அருள்மிகு சௌந்தராஜ பெருமாள் சன்னதியில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் நின்ற வடிவத்தில் காட்சியளிக்கிறார்கள். மதுரை உள்ள கள்ளழகர் கோவிலோடு இக்கோயிவில் தொடர்புடையதாக கருதப்படுகிறது. கள்ளழகர் பெருமாள் மதுரை வைகை நதிக்கு சென்று அருள்பாலிப்பது போல் சௌந்தராஜ பெருமாள் குடகனாறு ஆற்றில் அருள்பாலிப்பார். இந்நிகழ்வு முனிவர் மடங்குனாரை நினைவு கூறும் விதமாக கொண்டப்படுகிறது. ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்திலும் தீபம் ஏற்றி வழிப்பட்டால் பாவங்களை போக்கும் என நம்பப்படுகிறது. நுணுக்கத்துடன் செதுக்கப்பட்டுள்ள சிலைகள் மற்றும் சிற்பங்கள் இக்கோயிவிலின் சிறப்பு அம்சமாகும். இங்கே உள்ள ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் மக்களின் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதாக நம்பப்படுகிறது. இந்த கோயிலில் காணப்படும் சிற்பங்களில் தசைகள், நரம்புகள், கண்ணிமைகள் போன்றவை நயநுணுக்கத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. காண்போரை கவரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஐந்து நாட்கள் சித்திரை திருவிழாவும்,...