அருள்மிகு சிவபுரீஸ்வரர் திருக்கோயில், Sivayam, Sathiyamangalam - 639120, கரூர் .
Arulmigu Sivabureeshwarar Temple, Sivayam, Sathiyamangalam - 639120, Karur District [TM026056]
×
Temple History
தல வரலாறு
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், அய்யர்மலைக்கு கிழக்கே 2 கி.மீ. தொலைவில் சிவாயம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது சிவாயம் அருள்மிகு சிவபுரீஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி லிங்க வடிவில் கிழக்கு நோக்கி அருள்பாளிக்கிறார். இவ்வூருக்கு சிவபாதசேகரபுரம் என்ற தொன்மையான பெயரும் உள்ளது. இத்திருக்கோயில் ஆதிசிவாயம் அடுத்து அய்யர்மலை என அழைக்கப்படும் தொன்மையான சிவாலயமாகும்.
திருக்கோயில் அமைப்பு
சிவாயம் அருள்மிகு சிவபுரீஸ்வரர் திருக்கோயில் ராஜகோபுரத்தின் எதிரே 16 கால் மண்டபம் அமைந்துள்ளது. நடுப்பகுதியில் இடதுபுறம் கல்தூணில் விநாயகர் மடியில் ஒரு பெண்ணுடன் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். வலதுபுறம் கல்தூணில் முருகப்பெருமான் நான்கு கரத்துடன் மயில் மீது அமர்ந்து கோலத்தில் காட்சி தருகிறார்.
16 கால் மண்டபத்தின் வெளிப்பகுதி கிழக்கு பக்கம் ...கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், அய்யர்மலைக்கு கிழக்கே 2 கி.மீ. தொலைவில் சிவாயம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது சிவாயம் அருள்மிகு சிவபுரீஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி லிங்க வடிவில் கிழக்கு நோக்கி அருள்பாளிக்கிறார். இவ்வூருக்கு சிவபாதசேகரபுரம் என்ற தொன்மையான பெயரும் உள்ளது. இத்திருக்கோயில் ஆதிசிவாயம் அடுத்து அய்யர்மலை என அழைக்கப்படும் தொன்மையான சிவாலயமாகும்.
திருக்கோயில் அமைப்பு
சிவாயம் அருள்மிகு சிவபுரீஸ்வரர் திருக்கோயில் ராஜகோபுரத்தின் எதிரே 16 கால் மண்டபம் அமைந்துள்ளது. நடுப்பகுதியில் இடதுபுறம் கல்தூணில் விநாயகர் மடியில் ஒரு பெண்ணுடன் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். வலதுபுறம் கல்தூணில் முருகப்பெருமான் நான்கு கரத்துடன் மயில் மீது அமர்ந்து கோலத்தில் காட்சி தருகிறார்.
16 கால் மண்டபத்தின் வெளிப்பகுதி கிழக்கு பக்கம் மண்டபத்தின் மேல் பகுதியில் குரங்கு, பல்லி, படம் எடுத்த ஒரு தலை நாகம், குரங்கு உள்ளது. நான்கு புறங்களிலும் நான்கு திசை நோக்கி நந்தியெம்பெருமான் காட்சி தருகிறார்.
இந்த 16கால் மண்டபத்தில் மார்கழி திருவாதிரை அன்று இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் பெரிய நடராஜர் 16 கல் மண்டபத்தில் எழுந்தருள்வார். நடராஜருக்கும் சிவாகாமி அம்பாளுக்கும் ஊடல் உற்சவம் வெகுசிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.
ராஜகோபுரம்
கிழக்கு நோக்கி 5 நிலை கொண்ட ராஜகோபுரத்துடன் செங்கல் கலசம் உள்ளது. ராஜகோபுர கதவிற்கு ராமாயண கதவு என்று பெயர்.
நூற்றுக்கால் மண்டபம்
ராஜகோபுரத்தை தாண்டி உள்ளே சென்றதும் முற்றுப்பெறாத கல்தூண்கள் உள்ளது. அதனருகிலேயே தெற்கு திசை நோக்கி ஊஞ்சல் மண்டபம் உள்ளது. வருடா வருடம் நடைபெறும் திருவாதிரை நடராஜர் அபிஷேகம், ஆருத்ரா தரிசனம் ஊஞ்சல் மண்டபத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
நடுக்கோபுரம்
இத்திருக்கோயிலின் நடுவே இரண்டு நிலைகளுடன் 5 செப்புக்கலசத்துடன் கோபுரம் உள்ளது.