அருள்மிகு வண்டிக்காளியம்மன் திருக்கோயில், வாணிவிலாஸ், திண்டுக்கல் - 624001, திண்டுக்கல் .
Arulmigu Vandikalliamman Temple, Vanivilas, Dindigul - 624001, Dindigul District [TM032159]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயிலில் திண்டுக்கல் நகரில், வாணி விலாஸ் மேட்டில், தாடிக்கொம்பு ரோடு, பழனி ரோடு சந்திக்கும் இடத்தில் அமையப் பெற்றுள்ளது. பல வருடங்களுக்கு முன் வண்டியில் இந்த அம்மனை ஏற்றி வந்ததாகவும், மேற்படி வண்டி இந்த இடத்தில் வரும் போது அச்சு ஒடிந்ததாகவும் இந்த இடத்திலிருந்த வேப்ப மரத்தடியில் அம்மனை இறக்கி வைத்துவிட்டு வண்டியினை பழுது பார்த்து, திரும்ப எடுத்துச் செல்ல முயற்சிக்கும் போது தான் இவ்வேப்ப மரத்தடியில் குடி கொண்டதாகவும் கஷ்டம் நிவர்த்தி வேண்டி வருகை தரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பதாகவும், அம்மன் தெரிவித்து அமர்ந்து விட்டதாகவும் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்திருக்கோயிலில் பங்குனி மாதத்தில் வெகு சிறப்பாக 11 நாட்கள் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. புரட்டாசி மாதத்தில் நவராத்திரி ஒன்பது நாட்களும் சிறப்பு...இத்திருக்கோயிலில் திண்டுக்கல் நகரில், வாணி விலாஸ் மேட்டில், தாடிக்கொம்பு ரோடு, பழனி ரோடு சந்திக்கும் இடத்தில் அமையப் பெற்றுள்ளது. பல வருடங்களுக்கு முன் வண்டியில் இந்த அம்மனை ஏற்றி வந்ததாகவும், மேற்படி வண்டி இந்த இடத்தில் வரும் போது அச்சு ஒடிந்ததாகவும் இந்த இடத்திலிருந்த வேப்ப மரத்தடியில் அம்மனை இறக்கி வைத்துவிட்டு வண்டியினை பழுது பார்த்து, திரும்ப எடுத்துச் செல்ல முயற்சிக்கும் போது தான் இவ்வேப்ப மரத்தடியில் குடி கொண்டதாகவும் கஷ்டம் நிவர்த்தி வேண்டி வருகை தரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பதாகவும், அம்மன் தெரிவித்து அமர்ந்து விட்டதாகவும் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்திருக்கோயிலில் பங்குனி மாதத்தில் வெகு சிறப்பாக 11 நாட்கள் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. புரட்டாசி மாதத்தில் நவராத்திரி ஒன்பது நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அம்மன் கோரைப்பற்களுடன் காட்சி தருவது மிக சிறந்த அம்சமாகும். கோபாவேசத்துடன் வருகை தந்த இந்த அம்மன் வேப்ப மரத்தடியில் கோபம் தணிந்து அமர்ந்ததாக ஐதீகம், இன்றும் இத்திருக்கோயிலின் ஸ்தல விருட்சமாக வேப்ப மரம் இருந்து வருகிறது.
இத்திருக்கோயிலில் பரிவார தெய்வங்களாக விநாயகர், பால முருகன், அங்காள ஈஸ்வரி, கருப்பன சாமி, மதுரை வீரன், சிவன், நவகிரகங்கள் முதலிய கற்சிலா விக்ரகங்கள் வழிப்பாட்டில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில் தமிழ்சாடு அரசு இந்துசமய அறநிலையத்துறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இத்திருக்கோயில் நிர்வாகம் - நிர்வாக அதிகாரி மற்றும் பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இத்திருக்கோயில் தினசரி இரண்டு கால பூஜை நடை பெறுகிறது. திண்டுக்கல் ரயில் நிலையித்திலிருந்து சுமார் 5 கி.மீ. தூரமும், பேருந்து நிலையித்திலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் சேவார்த்திகளுக்கு குடிநீர் வசதி மற்றும் ஓய்வு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
இத்திருக்கோயில் திருப்பணி நடைப்பெற்று நீண்ட காலமாகி விட்டதால் உபயதாரர் மூலம் திருப்பணி செய்ய உரிய நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளன.விரைவில் திருப்பணி முடிந்து குடமுழுக்கு நடைபெற உள்ளது