Screen Reader Access     A-AA+
அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை - 600005, சென்னை .
Arulmigu Theertha Paleeswarar Temple, Triplicane, Chennai - 600005, Chennai District [TM000298]
×
Temple History

தல வரலாறு

சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ள புராதன தலங்களில் ஒன்று தர்மமிகு.மயிலை கிருஷ்ணம்பேட்டை பகுதியில் முதல் அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் அமைந்துள்ளது. தன்னை வழிபட்ட அகத்திய முனிவர் நோய் தீர அருளியதால் தீர்த்த பாலீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். பல ஆண்டுகளுக்கு முன், மிகவும் பழமைவாய்ந்த இக்கோயில், பல பூஜைகளை தவறாமல் செய்தும் பக்தர்களால் பெரிதும் கவனிக்கப்படாமல் இருந்தது. ஜகத்குரு ஸ்ரீ காம்கோடி பீடாதிபதி பரமாச்சார்ய சுவாமி சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் கோயிலில் முகாமிட்டு கோயிலின் தொன்மை, சிலையின் சிறப்பு குறித்து பக்தர்களுக்கு விளக்கினார். அன்றிலிருந்து இக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக மாறி இன்று சிறிது சிறிதாக திருப்பணிகள் நடைபெற்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது

தல பெருமை

தருமமிகு சென்னையில், கயிலைக்கு ஒப்பான மயிலையில் கற்பகாம்பாள் உடனுறை காபாலீஸ்வரர் ஆலயம் அமைந்த பழம்பெரும் ஷேத்திரங்களில் ஒன்றாகவும், சிவாலயங்களில் தீர்த்த வழி திருவருலான் முதன்மையானது ஆன அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில் மயிலையைச் சார்ந்த கிருஷ்ணாம்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது. தன்னை வழிபட்ட அகத்திய முனிவர் நோய் தீர அருள்பாலித்ததால் தீர்த்தபாலீஸ்வரர் எனும் பெயர் பெற்றதாகவும், முன்னாட்களில் மாசி மக தீர்த்தவாரி திருவிழாவின்போது சமுத்திரதீரத்தில் இவ்வாலய இறையவன்முதன்மையாக தீர்த்தம் பாலித்த பின்னரே மற்ற மயிலையில் உள்ள சிவா ஆலயங்கள் தீர்த்தம் பாலிக்கும் வழக்கம் இருந்ததனால் ஸ்ரீ தீர்த்த பாலீஸ்வரர் எனவும் திருநாமம் பெற்றதாக தெரிய வருகிறது. ஆலயம் மிகவும் பழமை வாய்ந்ததோடு மிகவும் பூஜைகள் குறைவின்றி நடைபெற்று வரினும் பக்தர்களால் பெருமளவில் தரிசியாமல் இருந்த நிலையில் பல்லாண்டுகளுக்கு முன்னர்....