தல வரலாறு
அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோயில் கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், குளித்தலை டவுன் ஹால் தெருவில் காவிரி தென்கரையில் நுழைவாயில் கிழக்கு நோக்கியும் பிரதான கடவுளாக நீலமேகப்பெருமாள், கமலநாயகி தாயார், ஆண்டாள் சன்னதி ஆகியவைகள் தனிதனியே அமைந்துள்ளது. இதில் நீலமேகப்பெருமாள் முக்கிய தெய்வமாகும். இத்திருக்கோயில் ஐயங்கார் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு குல தெய்வமாக விளங்குகின்றது. இத்திருக்கோயிலுக்கு நிலங்கள் மற்றும் உண்டியல் வருமானம் உண்டு. இத்திருக்கோயிலானது பராக்கிரம பாண்டியருடைய மகனான வீரபண்டியனால் செங்கல் கோவிலாக இருந்து பின்பு கருங்கல் கொண்டு பணி செய்யப்பட்டது.