தல வரலாறு
புதுக்கோட்டை தேவஸ்தான 223 திருக்கோயில்களில் வடவாளம் அருள்மிகு கலியுக மெய்ய ஐயனார் திருக்கோயிலும் ஒன்றாகும். இத்திருக்கோயில் புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இச்சடி கிராமத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு பண்டிதர் பச்சிலை என மூலிகை செடி உள்ளது. மக்களுக்கு சகல வியாதிகளும் பற்சிலையைக் கொடுத்து குணப்படுத்துகின்றனர். இத்திருக்கோயில் தென்புறம் மெய்யர் ஊரணி உள்ளது. இதில் குளித்துவிட்டு மெய்ய ஐயனாரை தரிசனம் செய்து பற்சிலையை உண்டு நற்பலன்கள் பலர் பெறுகின்றனர்.