அருள்மிகு சுந்தராஜப்பெருமாள் திருக்கோயில், Nangavaram - 639110, கரூர் .
Arulmigu Sundarrajaperumal Temple, Nangavaram - 639110, Karur District [TM025324]
×
Temple History
தல வரலாறு
நங்கவரம் திருச்சி கரூர் தேசீய நெடுஞ்சாலையில் பெருகமணியிலிருந்து தெற்கே பிரியும் நச்சலூர் சாலையில் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அழகிய கிராமம் ஆகும்.
இக்கிராமத்தில் ்ரீ சுந்தரேஸ்வரர் என அழைக்கப்படும் ஒரு சிவன் திருக்கோயில், ்ரீ சுந்தரராஜபெருமாள் என அழைக்கப்படும் ஒரு விஷ்ணு திருக்கோயில், ்ரீ சாத்தாயி அம்மன் என அழைக்கப்படும் ஒரு பிடாரி திருக்கோயில் என மூன்று திருக்கோயில்கள் அமைந்துள்ளன. இம்மூன்று திருக்கோயில்களும் சம காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.
்ரீ சுந்தரராஜபெருமாள் கோயில் சுமார் 1260 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாநகரை ஆண்டு வந்த திரு.வல்லபபாண்டியன் என்ற பாண்டிய மன்னனால் புத்திர பாக்கியம் வேண்டி கட்டப்பட்ட ஏழு சுந்தர்ராஜ பெருமாள் கோயில்களில் இதுவும் ஒன்று. அது சமயம் இத்திருக்கோயில் திருக்குறுங்குடி ஆழ்வான் கோயில்...நங்கவரம் திருச்சி கரூர் தேசீய நெடுஞ்சாலையில் பெருகமணியிலிருந்து தெற்கே பிரியும் நச்சலூர் சாலையில் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அழகிய கிராமம் ஆகும்.
இக்கிராமத்தில் ்ரீ சுந்தரேஸ்வரர் என அழைக்கப்படும் ஒரு சிவன் திருக்கோயில், ்ரீ சுந்தரராஜபெருமாள் என அழைக்கப்படும் ஒரு விஷ்ணு திருக்கோயில், ்ரீ சாத்தாயி அம்மன் என அழைக்கப்படும் ஒரு பிடாரி திருக்கோயில் என மூன்று திருக்கோயில்கள் அமைந்துள்ளன. இம்மூன்று திருக்கோயில்களும் சம காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.
்ரீ சுந்தரராஜபெருமாள் கோயில் சுமார் 1260 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாநகரை ஆண்டு வந்த திரு.வல்லபபாண்டியன் என்ற பாண்டிய மன்னனால் புத்திர பாக்கியம் வேண்டி கட்டப்பட்ட ஏழு சுந்தர்ராஜ பெருமாள் கோயில்களில் இதுவும் ஒன்று. அது சமயம் இத்திருக்கோயில் திருக்குறுங்குடி ஆழ்வான் கோயில் என அழைக்கப்பட்டு வந்தது என்பது ்ரீரங்கம் கல்வெட்டு எண் 98 ...210 1951-52 ன் மூலம் அறியப்படுகிறது.
பின்னர் முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் திருப்பணி மேற்கொண்ட சமயத்தில் நான்கு கல்வெட்டுகள் ... 341, 342, 343 345 1903 பதிக்கப்பட்டு அவை மூலம் கோயிலுக்கு ஏற்படுத்தப்பட்ட மான்யங்கள், நிமந்தனங்கள், ஊருக்கு பொதுவில் பாசனத்திற்கு வெட்டப்பட்ட ஏரி, அதை பராமரிக்க தேவையான வழிமுறைகள் மற்றும் ஆகும் சிலவினங்களுக்கு மான்யம் ஆகியவை தமிழிலும் கிரந்த எழுத்துக்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அவர் காலத்தில் இந்த ஊருக்கு அவருடைய மூதாதையரான திரு.அரிஞ்சிகை மன்னன் பெயரையும், நான்கு வேதங்களில் தேர்ச்சி பெற்ற அந்தணர்கள் நிறைந்திருந்ததாலும், சோழர்கள் தலைநகரமாக விளங்கிய உறையூரையும் சேர்த்து உறையூர் கூற்றத்து அரிஞ்சிகை சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்படலாயிற்று. மேலும் சோழகுல நங்கைக்கு வரம் அருளியதால் நங்கவரம் என்றும், ்ரீரங்கம் ்ரீ ரெங்கநாதஸ்வாமிக்கு மன்னர்களால் மானியமாக அளிக்கப்பட்ட 268 கிராமங்களில் இதுவும் ஒன்றான படியால் ரங்கபுரம் எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. தவிர ஆதிமூல சமுத்திரம் என்றும் பிரமதேய சதுர்வேதி மங்கலம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படப்பட்டுள்ளது.
சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் இந்த கிராமம் முழுவதும் ஒரு சபையோரால் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது. எந்த விதமான பிரச்சினைகளும் இந்த திருக்குறுங்குடி ஆழ்வான் கோயிலில் தற்கால ்ரீ சுந்தர்ராஜ பெருமாள் கோயில் சபையோர் கூடி முடிவு செய்வது வழக்கமாக இருந்துள்ளது.
