Screen Reader Access     A-AA+
அருள்மிகு சௌந்தரராஜப்பெருமாள் திருக்கோயில், வடமதுரை - 624802, திண்டுக்கல் .
Arulmigu Soundararaja Perumal Temple, Vadamadurai - 624802, Dindigul District [TM032196]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு சௌந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் திண்டுக்கல் மாநகருக்கு கிழக்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வடமதுரை பேரூராட்சியில் உள்ளது. அருள்மிகு சௌந்தரவல்லி தாயார் உடனுறை சௌந்தரராஜ பெருமாள் ஆக இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள இத்திருக்கோயிலின் காலம் 13 ஆம் நூற்றாண்டு ஆகும். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டம நாயக்கர் மகன் நாயக்கரால் திருப்பணி செய்யப்பட்டதாக கல்வெட்டு ஒன்றின் மூலம் அறிய முடிகிறது. இத்திருக்கோயிலில் 15 அடி உயர பழங்கால சுற்றுச்சுவர் கொண்ட சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள மிகப்பெரிய கோயிலாகும். அருள்மிகு சௌந்தரராஜப்பெருமாள் அருள்மிகு சௌந்தரவல்லி தாயார் தனித்தனியாக சன்னதிகள் சிறப்புடன் கட்டப்பட்டுள்ளன. மேலும் கருடாழ்வார் சன்னதியும் விஷ்ணு துர்க்கை சன்னதியும் சுற்றுப்புறங்களில் அருள்மிகு விஷ்வக்சேனர் சன்னதி அருள்மிகு சக்கரத்தாழ்வார் சன்னதி அருள்மிகு லட்சுமி...