ஆயிரத்து எட்டாவது லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட இறைவனின் ஆணை பகீரதனுக்கு கிடைத்தது. அதன்படி பாரதத்தின் தென்பகுதியில் உள்ள புரசுக் காட்டை அடைந்தான்.வனத்தின் அழகில் மனம் லயித்த பகீரதன் ஒரு பெரிய புரசு மரத்தின் கீழ் லிங்கப் பிரதிஷ்டை செய்தான். அதற்கு அபிஷேகம் செய்ய புனித நீர் வேண்டுமேன பிரார்த்தித்தான். அங்கே கங்கை பிரசன்னமானாள். அந்த கங்கா தீர்த்தத்தைக் கொண்டு அபிஷேகம் செய்து உள்ளமுருக வழிபட்டான். அப்போது ஈசன் தோன்றி பகீரதனின் சாபம் நீக்கி அவனது நோயை மறையச் செய்தருளினார்.பகீரதனின் நோய் தீர்த்த ஈசன் இந்த புரசு வனத்திலேயே கங்காதரேசுவரர் என்ற திருநாமத்தோடு கோயில் கொண்டு இன்றும் தம்மை நாடிவரும்...