்ரீ ரெங்கநாதஸ்வாமிக்கு சொந்தமான கிராமமாக இருந்ததால் அக்கோயிலில் மணியக்காரராக நிர்வாகம் செய்து வந்தவரும் ்ரீ இராமனுஜரின் பிரதம சீடருமான ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிக்கும் அவரது வம்சத்தில் வந்தவர்களுக்கும் இந்த கிராம நிர்வாகத்தில் பெறும் பங்கு இருந்துள்ளது. இன்றைக்கும் அவர் வழி வந்தவர்கள்தான் இத்திருக்கோயில் முதல் தீர்த்தக்காரர்களாக கருதப்படுகிறார்கள்.
திருக்கோயிலின் கட்டமைப்பு
இத்திருக்கோயில் கடந்த சர்வஜித் ஆண்டு தை மாதம் 18 ம் நாள் 01-02-2008 அன்று பாலாலயம் செய்விக்கப்பட்டு கிராம பொதுமக்கள் ஒத்துழைப்புடன் உபயதாரர் திருப்பணியாக ஆரம்பித்து, விரோதி வருடம் ஆனி மாதம் 15 ம் நாள் 29-06-2009 அன்று கட்டமைப்பில் சிலபல மாற்றங்களுடன் கட்டிமுடிக்கப்பட்டு, கும்பகோணம் திரு சேஷாத்ரி பட்டாச்சாரியார் தலைமையில் ்ரீபாஞ்சராத்ர ஆகம முறைப்படி தென்னாச்சார்ய சம்ப்ரதாயத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருக்கோயிலின் சிறப்புகள்
புத்திர பாக்கியம் வேண்டி திரு வல்லபபாண்டியனால் அமைக்கப்பட்ட இத்திருக்கோயில் எம்பெருமான் கல்யாண கோலத்தில் தேவிமார்களுடன் நின்ற திருக்கோலத்தில் அவரை நாடிவரும் பக்தர்களுக்கு திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேற்றை அளிக்கவும் தயாராக காத்துக்கொண்டிருக்கிறார். தேவியர் இருவருக்கும் மஞ்சள் மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வழிபட்டால் மேற்படி தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
திருக்கோயிலில் நடைபெறும் உத்ஸவங்கள்
மாத உத்ஸவங்கள்
ஏகாதசி - மாதத்தில் இரண்டு ஏகாதசியன்றும் மூலவருக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெறுகிறது
திருவாதிரை நட்சத்திரத்தன்று - எம்பெருமானார் உடையவர் மூலவர்,உத்ஸவர் இருவருக்கும் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
விசாகம் நட்சத்திரத்தில் - நம்மாழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
மூலம் நட்சத்திரத்தில் - மூன்று ஆஞ்சனேயர்கள் மற்றும் மணவாள மாமுனிகள் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
பூராடம் நட்சத்திரத்தில் விஷ்வக்ஸேநர் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
திருவோணம் நட்சத்திரத்தில் ்ரீ சுந்தர்ராஜ பெருமாள் உத்ஸவ மூர்த்திக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.
வருட உத்ஸவங்கள்
சித்திரை மாதம்
சித்ரா பௌர்ணமி நாளில் விசேஷ திருமஞ்சனம் நடைபெறுகிறது.
வைகாசி மாதம்
விசாகத்தன்று ்ரீ சுந்தரராஜபெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது.
ஆனி மாதம்
ஆனிக்கேட்டையன்று
ஜ்யேஷ்டாபிஷேகம் எனும் விசேஷ பெரிய திருமஞ்சனம் நடைபெறுகிறது.
ஆவணி மாதம்
அவிட்டம் நட்சத்திரத்தில்
திரு பவித்ரோத்ஸவம் கொண்டாடப்படுகிறது. ஜென்மாஷ்டமி என்னும் ்ரீஜெயந்தி அன்று உத்ஸவர் ்ரீ கிருஷ்ணன் அலங்காரத்தில் திருக்கோயில் வளாகத்திற்குள் புறப்பாடு கண்டருளி உரியடி விழாவும் சிறப்பாக நடைபெறும்.
புரட்டாசி மாதம் நவராத்திரி உத்ஸவமும் விஜயதசமி அன்று குதிரை வாகனத்தில் புறப்பட்டு சிவன்கோயில் வளாகத்தில் அம்பு போடுதல் மற்றும் திருவீதி உலா நடைபெறுகிறது.
ஐப்பசி மாதம் தீபாவளிக்கு விசேஷ அலங்காரம் நடைபெறுகிறது.
கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை அன்று தீப அலங்காரமும் உத்ஸவர் கோயில் வளாகத்தில் புறப்பாடு கண்டருளி சொக்கப்பனை கொளுத்துதலும் நடைபெறுகிறது.
மார்கழி மாதம் முழுவதும் விடியலில் திருப்பாவை சாற்றுமுறை மற்றும் வைகுண்ட ஏகாதசி உத்ஸவமும் கொண்டாடப்படுகிறது.வைகுண்ட ஏகாதசி அன்று உத்ஸவர் ்ரீதேவி பூதேவி ஸகிதம் திருச்சிவிகையில் திரு வீதி உலா நடைபெறுகிறது.
தை மாதம் மகர ஸங்கிராந்தி அன்று விசேஷ பூஜை மற்றும் அலங்காரத்தில் சேவை நடைபெறுகிறது.
பங்குனி மாதத்தில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.