார வலம் வந்து கருவறையை அடைய அங்கே பகீரதனின் நோய் தீர்த்தஈசனின் அற்புத தரிசனம் தீப ஒளியில் மின்னம் கருணைக் கடலானகங்காதரேசுவரரின் லிங்கத் திருமேனியை வாசனை மலர்களாலும் வில்வதளங்களாலும் அலங்கரித்துள்ளனர். அரனின் தரிசனம் அப்படியேமனத்துயரையெல்லாம் துடைத்தெறிகிறது. அந்த ஆறுதலில் அடுத்து அன்னையின்அன்பையும் பெறலாம். தெற்கு முகமாய் நின்றத் திருக்கோலத்தில் காட்சிதரும் அன்னைபங்கஜவல்லிக்கு நான்கு கரங்கள். மேலிருகரத்தில் பாசம் அங்குசம் தாங்கியிருக்கிறார்.கீழிரு கரங்கள் அபய வரத ஹஸ்தம் காட்சி தம்மை நாடி வருவோருக்கெல்லாம்இடர்களிலிருந்து அபயமும் கோரும் வரமும் தந்தருள்கிறாள்.அன்னையை தரிசித்து வெளியே வரும் போது புதியதாக பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ள அறுபத்து மூவரின் அற்புத தரிசனம் கிடைக்கிறது. கங்காதரேசுவரர்கோயில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு தற்போது அழகுற காட்சி தருகிறது. ஆலயவளாக சுவர்களில் சுதைச் சிற்பமாய் அமைந்துள்ள ஈசனின் திருவிளையாடல்காட்சிகளும் ஸ்தல வரலாற்று காட்சிகளும் நடையின் வேகத்தைக் குறைக்கின்றன.அவற்றை நிதானமாக விரிவாக நின்று கவனிக்கச் சொல்கின்றன. கோயிலை விட்டுவரவே மனசில்லை என்பதுதான் அனுபவ உண்மை.தல விருட்சம் இங்குள்ள பெருமாள் புரசை மரத்தடியில் எழுந்தருளியுள்ளார்.புரசை மரத்திற்கு பலாசம் முருக்கு கிஞ்சுகம் என்னும் பெயர்கள் உண்டு.கங்கா தீர்த்தம்இத்திருக்கோயிலின் தீர்த்தம் பகீரத சக்கரவர்த்தியால் கொண்டு வரப்பட்டகங்கா தீர்த்தமாகும். இத்திருக்கோயிலுக்கு வடக்கில் அரை ஏக்கர் பரப்பில் ஒரு குளம்இருக்கிறது. சென்னை மாநகரத்தில் தண்ணீர் கிடைக்காத போது இந்தக்குளத்திலிருந்து ஏழு கிணறுகளிலிருந்து இறைக்கப்பட்ட நீர் சென்னைப் பகுதிகளுக்குவழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.வாருங்களேன் ஒருமுறை அருள்மிகு கங்காதரேசுவரரை தரிசனம் செய்துசெல்லுங்கள