தல வரலாறு

வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு தமிழ் நாட்டில் சிறப்பாக போற்றப்படும் ஒன்றாகும் . அனைத்து காரியங்களையும் தங்கு தடையின்றி வெற்றியுடன் முடிப்பதற்கு முதலில் விநாயகரை வழிபட்டு அதன் பின்பு அந்த காரியத்தை துவக்கினால் எடுத்த காரியம் நிறைவேறும் என்பது இறை வழிபாட்டில் தொன்று தொட்டு பழக்கத்தில் உள்ள ஒரு உண்மை ஆகும் .