Arulmigu Mathurakaliamman Temple, Siruvachur - 621113, Perambalur District [TM025213]
×
Temple History
தல பெருமை
தல வரலாறு
சிலப்பதிகாரக் காவிய நாயகி கண்ணகி வரலாறுடன் தொடர்பு படுத்தி இங்கு அம்மனின் வரலாறு செவிவழிச் செய்தியாய் கூறப்பட்டு வருகிறது,
கற்புடைய தெய்வம் கண்ணகி தன் கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டு மனம் பொறாமல் கோபம் கொண்டு மதுரையை எரித்த பின் மன அமைதியின்றி அலைந்து கொண்டிருக்கையில் இத்தலமடைந்து அமைதி கொண்டாள் எனவும், கண்ணகியைக் கொண்ட மதுரையை எரியூட்டிய மதுரை காளியம்மனே இத்தலம் விரும்பு அமர்ந்தாள் எனவும் பெரியோர்கள் கூறுகின்றனர், சிறுவாச்சூர் வழிபாடு தெய்வம் செல்லியம்மன்ஆகும். ஒரு மந்திரவாதி தனது மந்திர வலிமையால் இவ்வம்மையைக் கட்டுபடுத்தித் தீய செயல்களுக்காக பயன்படுத்தி வந்துள்ளான். அன்னை மதுரை காளியம்மன் இத்தலத்திற்கு ஒரு வெள்ளிக்கிமை இரவு வந்து சேர்ந்தபோது செல்லியம்மனுடன் இரவு தங்குவதற்கு...தல வரலாறு
சிலப்பதிகாரக் காவிய நாயகி கண்ணகி வரலாறுடன் தொடர்பு படுத்தி இங்கு அம்மனின் வரலாறு செவிவழிச் செய்தியாய் கூறப்பட்டு வருகிறது,
கற்புடைய தெய்வம் கண்ணகி தன் கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டு மனம் பொறாமல் கோபம் கொண்டு மதுரையை எரித்த பின் மன அமைதியின்றி அலைந்து கொண்டிருக்கையில் இத்தலமடைந்து அமைதி கொண்டாள் எனவும், கண்ணகியைக் கொண்ட மதுரையை எரியூட்டிய மதுரை காளியம்மனே இத்தலம் விரும்பு அமர்ந்தாள் எனவும் பெரியோர்கள் கூறுகின்றனர், சிறுவாச்சூர் வழிபாடு தெய்வம் செல்லியம்மன்ஆகும். ஒரு மந்திரவாதி தனது மந்திர வலிமையால் இவ்வம்மையைக் கட்டுபடுத்தித் தீய செயல்களுக்காக பயன்படுத்தி வந்துள்ளான். அன்னை மதுரை காளியம்மன் இத்தலத்திற்கு ஒரு வெள்ளிக்கிமை இரவு வந்து சேர்ந்தபோது செல்லியம்மனுடன் இரவு தங்குவதற்கு இடம் கேட்க செல்லியம்மனோ தான் ஒரு மந்திரவாதியின் பிடியில் உள்ளதாகவும் அவன் தன் மந்திரவலிமையால் தன்னை தொல்லைப் படுத்தும் மந்திரவாதி பற்றிக் கூறிய போது மதுரை காளியம்மன் தான் அதற்கு தக்க வழி செய்வதாக கூறி தங்கி வழக்கப்படி வந்த மந்திரவாதியை அன்னை மதுரைகாளி எதிர் கொண்டு அழித்து விட செல்லியம்மன் அன்னையின் திறன் கண்டு இனி அவளே சிறுவாச்சூர் ஆலயத்திலிருந்து அடியார்கட்கு அருள் பாலித்த வர வேண்டும் என வேண்டி, தான் அருகிலிருக்கும், பெரியசாமி மலைக்கு சென்று விடுவதாகவும் ஆனால் கோயிலில் எப்போதும் தனக்கு முதல் மரியாதை வேண்டு மெனவும் கூற, மதுரை காளியம்மனும் அதற்கு ஒப்புக் கொண்டு ஆலயத்திலே அமர செல்லியம்மன் பெரியசாமி மலைக்கு சென்று கோயில் கொண்டுவிடுவதாகவும், சிறுவாச்சூருக்கு வெள்ளிக்கிழமை வந்த மதுரை காளியம்மன் பக்தர்களுக்கு திங்கள் கிழமை காட்சி தருவதாகவும், எனவே தான் சிறுவாச்சூர் ஆலயம் வெள்ளிக்கிழமை, திங்கள் கிழமை மட்டும் திறந்து புஜை செய்யப்படுவதாகவும் ஆன்றோர்கள் செவிவழிச் செய்தியாக இந்த அரிய வரலாற்றை தெரிவித்துள்ளனர். இந்த நாட்கள் தவிர ஆலய சிறப்புத் திருநாட்கள் சிலவற்றிலும் ஆலயம் திறந்து பூஜை செய்யப்பட்டு வருகிறது மற்ற நாட்களில் மதுரகாளியம்மனும், செல்லியம்மனுடன் பெரியசாமி மலையில் தங்குவதாக ஐதீகம் உள்ளது. மதுரை காளியம்மன் என்ற திருப்பெயரே பின்னாட்களில் மருவி மதுரகாளியம்மனாக வந்ததாக் கூறுவார்கள். சினங்கொண்டு வந்த மதுரகாளியம்மன் இங்கு வந்து அமைதியுற்றுப் பக்தர்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அருளுவதாலும், மதுரகாளியம்மன் ( மதுரம் / இனிமை) என்ற பெயர் பெற்றாள் என்பதும் பொருத்தமுடையதே ஆகும், செல்லியம்மன் தனக்கு முதல் மரியாதை தர வேண்டுமென்று கேட்டதற்கு ஏற்ப பூஜையின் போது தீபாராதனை கட்டுகையில் முதலில் மலையை நோக்கி மேலே தீபாராதன காட்டி விட்டுதான் பின்னர் மதுரகாளியம்மனுக்குத் தீபாராதனை காட்டும் வழக்கம் உள்ளது, இது தொண்றுதொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.