கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், அய்யர்மலைக்கு கிழக்கே 2 கி.மீ. தொலைவில் சிவாயம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது சிவாயம் அருள்மிகு சிவபுரீஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி கிழக்கு நோக்கி அருள்பாளிக்கிறார். இவ்வூருக்கு சிவபாதசேகரபுரம் என்ற தொன்மையான பெயரும் உள்ளது. இத்திருக்கோயில் ஆதிசிவாயம் அடுத்து அய்யர்மலை என அழைக்கப்படும் தொன்மையான சிவாலயமாகும். இத்திருக்கோயிலல் தூணில் வீற்றிருக்கும் கல்யாணசுந்தரருக்கு திருமணம் செய்து வைத்தால் திருமணம் நடப்பதாக தெரியவருகிறது. மேலும் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் எதுவானாலும் சிவபுரீஸ்வரர் மனதுருகி பிரார்த்திக்கும்போது நடைபெறுவதாக நம்பப்படுகிறது.