Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஜெனகை மாரியம்மன் திருக்கோயில், சோழவந்தான் - 625214, மதுரை .
Arulmigu Janagai Marriamman Temple, Sholavandan - 625214, Madurai District [TM032079]
×
Temple History

தல வரலாறு

மாரியம்மன் பெயர்க்காரணம் கொண்டு பார்க்குமிடத்து இரு செய்திகள் தெளிவாகின்றன. புராணக்கதையின்படி ஜெனகா புரி ஜெனகன் என்ற பிற்காலப் பாண்டியன் ஆண்டதால் ஜெனகா புரி, இவற்றுள் ஜெனகன் என்ற பாண்டியன் சோழவந்தானை வந்தடைந்து அதற்கு ஜெனகா புரி என்றும், கோவில்களுக்கு முறையே ஜெனகை மாரியம்மன் கோவில் என்றும், ஜெனகை நாராயணப் பெருமாள் கோவில் என்றும் பெயர் சூட்டி இருக்கலாம் என்பது தெளிவாகிறது. அதன்படி, பிற்காலப் பாண்டியனான ஜெனகைப் பாண்டியனின் காலம், பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டு என வைத்துக்கொண்டால் இம்மாரியம்மன் கோவில் அக்காலத்திலேயே இருந்தது மட்டுமன்றிச் சாதாரண நிலையில் இருந்திருக்க வேண்டும். மாரி என்ற கடவுள் பெண் தெய்வவழிபாடும், கொற்றவை வழிபாடும், பிற்காலத்தவை என்று எடுத்துக்கொண்டால் பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகளில் இம்மாரியம்மன் கோவிலும் அவ்வளவு சிறப்படையாமல் இருந்து...