நங்கவரம் திருச்சி கரூர் தேசீய நெடுஞ்சாலையில் பெருகமணியிலிருந்து தெற்கே பிரியும் நச்சலூர் சாலையில் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அழகிய கிராமம் ஆகும். இக்கிராமத்தில் ்ரீ சுந்தரேஸ்வரர் என அழைக்கப்படும் ஒரு சிவன் திருக்கோயில், ்ரீ சுந்தரராஜபெருமாள் என அழைக்கப்படும் ஒரு விஷ்ணு திருக்கோயில், ்ரீ சாத்தாயி அம்மன் என அழைக்கப்படும் ஒரு பிடாரி திருக்கோயில் என மூன்று திருக்கோயில்கள் அமைந்துள்ளன. இம்மூன்று திருக்கோயில்களும் சம காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. ்ரீ சுந்தரராஜபெருமாள் கோயில் சுமார் 1260 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாநகரை ஆண்டு வந்த திரு.வல்லபபாண்டியன் என்ற பாண்டிய மன்னனால் புத்திர பாக்கியம் வேண்டி கட்டப்பட்ட ஏழு சுந்தர்ராஜ பெருமாள் கோயில்களில் இதுவும் ஒன்று. அது சமயம் இத்திருக்கோயில் திருக்குறுங்குடி ஆழ்வான் கோயில்...