நந்தசோழராஜாவுக்கு குழந்தை இல்லாதகுறையைத் தீர்த்து மகாலட்சுமி கமலமலரில் அவதரித்து இவ்விடம் உறைந்த காரணத்தால் திருஉறையூர் என்று பெயர் ஏற்பட்டது. முன்னொரு காலத்தில் இவ்வூரில் ஒரு கோழி யானையைப் போரில் வென்றபடியால் கோழியூர் என்ற பெயரும் ஏற்பட்டது.
நந்த சோழனும் உறையூர் கமலவல்லி நாச்சியாரை அரங்கனுக்கு திருமணம் செய்துவைக்கிறார். மூலஸ்தானத்தில் அழகிய மணவாளன் நின்ற திருக்கோலத்திலும் மூலவர் நாச்சியார் கல்யாண அவசரத்தில் வீற்றிருந்த திருக்கோலத்திலும் விளங்குகிறார். இந்த சந்நிதி ஸ்ரீரங்கம் நம்பெருமாளை நோக்கி வடக்குதிசை பார்த்து அமைந்துள்ளது. சந்நிதி ராஜகோபுரத்தின் மேற்கு பகுதியில் உறையூர் நாச்சியார் கல்யாணத் திருக்கோலத்திலும், கோபுரத்தின் கிழக்குப் பக்கத்தில் கற்பக விருக்ஷத்தின் அடியில் ஸ்ரீரங்கநாதனும் கமலவல்லியும் பாணிக்ரஹணம் செய்துகொண்டு முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு காட்சிதரும் சிற்பங்களையும் இன்றும் காணலாம்.
உறையூர் அருள்மிகு கமலவல்லி...நந்தசோழராஜாவுக்கு குழந்தை இல்லாதகுறையைத் தீர்த்து மகாலட்சுமி கமலமலரில் அவதரித்து இவ்விடம் உறைந்த காரணத்தால் திருஉறையூர் என்று பெயர் ஏற்பட்டது. முன்னொரு காலத்தில் இவ்வூரில் ஒரு கோழி யானையைப் போரில் வென்றபடியால் கோழியூர் என்ற பெயரும் ஏற்பட்டது.
நந்த சோழனும் உறையூர் கமலவல்லி நாச்சியாரை அரங்கனுக்கு திருமணம் செய்துவைக்கிறார். மூலஸ்தானத்தில் அழகிய மணவாளன் நின்ற திருக்கோலத்திலும் மூலவர் நாச்சியார் கல்யாண அவசரத்தில் வீற்றிருந்த திருக்கோலத்திலும் விளங்குகிறார். இந்த சந்நிதி ஸ்ரீரங்கம் நம்பெருமாளை நோக்கி வடக்குதிசை பார்த்து அமைந்துள்ளது. சந்நிதி ராஜகோபுரத்தின் மேற்கு பகுதியில் உறையூர் நாச்சியார் கல்யாணத் திருக்கோலத்திலும், கோபுரத்தின் கிழக்குப் பக்கத்தில் கற்பக விருக்ஷத்தின் அடியில் ஸ்ரீரங்கநாதனும் கமலவல்லியும் பாணிக்ரஹணம் செய்துகொண்டு முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு காட்சிதரும் சிற்பங்களையும் இன்றும் காணலாம்.
உறையூர் அருள்மிகு கமலவல்லி நாச்சியாரின் திருநக்ஷத்திரம் ஆயில்யம் ஆகும். பங்குனிமாதம் ஆயில்யத்தில் ஸ்ரீரங்கநாதர் உறையூர் எழுந்தருளி பெருமாளும், தாயாரும் ஏக சிம்மாசனத்தில் சேர்த்தியில் காட்சி கொடுக்கிறார்கள். ஆயில்ய நக்ஷத்திரத்தில் பிறந்த கன்னிகைகளுக்கு விவாஹத்தை தாயார் அருள்பாலிக்கிறார். இது ஒரு பிரார்த்தனை தலம். இத்திருக்கோயிலில் சேனை
முதல்வர், கருடன் சந்நிதி, நம்மாழ்வார், திருப்பாணாழ்வார், உடையவர் ஆகியோருக்கு தனி சந்நிதிகள் உள்ளன. உறையூர் தாயாருக்கு கோடை உத்ஸவம், வசந்த உத்ஸவம், ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை, நவராத்திரி உத்ஸவம், ஊஞ்சல் உத்ஸவம், திருஅத்யயன உத்ஸவம் (பரமபதவாசல் திறப்பு), தெப்ப உத்ஸவம் ஆகியவை நடைபெறுகின்றன. தெப்பத்தன்றும், மறுதினம் பந்தக்காட்சியன்றும் தாயார் புஷ்பப் பல்லக்கில் திருவீதி உலா எழுந்தருளுகிறார்.
அழகிய மணவாளனுக்கும், கமலவல்லி நாச்சியாருக்கும் ஸ்ரீரங்கத்தில் உள்ளது போலவே பொங்கல், பெரியவசரம், ஷீரான்னம், வெள்ளிச்சம்பா, அரவணைத் தளிகை முதலியன குறைவின்றி நடைபெற்று வருகிறது.
ஆழ்வார்களில் 11வது ஆழ்வாரான திருப்பாணாழ்வார் இத்தலத்தில் அவதரித்த பெருமையும், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற சிறப்பையும் உறையூர் ஆலயம் பெற்றுள்ளது.