தல வரலாறு

தாடிக்கொம்பு என்பது தெலுங்கு சொல். தாட்டி என்றால் பனைமரம். பனை மரம் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த பகுதியாகும். தெலுங்கில் கூட்டம் என்றால் கும்புலு என்று பொருள். காலப் போக்கில் தாட்டிக்கொம்பு மருவி தாடிக்கொம்பு ஆயிற்று. இத்திருக்கோயில் மதுரை கள்ளழகரின் பிரார்த்தனை ஸ்தலம். இங்கு மண்டூகமாக (தவளை) மாறிய முனிவர் மதுரை கள்ளழகரை நோக்கி தவம் புரிகிறார். அப்போது தாளசூரன் என்ற அசுரன் முனிவரின் தவத்தை இடையூறு செய்கிறார். அப்போது மதுரை கள்ளழகர் தோன்றி தாலசூரனை வதம் செய்கிறார். முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க மதுரை கள்ளழகரே இத்திருக்கோயிலில் சௌந்தரராஜப் பெருமாளாக வாசம் செய்கிறார்