அருள்மிகு பரமசிவம் திருக்கோயில், போடிநாயக்கனூர் - 625513, தேனி .
Arulmigu Paramasivam Temple, Bodinayakanur - 625513, Theni District [TM032283]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயில் பாலகுருசாமி என்ற சிவபக்தர் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு காசி ,ராமேஸ்வரம் போன்ற புண்ணியதலங்களுக்கு சென்றதன் பயனாக அவருக்கு ஆண் குழந்தை பிறந்து அக்குழந்தைக்கு பாலாபிஷேகன் என பெயரிட்டு சிறப்புடன் வளர்த்து வந்தார். சிவ தொண்டையே உயிராக கொண்டிருந்த தனது மகன் இறந்ததை கண்டு மனம் நொந்து கடவுள் இல்லை என்று தனது வீட்டிலிருந்த பூஜை சாமான்களை ஆற்றில் விட முடிவு செய்தார். இந்நிலையில் இரவில் ஒரு கனவு கண்டார்.ஊருக்கு மேற்கே தற்போது திருக்கோயில் அமைந்துள்ள குன்றில் துறவி ஒருவர் இருப்பது போலவும், அவருக்கு அருகில் தன மகன் படுத்திருப்பது போலவும் தெரியவர உடனே அக்குன்றுக்கு சென்று தன் மகனை அழைத்த போது அவன் வர மறுத்துவிடுகிறான். அத்துறவி இவண் என்னிடமே...இத்திருக்கோயில் பாலகுருசாமி என்ற சிவபக்தர் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு காசி ,ராமேஸ்வரம் போன்ற புண்ணியதலங்களுக்கு சென்றதன் பயனாக அவருக்கு ஆண் குழந்தை பிறந்து அக்குழந்தைக்கு பாலாபிஷேகன் என பெயரிட்டு சிறப்புடன் வளர்த்து வந்தார். சிவ தொண்டையே உயிராக கொண்டிருந்த தனது மகன் இறந்ததை கண்டு மனம் நொந்து கடவுள் இல்லை என்று தனது வீட்டிலிருந்த பூஜை சாமான்களை ஆற்றில் விட முடிவு செய்தார். இந்நிலையில் இரவில் ஒரு கனவு கண்டார்.ஊருக்கு மேற்கே தற்போது திருக்கோயில் அமைந்துள்ள குன்றில் துறவி ஒருவர் இருப்பது போலவும், அவருக்கு அருகில் தன மகன் படுத்திருப்பது போலவும் தெரியவர உடனே அக்குன்றுக்கு சென்று தன் மகனை அழைத்த போது அவன் வர மறுத்துவிடுகிறான். அத்துறவி இவண் என்னிடமே இருந்து எனக்கு சேவை செய்யட்டும் உனக்கு வேறு மகன் பிறப்பான் என்கிறார். அதற்கு நீங்கள் யார் என கேட்க அத்துறவி மறைந்து சிவண் .பார்வதி சமேதராக காட்சி தந்தார். அத்துடன் மலையின் தென்மேற்கு பகுதியில் ஜோதி வடிவமாக காட்சியளித்தார். சிவணும் பார்வதியும் காட்சி கொடுத்த இடத்தில் இத்திருக்கோயிலை கட்டினார். அதன் பின்பு சிவண் அருளால் அவருக்கு ஐந்து ஆண்குழந்தைகள் பிறந்ததாக தெரியவருகிறது.