தல வரலாறு
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம், கழுகூர் கிராமத்தில் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 100 ஆண்டுகளுக்கு உட்பட்ட திருக்கோயிலாகும். இந்த கோவிலில் வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை. இத்திருக்கோயிலில் ஒரே ஒரு சன்னதி மட்டுமே உள்ளது. கடவுளின் பெயர் பிரசன்ன வெங்கடாசலபதி என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் பூஜைகள் செய்ய பஞ்சராத்ரா ஆகமம் பின்பற்றப்படுகிறது.