Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கீழன்பில் - 621702, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Mariyamman Templeanbil, Lalgudi, Samayapuram - 621702, Thiruchirappalli District [TM026152]
×
Temple History

தல பெருமை

அன்பில் அருள்மிகு மாரியம்மன் முதலில் சுயம்புவாக அவதரித்து அதன்பின்னர் மூலவர் அம்மன் சுதை வடிவிலும், உத்ஸவர் உலோகத்தாலும் அமையப் பெற்றுள்ளது. அம்பாள் சீதளபரமேச்வரி என்ற திருநாமத்துடன் விளங்குகின்றார். அம்பாள் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் சகோதரி என்றழைக்கப்படுவதுண்டு. இவ்வாலயத்தில் சுயம்பு அம்பாளுக்கு முதலில் அபிஷேகமும், அதன்பின்னர் உத்ஸவருக்கு அபிஷேகமும் நடைபெறுவது வழக்கம். மூலவர் சுதை ஆகையால் அபிஷேகம் கிடையாது. அம்மை மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி அம்பாள் திருச்சுற்றில் உள்ள நீர்த்தொட்டியில் நீர் நிரப்பி அபிஷேக தீர்த்தத்தை அர்ச்சகர் மூலம் உடல் மீது தெளித்துக் கொண்டு குணம்பெற்று வருவது கண்கூடாக நடக்கின்றது. பால்காவடி மற்றும் காவடிகள் அக்னிசட்டி போன்ற வேண்டுதல்களும் இங்கு நடைபெறுவது வழக்கம். கண்நோயால் பாதிக்கப்படுபவர்கள் இங்கு அம்மனிடம்...